திருக்குற்றாலம்

bookmark

பாடல் 975
தானத்தத் தானன தானன 
தானத்தத் தானன தானன 
தானத்தத் தானன தானன ...... தனதான 


ஏடுக்கொத் தாரலர் வார்குழ 
லாடப்பட் டாடைநி லாவிய 
ஏதப்பொற் றோள்மிசை மூடிய ...... கரமாதர் 

ஏதத்தைப் பேசுப ணாளிகள் 
வீசத்துக் காசைகொ டாடிகள் 
ஏறிட்டிட் டேணியை வீழ்விடு ...... முழுமாயர் 

ம¨டொக்கக் கூடிய காமுகர் 
மூழ்குற்றுக் காயமொ டேவரு 
வாயுப்புற் சூலைவி யாதிக ...... ளிவைமேலாய் 

மாசுற்றுப் பாசம் விடாசம 
னூர்புக்குப் பாழ்நர கேவிழு 
மாயத்தைச் சீவியு னாதர ...... வருள்வாயே 

தாடுட்டுட் டூடுடு டீடிமி 
டூடுட்டுட் டூடுடு டாடமி 
தானத்தத் தானத னாவென ...... வெகுபேரி 

தானொத்தப் பூதப சாசுகள் 
வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள் 
சாகப்பொற் றோகையி லேறிய ...... சதிரோனே 

கூடற்கச் சாலைசி ராமலை 
காவைப்பொற் காழிவெ ளூர்திகழ் 
கோடைக்கச் சூர்கரு வூரிலு ...... முயர்வான 

கோதிற்பத் தாரொடு மாதவ 
சீலச்சித் தாதியர் சூழ்தரு 
கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே. 
பாடல் 976 
ராகம் - ஸ்ரீ ரஞ்சனி 
தாளம் - திஸ்ர த்ருபுடை 

தானத்தத் தானன தானன 
தானத்தத் தானன தானன 
தானத்தத் தானன தானன ...... தனதான 


வேதத்திற் கேள்வி யிலாதது 
போதத்திற் காண வொணாதது 
வீசத்திற் றூர மிலாதது ...... கதியாளர் 

வீதித்துத் தேடரி தானது 
ஆதித்தற் காய வோணாதது 
வேகெத்துத் தீயில் வெகாதது ...... சுடர்கானம் 

வாதத்துக் கேயவி யாதது 
காதத்திற் பூவிய லானது 
வாசத்திற் பேரொளி யானது ...... மத்முறு 

மாயத்திற் காய மதாசல 
தீதர்க்குத் தூரம தாகிய 
வாழ்வைச்சற் காரம தாஇனி ...... யருள்வாயே 

கதத்திற் காயம தாகும 
தீதித்தித் தீதிது தீதென 
காதற்பட் டோதியு மேவிடு ...... கதிகாணார் 

காணப்பட் டேகொடு நோய்கொடு 
வாதைப்பட் டேமதி தீதக 
லாமற்கெட் டேதடு மாறிட ...... அடுவோனே 

கோதைப்பித் தாயொரு வேடுவ 
ரூபைப்பெற் றேவன வேடுவர் 
கூடத்துக் கேகுடி யாய்வரு ...... முருகோனே 

கோதிற்பத் தாரொடு மாதவ 
சீலச்சித் தாதியர் சூழ்தரு 
கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே. 
பாடல் 977
தத்தான தனத்த தத்தன 
தத்தான தனத்த தத்தன 
தத்தான தனத்த தத்தன ...... தனதான 


முத்தோலை தனைக்கி ழித்தயி 
லைப்போரிக லிச்சி வத்துமு 
கத்தாமரை யிற்செ ருக்கிடும் ...... விழிமானார் 

முற்றாதிள கிப்ப ணைத்தணி 
கச்சார மறுத்த நித்தில 
முத்தார மழுத்து கிர்க்குறி ...... யதனாலே 

வித்தார கவித்தி றத்தினர் 
பட்டோலை நிகர்த்தி ணைத்தெழு 
வெற்பான தனத்தில் நித்தலு ...... முழல்வேனோ 

மெய்த்தேவர் துதித்தி டத்தரு 
பொற்பர்கம லப்ப தத்தினை 
மெய்ப்பாக வழுத்தி டக்ருபை ...... புரிவாயே 

பத்தான முடித்த லைக்குவ 
டிற்றாட வரக்க ருக்கிறை 
பட்டாவி விடச்செ யித்தவன் ...... மருகோனே 

பற்பாசன்மி கைச்சி ரத்தைய 
றுத்தாதவ னைச்சி னத்துறு 
பற்போகவு டைத்த தற்பரன் ...... மகிழ்வோனே 

கொத்தார்கத லிப்ப ழக்குலை 
வித்தாரவ ருக்கை யிற்சுளை 
கொத்தோடுதி ரக்கு தித்தெழு ...... கயலாரங் 

கொட்டாசுழி யிற்கொ ழித்தெறி 
சிற்றாறுத னிற்க ளித்திடு 
குற்றாலரி டத்தி லுற்றருள் ...... பெருமாளே.