பரசுராமப் படலம் - 1389

இராமன் தயரதன் துயரைத் தீர்த்தல்
இராமன் தந்தையைத் தொழுது துயர்போக்கல்
1389.
அழிந்து. அவன் போனபின்.
அமலன். ஐ-உணர்வு
ஒழிந்து. தன் உயிர் உலைந்து
உருகு தாதையை.
பொழிந்த பேர் அன்பினால்.
தொழுது. முன்பு புக்கு.
இழிந்த வான் துயர்க் கடல்
கரைநின்று ஏற்றினான்.
அழிந்து அவன் போனபின் - அப் பரசுராமன் (தன் செருக்கும்
தவமும்) சிதைந்து போன பின்பு: அமலன் - குற்றம் அற்ற
இராமபிரான்; ஐ-உணர்வு ஒழிந்து - ஐம்புல உணர்வும் நீங்கி; தன்
உயிர் குலைந்து - தன் உயிர் நிலை குலைந்து; உருகு தாதையை -
(தன்னை) எண்ணி மனம் உருகும் தந்தையாகிய தசரதனை; பொழிந்த
பேரன்பினால் - பொங்கி வழிகின்ற அன்பினால்; தொழுது - வணங்கி;
முன்பு புக்கு - அவன் கண் எதிரே சென்று; இழிந்த வான் துயர்க்
கடல் - அவன் இறங்கி அமிழ்ந்திருந்த பெரிய துயர்க்கடலிலிருந்து;
கரை நின்று ஏற்றினான் - கரை ஏற்றினான்.
தசரதன் மண்ணில் கிடக்கவில்லை வரம்பற்ற துக்க வாரிதியுள்
மூழ்கிக் கிடந்தான் என்பார். “இழிந்த வான் துயர்க்கடல்” என்றார்.
துக்கசாகரத்தில் மூழ்கிக்கிடக்கும் எண்ணற்ற உயிர்களைப் பிறவிக்
கடலிலிருந்து கரையேற்ற வந்துள்ள பெருமான். தன் தந்தையையும்
துயரக் கடலிலிருந்து மீட்டான் என்பார். “துயர்க் கடல் கரை நின்று
ஏற்றினான்” என்றார். தனக்காக உயிர் குலைந்து. உருகிக் கிடக்கிற
தந்தை நிலைகண்டு. பெருமான் தானும் உருகி. அன்பு பொங்கி
வழியத் தொழுது. தந்தையைத் துக்க சாகரத்திலிருந்து கரையேற்றி ஒரு
மகனுக்கு இலக்கணமாயினான் என்க. 41