ஸ்ரீ புருஷமங்கை

பாடல் 968
தானதன தந்த தந்தன
தானதன தந்த தந்தன
தானதன தந்த தந்தன ...... தனதான
ஆடல்மத னம்பின் மங்கைய
ராலவிழி யின்பி றங்கொளி
யாரமத லமபு கொங்கையின் ...... மயலாகி
ஆதிகுரு வின்ப தங்களை
நீதியுட னன்பு டன்பணி
யாமல்மன நைந்து நொந்துட ...... லழியாதே
வேடரென நின்ற ஐம்புல
ணாலுகர ணங்க ளின்தொழில்
வேறுபட நின்று ணர்ந்தருள் ...... பெறுமாறென்
வேடைகெட வந்து சிந்தனை
மாயையற வென்று துன்றிய
வேதமுடி வின்ப ரம்பொரு ...... ளருள்வாயே
தாடகையு ரங்க டிந்தொளிர்
மாமுனிம கஞ்சி றந்தொரு
தாழ்வறந டந்து திண்சிலை ...... முறியாவொண்
ஜாநகித னங்க லந்தபின்
ஊரில்மகு டங்க டந்தொரு
தாயர்வ சனஞ்சி றந்தவன் ...... மருகோனே
சேடன்முடி யுங்க லங்கிட
வாடைமுழு தும்ப ரந்தெழ
தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட ...... நடமாடுஞ்
சீர்மயில மஞ்சு துஞ்சிய
சோலைவளர் செம்பொ னுந்திய
ஸ்ரீபுருட மங்கை தங்கிய ...... பெருமாளே.
பாடல் 969
தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
தானதன தந்த தந்த ...... தனதானா
கார்குழல்கு லைந்த லைந்து வார்குழையி சைந்த சைந்து
காதலுறு சிந்தை யுந்து ...... மடமானார்
காமுகர கங்க லங்க போர்மருவ முந்தி வந்த
காழ்கடிய கும்ப தம்ப ...... இருகோடார்
பேர்மருவு மந்தி தந்தி வாரணஅ னங்க னங்க
பேதையர்கள் தங்கள் கண்கள் ...... வலையாலே
பேரறிவு குந்து நொந்து காதலில லைந்த சிந்தை
பீடையற வந்து நின்ற ...... னருள்தாராய்
ஏர்மருவு தண்டை கொண்ட தாளசைய வந்த கந்த
ஏகமயி லங்க துங்க ...... வடிவேலா
ஏமனுமை மைந்த சந்தி சேவலணி கொண்டு அண்டர்
ஈடேறஇ ருந்த செந்தில் ...... நகர்வாழ்வே
தேருகள்மி குந்த சந்தி வீதிகள ணிந்த கெந்த
சீரலர்கு ளுந்து யர்ந்த ...... பொழிலோடே
சேரவெ யிலங்கு துங்க வாவிக ளிசைந்தி ருந்த
ஸ்ரீ புருட மங்கை தங்கு ...... பெருமாளே.
பாடல் 970
தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த ...... தனதான
வேனின்மத னைந்து பாணம்விட நொந்து
வீதிதொறு நின்ற ...... மடவார்பால்
வேளையென வந்து தாளினில் விழுந்து
வேடைகெட நண்பு ...... பலபேசித்
தேனினு மணந்த வாயமுத முண்டு
சீதள தனங்க ...... ளினின்மூழ்கித்
தேடிய தனங்கள் பாழ்பட முயன்று
சேர்கதிய தின்றி ...... யுழல்வேனோ
ஆனிரை துரந்து மாநில மளந்தொ
ராலிலையி லன்று ...... துயில்மாயன்
ஆயர்மனை சென்று பால்தயி ரளைந்த
ஆரண முகுந்தன் ...... மருகோனே
வானவர் புகழ்ந்த கானவர் பயந்த
மானொடு விளங்கு ...... மணிமார்பா
மாமறை முழங்கு ஸ்ரீபுருட மங்கை
மாநக ரமர்ந்த ...... பெருமாளே.