கவனம்

தன் சீடர்களில் ஒருவன் தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருப்பதை ஒரு ஜென் துறவி பார்த்து கொண்டிருந்தார். ஒரே வேலையை அவன் அதிக நேரமாக செய்தும் சுத்தம் ஆகாமல் இருந்தது.
ஜென் துறவி அவனை அருகில் அழைத்து ஒரு கதையை கூறலானார். அது, ஒரு முறை ஓர் சிறந்த ஓவியர் அவருடைய திறமையால் ஒரு ஓவியத்தை வரைந்து, பின் அவருடைய சக தோழனிடம் எப்படி இருக்கிறது என்று கேட்டார்.
தோழனும் இது நன்றாக இல்லை என்று கூறினார். மீண்டும் மீண்டும் அந்த ஓவியர் வரைந்தவற்றை சரிசெய்ய, தோழனோ நன்றாக இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தார். அதனால் அந்த ஓவியர் தன் தோழனிடம், நீ போய் எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா! என்று தோழனை அனுப்பி விட்டு, பின்பு அவர் ஓவியத்தில் முழு கவனம் செலுத்தி ஓவியத்தை வரைய ஆரம்பித்தார். தண்ணீர் கொண்டு திரும்பிய தோழன், அந்த ஓவியத்தை கண்டு ஆச்சரியத்துடன் ஓவியம் அழகாக இருக்கிறது என்று சொல்லிப் பாராட்டினான்.
ஆகவே எந்த ஒரு செயலையும் நாம் நம் முழு கவனத்துடன் செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். அதைவிட்டு விட்டு செய்கின்ற செயலை பிறர் பார்கின்றனரே என்று ஒரு பயத்துடன் செய்தால், அந்தச் செயல் ஒரு முழுமையை தராது என்று ஜென் துறவி அந்த சீடனுக்கு கதையின் மூலம் உணர்த்தினார்.