சிவகாசிக் கொள்ளை-4

வந்தது பாரீர் சிவகாசிக் கொள்ளையின்
வன்மையைப் பாரீர்
தந்தது பாரீர் எழுபத்தைந்தாம் ஆண்டு
வளரும் வைகாசி மீ 25-உ
இந்தச் சமாச்சாரம் நாடாக்கமார் கேட்டு
எல்லோரும் ஒன்றாக மீட்டிங்கி பேசி
எழுதினார் கடிதம்-கண்டவுடன் ஏகினார் துரிதம்
வந்தது இங்கிலீஷ் துப்பாக்கிக் குண்டு மருந்துகள்
ஈட்டி சமுதாடு நீட்டும் வல்லாயுதம்
என்னென்ன விதமாய்-பந்தோபஸ்து உன்னிதமாய்
பயங்கரம் இல்லாமல் கூட்டங்கள் கூடி
தெருக்களை நாட்டமாய் மூடி
இல்லம் தோறும் தயார் செய்து இதமாகவேதான்
இன்ன விதமாக நோட்டீஸ் வந்ததென்று
எழுதியும் அர்ச்செண்டாய்
தந்தி கொடுத்தபடி கலெக்டரும் வந்தார்
போலீஸ்காரரும் கட்டாயமாய் இருந்தார் பின்னும்
எங்கெங் கிருந்துமே நாடார்களில் சிலர்
ஏகிச் சிவகாசி நாடார்க் குதவியாய்
வந்துமிருந்தார்-பொருள் சிலர் தந்துமிருந்தார்
இன்னும் ஏராளமாகவே சண்டை செய்ய துணிந்து
இருக்கும் நாடார்கள் ரகசியம்
எல்லாம் எண்ணியறிந்தார்
தந்திரங்களெல்லா மறிந்தார் உடனே
உடனே இருக்கின்ற பேர்களுக்குத்
தைரியம் சொல்லியே
ஏகமாக வெண்டர் பிள்ளை பட்டணம் சென்று
நாட்டனைப் பிடித்தார்-
ரிக்காடுகள் நோட்டுடன் முடித்தார்
இங்கு ஏலேல சிங்கன் வெள்ளையத் தேவரும்
இன்னும் சிலபேர்கள் சண்டைக்கு
எத்தனம் செய்யத் துணிந்து
திருநெல்வேலி ஜில்லா முழுமை மலையாளம்
சேர்ந்த ஆறாம் புளிக்கோட்டைவாசல் முதல்
நடந்ததே கொள்ளை சனங்களுக்குத்
தொடர்ந்ததே சள்ளை
தூத்துக்குடி மலையாளம் திருநெல்வேலி
சுரண்டைதே நீர்க்குளம் சாத்தூர் வட்டகை முதல்
அகிலாண்ட புரம் ஒட்ட நத்தம்
அருங்குளம் பிறவும்-பின்னும்
சிவனணஞ்சபுரம்-நயினா பட்டிக் கிழங்கு
சேர்ந்த நாகலா புரம் கடலை வரதம் பட்டி
இத்தனை ஊரும் தெரியாமல்
இனம் சொல்லா ஊரும்
ஐயோ! எங்கும் கொள்ளைகள் ஐயோ
எந்தன் பிள்ளைகள் ஐயோ
என்று கூக்குரலோடு நின்று பரதவித்து
ஐயோ என்பாரும் கடவுளை நொந்தார் எல்லோரும்
அல்லாவை வேண்டி சலாபம் செய்து
நெல்லையப்பர் கடை வழி
விசுவ நாதர் கோயில் சன்னதிக்கு வர
விளைந்ததே கூட்டம்
பயந்து விலகினார் ஓட்டம்
அப்போது
வீரன் குடிமகன் சக்கணனும் அந்த
வேளையிலே ரதம் ஏறி
ஒய்யாரமாய் வேட்டை எழுப்ப
முத்து மகன் கூட்டம் குளப்ப
அந்நேரம் வேகமாக
பின் வந்து வழி கூடி
வந்தார் எல்லோரும்-கடவுளை
நொந்தார் எல்லோரும்
வட்டார வழக்கு: நாடாக்கமார்-நாடார்கள்; நாட்டன்-Norton என்னும் வழக்கறிஞர்.
குறிப்பு: இது இரு கட்சியாரையும்-நாடார், மேல் சாதியாரையும் சேராத நடுநிலையார் பாடல்.
------------