பூட்டிக் கிடக்குதுங்கோ

bookmark

தந்தை இறந்த சில ஆண்டுகளில் தாயும் இறந்து போனாள். தாயின் காலத்திற்குப் பிறகு அவ்வீட்டில் வாழ ஆண் பிள்ளைகள் இல்லை. வருங்காலத்தில் இவ்வீட்டைத் தேடிப்போனால் அது பூட்டிக் கிடக்குமே என்றெண்ணி வருத்தத்தோடு ஒப்பாரி சொல்லுகிறாள்.

தங்கச் சரகு கட்டி
தங்கச் சம்பா நெல்லெடுத்து
தாய் வீடு போலா மிண்ணும்
தங்கமலை தாண்டி
தவணக் கொடி ஆறு தாண்டி
தடம்புடிச்சி போய் பார்த்தேன்
சாத்தி கெடுக்குதுங்கோ
சஞ்சல மாகுதுங்கோ
சிந்திட்டன் கண்ணீரை
திரும்பினன் தென் மதுரை
பொன்னு சரகு சட்டி
புது சம்பா நெல்லெடுத்து
பொறந்த ஏடு போலா மிண்ணும்
பொன்னு மலை தாண்டி
பொற் கொடி ஆறு தாண்டி
போய்ப் பார்த்தேன் தாய் வீட்டை
பூட்டிக் கிடக்குதுங்கோ
பொங்கார மாகுதுங்கோ
வடிச்சிட்டன் கண்ணீரை
வந்திட்டன் தென் மதுரை

சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அருர், சேலம்.
-------------