உத்தரமேரூர்

bookmark

பாடல் 714
ராகம் - காபி 
தாளம் - அங்கதாளம் (5 1/2) 
(எடுப்பு - 1/2 தள்ளி) 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2 

தனன தனன தனதான தனன தனன தனதான 
தனன தனன தனதான ...... தனதான 


சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவேர்கள் 
துகரி லிருடி யெழுபேர்கள் ...... சுடர்மூவர் 

சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர் 
தொலைவி லுடுவி னுலகோர்கள் ...... மறையோர்கள் 

அரிய சமய மொருகோடி அமாரர் சரணர் சதகோடி 
அரிய மயனு மொருகொடி ...... யிவர்கூடி 

அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும் 
அறிவு ளறியு மறிவூர ...... அருள்வாயே 

வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக 
மகர சலதி அளறாக ...... முதுசூரும் 

மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக 
மவுலி சிதறி இரைதேடி ...... வருநாய்கள் 

நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத 
நமனும் வெருவி யடிபேண ...... மயிலேறி 

நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு 
நகரி யுறையு மிமையோர்கள் ...... பெருமாளே. 
பாடல் 715 
ராகம் - ஸிந்து பைரவி 
தாளம் - ஆதி - திஸ்ர நடை (12) 

தான தந்த தான தந்த தான தந்த தான தந்த 
தான தந்த தான தந்த ...... தனதான 


தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு 
சொரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான 

தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து 
சோரு மிந்த நோய கன்று ...... துயராற 

ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச 
னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும் 

ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை 
யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ 

வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை 
வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே 

மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து 
வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே 

வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு 
வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே 

வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற 
மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே. 
பாடல் 716 
தானனத் தனதான தானனத் தனதான 
தானனத் தனதான ...... தனதான 


நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி 
நேசமுற் றடியேனு ...... நெறிகெடாய் 

நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி 
நீதியிற் சிவவாழ்வை ...... நினையாதே 

பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடி 
பாடலுற் றிடவேசெய் ...... திடுமோச 

பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதான 
பார்வைசற் றருளோடு ...... பணியாயோ 

ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு 
மாகமப் பொருளோரு ...... மனைவோரும் 

ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு 
மாயிரத் திருநூறு ...... மறையோரும் 

வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக 
வாகுசித் திரதோகை ...... மயிலேறி 

மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேல 
மான்மகட் குளனான ...... பெருமாளே. 
பாடல் 717 
தான தந்தன தத்தா தத்தன 
தான தந்தன தத்தா தத்தன 
தான தந்தன தத்தா தத்தன ...... தனதான 


மாதர் கொங்கையில் வித்தா ரத்திரு 
மார்பி லங்கியல் முத்தா ரத்தினில் 
வாச மென்குழ லிற்சே லைப்பொரும் ...... விழிவேலில் 

மாமை யொன்றும லர்த்தாள் வைப்பினில் 
வாகு வஞ்சியில் மெய்த்தா மத்தினில் 
வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில் ...... மயலாகி 

ஆத ரங்கொடு கெட்டே யிப்படி 
ஆசை யின்கட லுக்கே மெத்தவும் 
ஆகி நின்றுத வித்தே நித்தலும் ...... அலைவேனோ 

ஆறி ரண்டுப ணைத்தோ ளற்புத 
ஆயி ரங்கலை கத்தா மத்திப 
னாயு ழன்றலை கிற்பே னுக்கருள் ...... புரிவாயே 

சாத னங்கொடு தத்தா மெத்தென 
வேந டந்துபொய் பித்தா வுத்தர 
மேதெ னும்படி தற்காய் நிற்பவர் ...... சபையூடே 

தாழ்வில் சுந்தர னைத்தா னொற்றிகொள் 
நீதி தந்திர நற்சார் புற்றருள் 
சால நின்றுச மர்த்தா வெற்றிகொ ...... ளரன்வாழ்வே 

வேத முங்கரி யைச்சூழ் நித்தமும் 
வேள்வி யும்புவி யிற்றா பித்தருள் 
வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ் ...... மறையோர்வாழ் 

மேரு மங்கையி லத்தா வித்தக 
வேலொ டும்படை குத்தா வொற்றிய 
வேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள் ...... பெருமாளே.