ஒரு மச்சமுண்டு

bookmark

காதலி மலைக்குப் புல்லறுக்கச் செல்லுகிறாள். அவன் விறகு வெட்ட அதே பாதையில் செல்லுகிறான். இருவரும் எப்படியோ சேர்ந்து நடக்கிறார்கள். உள்ளத்தின் உவகை பாட்டாக வெளிப்படுகிறது.

ஆண்: 
கல்லருகாம், புல்லருகாம் 
கடலருகாம் பூந்தோட்டம் 
புல்லறுக்கப் போற பிள்ளை-நீ 
பூமுடிஞ்சாலாகாதோ?

பெண்: 
நத்தத்து மேட்டு வழி
நான் போறேன் ஒத்த வழி 
பிச்சிச்சரம் போலே-நீ 
பின்னே வந்தாலாகாதோ?

ஆண்: 
கண்டாங்கிச் சீல கட்டி
கரை வழியே போற புள்ள,-உன் 
கண்டாங்கிச் சீலையிலே-நான் 
வண்டாய்ச் சுழலுதனே 
குளத்திலொரு அல்லியுண்டு 
கூந்தலொரு பாக முண்டு 
இடை சிறுத்த அல்லிக்கு 
இடையில் ஒரு மச்ச முண்டு

வட்டார வழக்கு: புள்ள-பிள்ளை.
சேகரித்தவர்: S.M. கார்க்கி 
இடம்: சிவகிரி
-------------------