மாயையின் உபதேசம்

bookmark

சிவபெருமான் அருளால் மைந்தர் மூவரும் பெற்ற பெருவரங்களையும் வலிமையையும் மனத்தினுள்ளே நினைத்து மிகுந்த அன்புடன் மாயை வானத்தில் வந்து தோன்றினாள். தாயைக் கண்ட சூரன், தம்பியரோடும், தங்கையாகிய அசமுகியோடும் சென்று அன்புடன் வணங்கினான். அப்போது மாயை அவரைப் பெற்ற ஞான்றினும் பெருமகிழ்ச்சியுற்று, ஆசி கூறினாள்; "மைந்தர்காள்! நீர் வேள்வியாற்றிய விதமும், ஈசன் நுமக்கு அளித்த வரமும் கேள்வியுற்றேன்; உம்மைக் காண விருப்புற்று வந்தேன். இந்திரன் முதலிய தேவரையெல்லாம் உமது வலிமையால் வெல்வீராக! வெற்றி பெற்ற பின்னர் எல்லா வுலகங்களையும் ஆண்டுகொண்டு நிலவுலகில் நீடூழி வாழ்வீராக. மாயம் புரியவேண்டுமாயின் என்னை மனத்தில் அன்போடு நினைத்தால், உடனே யான் வந்து நீர் விரும்பியவற்றைச் செய்து முடிப்பேன். நெடுங்காலம் உம்மை நான் பிரிந்திருக்கலாற்றேன். அன்புடன் யானே வந்து பன்முறை காண்பேன். நீவிர் மூவரும் வேற்றுமையின்றிக் கலந்து வாழ்வீராக!” என்று கூறி மாயை சென்றாள். மைந்தர் வேளை வணங்கி நின்றார். பின்பு, சூரன் அசுரரை அழைத்து, "கோடி தேருடன் நமது சேனை குபேரன் நகரத்திற்குச் செல்லுதல் வேண்டும்; விரைவில் முரசறைக” எனப் பணித்தான்.

சூரன் திக்கு விசயம் செய்தல் 
பெரும்படை திரண்டு எழுந்தது. அப்போது, பூமி நடுங்கிற்று. பூமியைத் தங்கும் ஆதிசேடன் குலம் நடுங்கிற்று வானம் நடுங்கிற்று; எட்டுத்திசையும் நடுங்கிற்று; மலையெல்லாம் நடுங்கிற்று: கடல் நடுங்கிற்று; கனலும் நடுங்கிற்று. இவ்வாறாகச் சென்ற சேனையோடு சூரன் குபேரனது நகரமாகிய அளகாபுரியை வளைந்தான்; அதையறிந்த தூதுவர் விரைந்து பொன்னகரின் மன்னனிடம் போந்தனர்.

தூதுவர் சொல்லிய் செய்தி கேட்ட குபேரன் துன்பமுற்றான்; துணுக்கம் உற்றான்; "அசுரரை நாம் வெல்லுதல் அரிது. அன்னார் ஈசனிடம் வரம் பெற்றுள்ளார். ஆதலால், அவரைப் புகழ்ந்து ஆசி கூறிப் போற்றுதலே முறை” என்று எழுந்து சென்றான், புஷ்பக விமானத்தின் மேல் ஏறிப் போந்து, சூரன் முன் நின்று வணங்கித் துதித்தான்; அளவற்ற ஆசி கூறி, "யான் உமக்கு அடியன்" என்றான். அது கேட்ட சூரன், "இங்கு நீ இனிது வாழ்க" என்று கூறியனுப்பினான்.

அப்போது அசுரர்கள் அளகாபுரியின் உள்ளே புகுந்தார்கள்; பொன்னும் மணியும், விமானங்களும் வேறுள்ள படைக்கலங்களும், தேரும், குதிரையும், யானையும் கவர்ந்து சென்றார்கள். அளகாபுரியை விட்டுக் கீழ்த்திசையின் கோடியிலுள்ள ஈசான நகரத்தை அடைந்தான், சூரன், இது நீலகண்டனாகிய சிவபெரு மானது சாரூபத்தைப் பெற்ற ஈசானமூர்த்தி வாழும் வளநகர் என்று அறிந்தான்; அந்த நகரத்தை விட்டு, அசுர சேனையோடு சூரன் சீற்றமுற்றுக் கீழ்த்திசையில் உள்ள இந்திரன் நகரத்தை அடைந் தான். அதனை யறிந்த இந்திரன் விண்ணுலகத்திற்குப் போய் விட்டான். அப்போது சூரன் அந் நகரத்தைச் சுட்டெரித்து அசுரர் சேனையோடு அங்கித்தேவன் வாழும் நகரத்திற்குச் செல்லலுற் றான். "அசுரர் சேனைப் பெருங்கடலை வற்ற வைத்து அழிப்பேன்" என்று அங்கித்தேவன் அவ் வெள்ளத்தை நெருங்கி வளைத்து எரிக்கத் தொடங்கினான்.

அதைக் கண்டு சீறினான், தாரகன்; தேர்மீது ஏறினான்; காற்றினும் கடிது சென்றான்; எரித்திடும் அங்கியை எதிர்த்தான்; கையில் வில்லை எடுத்து வளைத்தான். அதனைக் கண்டான், அங்கித்தேவன்; "இவன் வில்லில் அம்பு தொடுப்பானாயின் இன்றே உலகமெல்லாம் ஒழிந்திடும்; என்னுயிரும் முடிந்திடும்: பிரமன் முதலிய வானவர் குலமெல்லாம் மடிந்திடும்” என்று வருந்தினான்; சினம் அடங்கி ஒடுங்கினான்; துயரமுற்று நடுங்கினான்; கரம் குவித்து வணங்கித் தாரகன் முன்னே விரைந்து டேர்ந்தான்; "பிழை பொறுக்க வேண்டும்” என்றும் போற்றி நின்றான்.

ஈசனுடைய பாசுபதப் படையை ஏந்தி நின்ற தாரகன் பொறுத்தான்; சீற்றம் விடுத்தான்; மகிழ்ச்சியுற்றான். அசுரர் சேனையை விலக்கி, அங்கித்தேவனை நோக்கி, "நீ எமக்கு ஏவல் செய்திடுக; உன்னுயிரை உனக்குத் தந்தேன்; இன்னே நின் நகரத்திற்குச் செல்க” என்றான், தாரகன்.

அசுர சேனை ஆரவாரித்து எழுந்து சென்றது. வெற்றி முரசம் வீறிட்டு ஒலித்தது; எங்கும் கரிப்படையும் தேர்ப்படையும், பரிப் படையும் நெருங்கி நடந்தன; அவை எழுப்பிய தூசி கடலைத் துர்த்தது; அசுரக் கொடிகள் ஆகாயத்தை அடைந்தன; கொடி யேந்திய முன்னணிப் படை முந்திச் சென்று எமனுடைய நகரத்தை அடைந்தது.

அது கண்ட எமன், தெளிந்த மனத்தோடு எழுந்தான். எருமைக் கடாவின்மேல் ஏறினான்; சுருங்கிய சேனை சுற்றிச் செல்ல இமைப் பொழுதில் சூரனிடம் போந்தான்; போற்றினான்; தொழுதான்; ஆசி கூறினான். சிறப்பு வாய்ந்த எமனது செய்கையை நோக்கினான், சூரன்; அன்பு கூர்ந்து இன்பமுற்றான்; "நமது ஆணையை மேற்கொண்டு நின் பரிவாரங்களுடன் ஈண்டு வாழ்க என்று பணிந்து மேலே சென்றான்.

கூற்றுவன் வலியிழந்து குறுகிய தனமையையும், அவன் பணிந்து சென்ற பான்மையையும் மனத்தில் எண்ணி மகிழ்ந்த சூரன், தென்மேற்றிசையில் உள்ள நிருதியின் நகரை நோக்கினான் மாற்றான் வலிமையையும் தன் வலிமையையும் மனத்தி எண்ணி மகிழ்ந்த சூரன் அந் நகரை நாடி விரைந்தெழுந்தான்.

சூரன் வலிமையும், தன் வலிமையும் மனத்தில் சீர் தூக்கி ஆராய்ந்த நிருதி, தன் சேனையோடு சென்று துதித்தான்; அவனடி பணிந்தான்; "நான் உன் உறவினன்” என்றான்; அதற்கு அடையாளமாகத் தாரகன் அருகே சென்று நின்றான். இவ்வாறு நெருங்கிய உறவு பூண்ட நிருதியின் நகரைவிட்டு நீங்கினான். அசுரர் கோமான்.

சூரன் வருவதையறிந்த வருணதேவன் கருங்கடலிற் புகுந்தான் வாயுதேவன். இருளுலகில் ஒளிந்தான். இருவர் நகரையும் சூரன் சூறையாடினான்; கொடுமையெல்லாம் விளைத்தான்; அப்பால் ஏழு வகைப்பட்ட பாதாளலோகம் புகுந்தான்; அங்குள்ள அசுரர் முதலியர். அனைவரும் வணங்கினர். அவர்க்கு அருள் செய்து மேலும் சென்றான் சூரன், ஆதிசேடனது உலகத்தை அணுகினான். அவன் சீற்றங்கொண்டு எழுந்தான்; போர் புரிந்தான். அவன் சேனையை அசுரர் படை வென்றது. அந் நிலையில் ஆதிசேடன், சூரனை வியந்து போற்றினான். அவன் நகரத்தில் ஒரு நாள் தங்கினான், சூரன், தேவர்கள் ஆதிசேடனிடம் அடைக்கலமாக ஒப்புவித்திருந்த அமிர்தத்தை அப்போது சூரன் வற்புறுத்தி வங்கினான்; மெய்யன்பு வாய்ந்த தம்பியரோடு அதனை இன்புற்றுப் பருகினான்; அந் நகரை விட்டுச் சென்றான்.

பூவுலகத்திற் போந்து, உவர்க்கடலையும் தீவகத்தையும் கடந்து, சேனைப் பெருங்கடல் சூழ்ந்து வரச் சூரன் சென்றான். திருமகளும் நிலமகளும் துதிக்கப் பாம்பணையிற் பள்ளி கொண்டு திருமால் கண் வளரும் திருப்பாற்கடலை அடைக்கான், அசுரர் செய்த ஆரவாரத்தைக் கேட்டு மங்கையர் இருவரும் வேர்த்து விதிர்விதித்தனர்; அச்சமுற்று அஞ்சன வண்ணனைப் பற்றிக் கொண்டனர்.

அந் நிலையில் உறக்கம் தெளிந்தார், திருமால்; "அஞ்சேல்" என்று இருவருக்கும். அபயம் அளித்தார்; தம் வாகனமாகிய கருடனை நினைத்தார். அவர் நினைப்பதற்கு முன்னே வலிமை சான்ற கருடன் அங்கு வந்தடைந்தான். அவன் தோள்மீது அரிமான்போல் ஏறினார், திருமால்; சங்கு, சக்கரம், கதை, வாள், வில் என்னும் ஐம்படையும் கொண்டு அசுர சேனையின் எதிரே சென்றார். கார்மேக வண்ணனாகிய திருமால்,கருடவாகனராய், மண்ணுலகத்தைச் சூழ்ந்த கடல் போன்ற அசுரப்படையை வளைந்து சுற்றி, எண்ணிறந்த மாயா வடிவம் காட்டி, பகைவர் ஏவரும் தப்பிப் போகாத வண்ணம் அம்பு மாரி பொழிந்து போர் புரிந்தார்.

அது கண்ட தேவர் ஆரவாரித்தனர். இவ்வாறு கொலைப் போர் புரியும்போது தாரகன் சீற்றமுற்றுப் போர்க்களத்தை நோக்கினான்; சிதறியோடும் சேனையை அஞ்சேல் என்று தேற்றினான்; மேரு மலை போன்ற வலிய வில்லைக் கையில் எடுத்தான், இடியென முழங்கும் குதிரை பூண்ட தேர்மீது ஏறி நொடிப்பொழுதில் வந்தான். வந்த தாரகன்மீது திருமால் அம்பு மாரி பொழிந்தார். அவற்றை ஒரு தண்டால் விலக்கித் தள்ளினான், தாரகன்; சீற்றம் கொண்டு முன்னேறினான்.

அது கண்ட திருமால், நேமிப் படையை எடுத்து விடுத்தார். இமை கொட்டும் நேரத்தில் உலகெலாம் அழிக்கும் தன்மை வாய்ந்த அப் படை சென்று தாரகன் கண்டத்தை அணுகிற்று. ஆயினும், சிவபெருமான் அளித்த வரத்தின் செம்மையால் அஃது அவன் கழுத்தில் ஒரு பொன்னாரமாக விழுந்தது. ஆஹா தவத்தினும் வலிய தொன்றுண்டோ? "வலிமை வாய்ந்த தெய்வப் படை யாகிய நேமியே மணியாரமாயிற் றென்றால் வெற்றி உனதேயாகும்; இனிச் செய்யும் போரும் உண்டோ?இளையோனாகிய உன் திறம் இதுவாயின், உனக்கு மூத்தவராய் அங்கே நிற்கும் வீரது பெருமையை யாவரே விரித்துரைக்க வல்லார்? ஈசனார் மகிழும் வண்ணம் நெடுங்காலம் கனல் வேள்வி செய்து வரம் பெற்றுள்ளி உங்களினும் வலிமை பெற்ற அசுரர் இவ் வுலகில் எவரும் இலர். ஆதலால், உம்மை வெல்ல வல்லவரும் உண்டோ? இனி எனக்கு நீர் உறவினர்” என்று மங்கல முறையில் அளவற்ற ஆசி கூறிச் சென்றார், திருமால்.

திருமால் சென்ற பின்னர், வெற்றி மாலை சூடிய தாரகன் வேறொரு தேர்மீது ஏறினான்; சூரன் முன்னே சென்றான். அவனும் நிகழ்ந்தனவெல்லாம் அறிந்து, மன மகிழ்ந்து, தம்பியைத் தழுவிக்கொண்டான். அப்பால் அசுர சேனை புறப்பட்டது.

இவ்வாறு எழுந்த சேனை சுவர்க்க லோகத்தை அடைந்தது. ஒற்றர் சிலர் ஓடிச்சென்று, "சூரன் வந்தான்" என்று இந்திரனிடம் அறிவித்தார்கள். அந் நிலையில் இந்திரன் அஞ்சினான்; பெருமூச்செறிந்தான்;பொருமித் தேம்பினான்; அறிவழிந்து சாம்பினான்; மனத் திண்மை இழந்து மேல்விளைவினை எண்ண லுற்றான்; "இங்கு வந்திடும் சூரனெதிரே சென்று முறையாக யான் போர் புரிந்தால், இவ் வுயிரை இழப்பேன்; அல்லது இறவா திருந்தால், இடர்க்கடலில் வீழ்ந்து மாயாப் பழியில் மூழ்குவேன்" என்று இந்திரன் நினைந்து விரைந்து எழுந்தான்; இந்திராணியோடு குயில் வடிவங் கொண்டு வானத்திற் பறந்து போயினான்.

பகைவர்கள் அவ் விருவரையும் எங்கும் தேடினார்; காணாராயினார். அகப்பட்ட தேவர்களை அசுரர்கள் பிடித்தார்கள்; கலங்க அடித்தார்கள்; கைகளாற் குத்தினார்கள்; அன்னார் பெருந் தோள் நெரிய மேலாடைகளால் நெருக்கி இறுக்கினார்கள். இரக்க மற்ற அசுரர், வானவரை இங்ஙனம் வருத்திச் சூரன் முன்னே கொண்டு நிறுத்தினர். அந் நிலையில் அன்னார் அவனை வணங்கி, "ஐயனே! இன்றுமுதல் என்றும் எமக்கு அமைந்த தெய்வம் நீயே! எம்மைக் காக்கும் மன்னனும் நீயே பற்றுடைய சுற்றமும் நீயே இனி, நாங்கள் அனைவரும் நின் ஆணையின் படியே ஏவல் செய்வோம்," என்று சொல்லித் தொழுது நின்றார்கள். சூரனும், அவர் செய்கையை மெச்சி அகமகிழ்ந்தான்; கட்டவிழ்த்து விடுவித்தான்; "இனி நாம் ஏவிய பணியைச் செய்து வாழ்க!” என்று கூறி விடை கொடுத்தான்.

பின்பு, கல்வி கேள்விகளிற் சிறந்த மார்க்கண்டன் முதலிய மாதவத்தோர் வாழும் மகலோகம், சனலோகம், தவலோகம் என்னும் மூன்று உலகமும் போற்றச் சூரன் பிரமலோகம் போந்தான். அதையறிந்த பிரமதேவன் நடுக்கமுற்றான். பெருங்கடல் போன்ற சேனைகளின் நடுவே வந்த சூரனிடம் போந்து, "அரசே வாழ்க! வாழ்க!” என்று ஆசி கூறினான். "மன்னவா? இங்கு நீ வருவதற்கு நான் என்ன மாதவம் செய்தேனோ அத் தவத்தின் தன்மையை ஆதிசிவன் ஒருவனேயன்றி யாவரே அறிய வல்லார்" என்று பேசிய பிரமனிடம் அன்பு கூர்ந்தான், சூரன்; பிரமலோகத்தில் அவனை இருக்கும்படி பணித்து, துளவமாலை யணிந்த திருமால் வீற்றிருக்கும் வைகுந்தம் போந்தான்.

சூரனைக் கண்ட மாயேரின் எழுந்து வந்து, "நெடிது வாழ்க" என்று எல்லையற்ற ஆசி கூறினான். பின்பு, திருமால், பிரமன் முதலாகவுள்ள தேவர்க்குரிய ஆணை யெல்லாம் அளித்தருளி, தேவ தேவனது சிவலோகத்தை அணுகினான், சூரன்; தன் பரிசனங்களை யெல்லாம் ஓர் எல்லையில் நிறுத்தித் தம்பியர் இருவரோடும் திருக்கோயிலை நோக்கி நடந்தான். ஈசனது கோயிலின் கடைவாயிலில் நின்ற சூரனை ஆணைப்படி நந்தி தேவர் உள்ளே செல்லவிட்டார். காந்தள் மலர் போன்ற கைகளை யுடைய கவுரிதேவியோடு வீற்றிருந்தருளும் கண்ணுதற் கடவுளை அணுகி, அன்புடன் அடி பணிந்து போற்றி நின்றான், அசுர மன்னன்.

நீலகண்டனாகிய பெருமான், அருள் கூர்ந்து சூரனை நோக்கி, "நீ மற்றைய அண்டங்களையும் கண்டு, நம் ஆணையால் எத் திசையும் புகழ இனிது அரசாள்க" எனத் திருவாய் மலர்ந்தார். அது கேட்ட அசுரர் கோமான், ஐயன் மலரடி பணிந்து விடை பெற்றுப் புறப்பட்டான். ஈசன் பணித்தவாறே ஏனைய அண்டங்களையும் சிவகணங்களின் உதவியால் சென்று கண்டு, அங்குள்ள வானவரையெல்லாம் வென்று, அவர் செல்வங்களைக் கவர்ந்து, தன்னுடன் இருந்த பலரை அங்கு அரசாள வைத்தான், சூரன்.

அசுரேந்திரன் சூரனைக் கண்டு மகிழ்தல் 
சூரனது சிறப்பெல்லாம் அறிந்த அசுரேந்திரன், உயிரைப் பிரிந்த உடல் மீண்டும் வந்து, பொருந்தினாற் போன்று தன் சுற்றத்தாருடன் எதிர்கொண்டு சூரனைக் கை கூப்பித் தொழுதான். அது நகிழ்தல் கண்ட சூரன், "ஐயனே! நீ சுகமாக இருக்கின்றாயா?” என்று வினவினான். "அசுரர் குலம் விளங்கத் தோன்றிய அரசே! நீ யிருக்க எமக்குத் தின்மை யுண்டோ? தாழ்வுண்டோ?" என்று இனிய மொழி பேசி அசுரேந்திரன் அவன் அருகே சென்றான். வெற்றி மாலை சூடிய சூரன், அசுரர் சேனையோடு நிலவுலகத்திற்கு விரைந்து திரும்பினான். அங்குத் திருமால் முதலிய தேவரும் முனிவரும் சூரனை எதிர்கொண்டு அழைத்து ஆசி கூறி அன்போடு போற்றினர். அவர்களோடு கலந்து நின்ற பதினொரு கோடி ருத்திர கணங்களை நோக்கினான், சூரன். "உலகத்தைப் படைத்த பிரமதேவனிடம் பதினொரு உருத்திரர் தோன்றினர். அன்னார் மேற்புவனத்தில் இருந்தார். அவர் படைத்த பவுர் முதலிய பதினொருகோடி ருத்திரர்களே இவர்கள்; ஈசன் அருளால் வானவர் இனத்தில் சேர்ந்து வந்துள்ளார்”என்று திருமால் சொல்லக் கேட்ட சூரன், "இதுவோ இவர் வரலாறு" என்று கூறினான்.

வீரமகேந்திர நகரம் 
பின்பு, அங்கு நின்ற தேவதச்சனை நோக்கி, "அறிஞனே, நாம் வசித்தற்கு ஏற்ற நகரத்தை விரைவிலே ஆக்குக” எனச் சூரன் பணித்தான். சிற்ப நூல்களிற் சொல்லிய முறைகளை ஆராய்ந்து மாமேரு மலை போன்ற நான்கு கோபுர வாயில்கள் அமைத்து, நூறு யோசனை நீளத்தில் பல மாடவீதிகள் வகுத்து, இன்னும் மன்னரது இயல்புக் கேற்ற மற்றவற்றையும் உண்டாக்கி, நகரின் நடுவே சூரனும் அவன் தேவியும் வசிப்பதற்கு ஒரு மாளிகையும் நிருமித்தான், தேவதச்சன்; நீலமலரும் குமுதமும் கமலமும் நெருங்கிப் பூத்த பொய்கைகளும், வானளாவிய பூஞ்சோலைகளும், அழகிய செய் குன்றுகளும் முறையாக அமைத்தான். அலைகடலே அகழியாகக் கொண்ட நகரத்தில் நின்ற அரண்மனை, அழகிய பொன்னொளி விரித்தமையால் விண்ணுலகில் உள்ள பொன்னகரம் வெள்ளிநகரம் போலாயிற்று. ஒப்பற்ற அசுர மன்னனது வெற்றிப் புகழும் பெருமையும் பெற நின்ற அந் நகருக்குத் தச்சன் வீரமகேந்திரம் என்னும் சிறந்த பெயரை இட்டான், வீரமகேந்திரத்தைச் செய்த பின்னர், வடகடலின் நடுவே சிங்கமுகன் என்னும் அசுர மன்னனுக்கு ஒரு பெரு நகரம் அமைத்து, அதற்கு ஆசுரம் என்று பெயரிட்டான்.

நெடிய மேருமலையின் தென்பால் அமைந்த நாவலந் தீவில் உள்ள ஏமகூட மலையின் அருகே, தேவதச்சனுடைய தந்தையாகிய விசுவகர்மன் சென்றான். அங்குத் தாரக மன்னனுக்கு மாயாபுரம் என்னும் மணிநகரை அவன் உண்டாக்கினான்.

வீரமகேந்திர மாளிகையில் வாழ்ந்த சூரன், அழகிய பீடத்தில் அமர்ந்து, திருமக்ளுக்கு உறைவிடமாகிய தெள்ளிய திருப்பாற் கடலின் நீரால் தேவர்களால் அபிஷேகம் செய்யப்பெற்றான்; பின்பு ஆடை அணிகளால் அலங்கரித்துக்கொண்டு, அரியாசனத்தில் வந்தமர்ந்தான். அப்போது, திருமால் புனைதற்கேற்ற அழகிய திருமுடியைப் பிரமதேவன் எடுத்துச் சூரன் தலையிலே சூட்டினான். அமரரும் முனிவரும் பொன்மலர் எடுத்து, மன்னர்மன்னரது சென்னியில் விளங்கிய திருமுடியில் முறையாகச் சொரிந்தார்கள். அரம்பை, மேனகை, ஊர்வசி முதலிய வான மங்கையர் பலர், இன்னிசைக் கருவிகளில் எழுந்த பாடலுக்கு ஏற்பத் தேசிகம், வடுகு, சிங்களம் என்னும் மூவகை ஆடல்களை முறையாகப் புரியலுற்றார்.

இவ்வாறு சிறப்பாக அரசு வீற்றிருந்த சூரன், தெய்வத் தச்சன் பெற்ற பதுமகோமளை என்னும் மதிமுகம் வாய்ந்த மங்கையை, பிரமன் முதலிய வானவரும் தானவரும் பிறரும் போற்ற விதிமுறைப்படி திருமணம் செய்து அன்பு கொண்டு வாழ்ந்தான்; சிங்கமுக அசுரனுக்கு எமதருமன் திருமகளாகிய விபுதை என்னும் மங்கையை வதுவை செய்வித்தான்; நிருதியின் புதல்வியான சவுரி என்னும் நங்கையைத் தாரக அரசனுக்குத் திருமணம் புரிவித்தான் பின்பு சூரன், தம்பியர் இருவரையும் நோக்கி, "நீங்கள் உங்களுக்குரிய வளநகரம் போந்து இருகோடி வெள்ளமாகிய சேனைகளோடு இனிது வாழ்வீராக”என்று விடை கொடுத்து அனுப்பினான். 

தம்பியர் இருவரும் தத்தம் நகரத்திற்குச் சென்ற பின்னர், தருமகோபன், துர்க்குணன், துன்முகன்,சங்கபாலன், வக்கிரபாலன், மகிடன் முதலியோரை மந்திரிகளாகக் கொண்டு, வானவர் போற்ற வீரமகேந்திரத்தில் வீற்றிருந்து சூரன் அரசு செய்தான்.

வானவர் ஈனப்பணி புரிதல் 
இங்ஙனம் மலைபோல் உயர்ந்த மாடங்களையுடைய வானவர் மகேந்திரபுரத்தில் சூரன் அரசு செய்யும்பொழுது இந்திரனும் வானவரும் முனிவரும் அங்குப் போந்து, அவன் ஏவுவதற்கு முன்னமே குறிப்பறிந்து நடப்பாராயினர். இவ்வாறு, வானவர் ஊன்முற்றவர் போல் உலைவுற்றுப் பணி செய்து வரும்பொழுது, ஒரு நாள் இந்திரனையும் வானவரையும் சூரன் வரவழைத்து, "நீங்கள் அசுரர்க்குத் தம்பியர் அல்லரோ? அந்த முறையால் அவர் பணி உமது பணியன்றோ? தினந்தோறும் நீங்கள். அலைகடலிற் போந்து அங்குள்ள மீன்களையெல்லாம் அள்ளிவரக் கடவீர்” என்றான். அம் மொழி கேட்ட வானவர், மனம் நடுங்கினார்; மயங்கினார்; மானத்தால் குறுகினார்; கடல் மீனைக் கவர்ந்துவரக் கட்டளை யிட்டானே, காவலன் இனி என்ன செய்வோம்! இப்படியும். பிரம தேவன் நம் தலையில் விதித்தானே! என்று ஏங்கினார்; அரசன் ஆணையை மறுத்தற்கு அஞ்சிப் பணிசெய்யப் புறப்பட்டார்.

கடலை நோக்கி வழி நடந்து செல்லும்போது, வானவரும் இந்திரனும் வருந்தி ஏங்கினார்: "இப் பணி புரிதல் நமக்குத் தீராப் பழியன்றோ? இவ்வசை வந்தடையும் முன்னே உயிர் விடுதல் சாலவும். நன்று; அந்தோ! சாவும் நம்மைச் சாராதே ! என் செய்வோம்!” என்று மனம் வெதும்பினார்; புலம்பினார்;கடற்கரையை வந்தடைந்தனர்.

அந்த வேளையில், இந்திரன் வருண தேவனை அழைத்து, "ஜயனே கருங்கடலின் பெருந்தெய்வம் நீயே அன்றோ? உனனிலும் வலியார் இவ்வுலகத்தில் உண்டோ? உன் கைத்திறத்தால் திமிங்கிலம் முதலிய கணக்கற்ற மீன்களை இக் கடற்கரையில் ஏற்றுவாயாயின் எம்மை இடர்க் கடலினின்றும் கரையேற்றியவன் ஆவாய்” என்றுரைத்தான். வருணன் அதற்கு இசைந்து, பெருங் கடற்கரையிலே மீன்களை அடுக்கடுக்காகக் கொண்டு குவித்தான். அப்போது தேவர்களை நோக்கி, "இவற்றை இனி எடுத்துச் செல்லுதல் உமது பணியாகும்” என்று ஏவினான், இந்திரன். வானவர், உடல் நடுங்கினர்; உளம் பதைத்தனர்; கண் கலங்கினர்; நாணத்தால் நலிந்தனர்; "தேனார்ந்த கற்பகத்தின் திருநிழலில் இன்புற்று வாழ்பவர் என்று ஏற்றமாக எண்ணப்படும் நாம், மீனைச் சுமந்து ஈனர்களாய், எல்லோரும் சிரிக்க அசுரர் முன்னே செல்வதைவிட ஆவி துறத்தல் நன்று,” என்று பலவாறு பன்னிப் புலம்பி, மீனைச் சுமந்துகொண்டு திக்குப் பாலகர்களோடு சூரன் திருநகரை நோக்கி நடந்தார்கள்.

அப்போது, அவரைக் கண்ட அசுரர் பலவாறு பேசுவாரா யினார்: "நெடுங் கடலைக் கலக்கி, இதோ! சில மீன்களைத் தருகின்றார் இவர்” என்பார். "சாரமெல்லாம் கதிரவன் உண்ட பின்னர், வெறும் சக்கையை நமக்குத் தருகின்றார் இவர்” என்பார். "வேத நெறிமுறையை விட்டொழிந்த இவர், ஏவல் புரியும் பேதை நெறியை ஏற்றார்” என்பார். "குற்றமற்ற நிம் குலத்தை இகழ்ந்தவர் இப் பாடும் படுவார்; இன்னமும் படுவார்" என்பார். "மண்ணவரும் இகழும் வன்பழியைப் பெற்றும் விண்ணவர் தலைவன் இன்னும் உயிர் விட்டிலனே" என்பார். "கண்ணாயிரம் படைத்த விண்ணவர் தலைவனுக்குக் கருத்து மிகக் குறைவே" என்பார். "அவன் பெண்ணோ அலியோ பேடோ” எனப் பழிப்பார். இவ்வாறு நிகழ்ந்த ஏளனப் பேச்சுக்கிடையே, ஈனமுற்ற வானவர்கள் எடுத்து வந்த மீன்களைத் தாரணிந்த சூரன் கண்ணுற்றான்;களிப்புற்றான்; "நாள்தோறும் இப்படியே கொண்டு வருக” என்று பணித்தான். "நல்லது” என்றார்,வானவர்.

இவ் வண்ணம் நிகழும் நாளில் சூரன் ஆற்றிய தவத்தின் செம்மையால், பதுமை என்னும் பாவை புதுமதி போன்றதொரு பிள்ளையைப் பெற்றாள்; அப் பிள்ளை காலனுக்கும் காலன்போல் விளங்கினான். பானுகோபன் என்று பெயர் பெற்ற அப் பாலன் மன்மதனே என மங்கையர் மயங்கத்தக்க பேர்ழகு வாய்ந்து வளர்ந்தான்; திருமகளின் தலைவனாகிய திருமாலொடு பொருது வெற்றி பெற்றான்.

பானுகோபனுக்குப் பின் அங்கிமுகன், இரணியன், வச்சிர வாகு என்னும் மைந்தரைப் பெற்றாள், பதுமை, சூரன் அவர்களைக் கண்டு அக மகிழ்ந்தான்.

அசர வீரரின் மைந்தர்கள் 
சிங்கமுக அசுரன் மைந்தராய் அதிசூரனும் நூற்றுவரும் தோன்றினர்; அன்னவரது வல்லமையே யாவரே சொல்ல வல்லார்? சிங்கமுகன் தம்பியாகிய தாரகன் முன்னர்ச் செய்த தவத்தின் வலிமையால் பால சூரியனைப் போன்ற மைந்தன் ஒருவனைப் பெற்றான். சூரன் முதலிய மூவருடன் பிறந்த அசமுகி என்பவள் ஒருவருக்கும் வாழ்க்கைப்படாதவளாய், முறையற்ற செயல்களால் நிலையழிந்து, அறம் துறந்து, வானவர்க்குரிய மாதரை உடன்பிறந்த மூவர்க்கும் உதவிவந்தாள். அவள் துர்வாச முனிவரை வலிதிற் சேர்ந்து பெற்ற மைந்தர் இருவர்; தாய் வடிவத்தவ்ன் ஒருவன்; தந்தை வடிவத்தவன் மற்றொருவன்; வில்லவன், வாதாவி என்பது அவர் பெயர். அவ் விருவரும் அன்னையின் சொற்படி அப்பனாகிய முனிவனைத் தொழுதார்கள்.

இப்படிப் பெருக்கமுற்ற அசுர மைந்தரும் பிறரும், முனிவரையும் தேவரையும் மனிதரையும் வருத்துவாராயினர். சூரன் சிறப்பாக அரசு புரிந்திருந்தான். அந் நிலையில் இந்திரனைச் சிறைசெய்து, அவன் தேவியைக் கைப்பற்றக் கருதினான், அசுர மன்னன். படைத்தலைவருள் ஒருவனை அழைத்து, "நீ போய் இப்பொழுதே இந்திரனைப் பிடித்து வந்து இங்கே விடுக” என்று ஏவினான். பின்னும் ஒன்பது கோடி அசுர மாதரை அழைத்து, "தேவேந்திரனோடு இன்புற்றிருக்கும் தேவியை இங்கே எடுத்துவந்து கொடுத்திடுக" என்று வலிய படைத்துணையோடு விடுத்தான். 

இந்திரன் ஓடி ஒளித்தல் 
”அளவற்ற படைகளோடு அசுரர் வந்தனர்; அசுரமாதரும் இந்திரன் அமர்செய்பவர் போல் அணுகினர்;அன்னார் கருத்து யாதோ அறிகிலோம்" என ஒற்றர் வந்து இந்திரனிடம் ஒளித்தல் உரைத்து நின்றார்கள். தீயினும் கொடிய அசுரர் சூழ்ச்சியை அறிந்து, தேவியோடு மாயையால் மறைந்து, பூவுலகத்தை அடைந்தான், இந்திரன். விண்ணவர் தலைவனைப் பிடிக்கச் சென்ற வீரர் யாவரும் அவனைத் தேடினர்; அசுர மாதர்கள் சசியைத் தேடினர்; இருவரையும் காணாது மனம் சோர்ந்து பெருங்கவலை கொண்டனர்; இருவரும் தப்பிப் போயினர் என்று அசுரர் கோமானிடம் சென்று அறிவித்தார்கள். அந் நிலையில் அவன் நெருப்பெனச் சீற்றமுற்றான்; அரு மணியிழந்த நாகம்போல் அலக்கண் உற்றான்.

இந்திரன் மைந்தனாகிய சயந்தனை நாரதன் தேற்றுதல் 
அப்போது, வைகுந்தத்தில் இருந்த இந்திரன் மைந்தனாகிய சயந்தன், பெற்றோர் இருவரும் ஒளித்துப் போந்தவாறும், அசுரர் படை அவர்களைத் தேடிக் காணாது மீண்டவாறும, வானவர் துன்புற்றவாறும் அங்கிருந்தபடியே அறிந்தான்; வானவர் நாடு வேந்தன் இன்றி வறிதே இருத்தல் ஆகாது. என்று கருதி அங்குப் போந்தான்; வருந்திப் புலம்பிய வானவரைக் கண்டான்; தாய் தந்தையரைக் காணாது துன்பக்கடலில் மூழ்கினான்; ஏக்கமும் இரக்கமும் எய்தினான்; இன்னது செய்வது என்றறியாது பித்தன்போல் சித்தம் கலங்கி நின்றான்.

அவ் வேளையில், அப் பாலன் உள்ளத்தைத் தேற்றக் கருதி, நாரத முனிவன் அங்கு வந்துற்றான். நடுங்கிய மேனியனாய் எழுந்து வணங்கினான், சயந்தன்; ஓர் ஆசனத்தில் அவனை அமர்த்தி அருகே நின்றான். அப்போது முனிவன் அவனை நோக்கி, "ஐயனே! முற்றும் உணர்ந்தவர்கள் இன்பம் வந்தடைந்த போது மகிழ்ந்திட மாட்டார்; துன்பம் வந்துற்றபோது துளங்கிடவும் மாட்டார்; பிறந்தோர்க்கெல்லாம் இன்பமும் துன்பமும் உடலோடு பொருந்தின அன்றோ? இரண்டும் முன்னை வினைப்பயன் என்றெண்ணி அமைவார். ஒரு காலத்தில் வறியராயிருப்போர், மற்றொரு காலத்தில் செல்வராவர்; செல்வமுற்றோர் பின்னொரு காலத்தில் வறியராவர். சிறியோர், பெரியர் ஆவர்; பெரியோர், சிறியவர் ஆவர். இவ்வாறு மாறி வருதல் அவரவர் செய்த பழவினையின் பயனே யாகும். சந்திர சூரியர் சஞ்சரிக்கும் உலகத் தியற்கை இதுவே. ஆதலின், இப்போதுள்ள அமரர் தாழ்வும், அசுரர் வாழ்வும் இப்படியே நிற்கமாட்டா. இவ்வுண்மையை மனத்திற் கொள்க. உன்னைப் பெற்ற தாயும் தந்தையும் இந் நகரை விட்டு அகன்று, தன் இயற்கை வடிவத்தை மறைத்து, நிலவுலகத்தை அடைந்துள்ளார்கள். இனிக் கொடிய சூரன் இறந்துபடுவான். உமது துயரம் விரைவில் ஒழியும். இதனை உள்ளத்தில் தெளிவாகக் கொள்க” என்று நாரத முனிவன் தேற்றிச் சென்றான். ஒருவாறு சஞ்சலம் தீர்ந்த சயந்தன் தெளிவுற்று இருந்தான்.

இந்திரன் சீகாழியில் பூஞ்சோலை வளர்த்தல் 
வேண்டியார்க்கு வேண்டிய பொருளைத் தப்பாது அளிக்கும் இந்திரன் கற்பகச் சோலையின் நிழலில் வீற்றிருக்கும் அற்புத சீகாழியில் வாழ்க்கையை நீத்து, சித்திர மனைவியாகிய பூஞ்சோலை சசியோடு இந்திரன் தெக்கண தேசத்திற் போந்து வளர்த்தல் பன்னிரு பெயர் பெற்ற பழம்பதியாகிய சீகாழியை அடைந்து, அதுவே தக்க இடமெனத் தெளிந்து அங்குத் தங்கினான். அந்த நற்பதியில் இந்திராணியோடு தளர்வுற்றுத் தங்கியிருந்த இந்திரன், நாள்தோறும் அகமகிழ்ந்து ஈசனைப் போற்றிப் பூசனை புரியக் கருதி, அழகிய நந்தவனம் ஒன்று அமைக்கத் தலைப்பட்டான். அப்பொழுது அசுரர்களுக் கெல்லாம் தலைவனாகிய சூரன் அனுப்பிய ஒற்றர்கள் அவனை உலகம் எங்கும் தேடித் திரிந்தார்கள். அதை அறிந்த இந்திரன், தன் தேவியோடு மூங்கில் உருவம் கொண்டு மறைந்திருந்து தவம் புரிவானாயினான்.

இங்ஙனம் சீகாழியில் வேணுவாய் நின்று தாணுவைப் போற்றிய விண்ணவர் தலைவனை ஒற்றர்கள் காணாது போயினர்; ஆயினும், அசுரரது கொடுங்கோல் ஆட்சியால் வானம் மழை பெய்யாது ஒழிந்தது. இந்திரன் வளர்த்த நந்தவனம் வாடி நலிந்தது. நெடிய பூஞ்சோலை, நெருப்புற்றாற்போல் பொரிந்து கரிந்து போயிற்று. அதைக் கண்டு கவலை கொண்டான், இந்திரன்; திசைமுகனும் திருமாலும் தேடுதற்கரிய ஈசனை நினைந்து கரைந்துருகினான்; தொழுது ஏத்தினான். இவ்வாறு திரிபுரம் எரித்த தேவதேவனை மனமுருகித் தொழுது வருங்கால் விண்ணிலே ஒரு குரல் எழுந்தது: "வாசவனே! வருந்தாதே நின் வாடிய சோலை வறண்டு ஒழியாது; இப் பதியில் ஒரு நதி வந்து எய்தும்” என்று ஆகாயவாணி கூறிற்று.

காவிரியைக் கொண்டு தமிழ் முனிவர் புறப்படல் 
இஃது இவ்வாறாக, முத்தமிழ் முனிவராகிய அகத்தியர், ஈசனைத் தொழுது, "ஐயனே! அகந்தை கொண்ட விந்தமாம்லை மேருவைப் பகைத்து அந்தர வழியை அடைத்தது. அதன் செருக்கை அழிக்கத் திருவருள் புரிதல் வேண்டும்” என்றார். அப்போது சிவபெருமான், "முனிவா! அதற்கு வேண்டும் வன்மையை உனக்கு அளித்தோம் விந்த மாமலையை வேரோடழித்து, தென் திசைப் போந்து, பொதிய மலையில் நீ வாழ்வாயாக" எனப் பணித்தார். அப் பணி தலைமேற்கொண்டார், அகத்தியர். அந் நிலையில் கயிலையங் கிரியிலுள்ள நதிகள் ஏழினும் நலம் மிக வாய்ந்ததும் நன்னீரை உடையதும் ஆகிய பொன்னி என்னும் காவிரியாற்றைக் கருதினார், சிவபெருமான். வந்த காவிரியை முனிவர்க்குக் காட்டி, "இந்த ஆற்றை உனது பெரிய கமண்டலத்திற் கொள்க" என்று அருளினார், சிவபெருமான். முனிவரும் அவ் வண்ணமே செய்தார். அகன்ற காவிரி அகத்தியர் கண்டலத்திற் புகுந்தாள்.

முனிவர் கிரவுஞ்சன் என்னும் அசுரனை ஒறுத்தல் 
பொன்மலையினின்றும் புறப்பட்டார், முனிவர்; தென் திசையை நோக்கி நடந்தார்; வழியில், வலிமை சான்ற அசுர மன்னனுக்குத் தம்பியாகிய தாரகன் வாழ்ந்த மாயாபுரத்தை வந்தடைந்தார். அங்கிருந்த எனனும கிரவுஞ்சன் என்னும் பேர் பெற்ற அசுரன் அவர் அசுரனை வருகையை நோக்கினான். அவன் ஓர் அணுவை ඉංග්‍රිත්‍රීඞ மகாமேரு மலை யாக்குவான்; மகா மேருவை அணுவினும் நுண்ணிய தாக்குவான்; நிலவுலகத்தை நெடுங்கு லாக்குவான்; நெடுங்கடலை நிலவுல காக்குவான்; கொழுந்து விட்டு எரியும் பெருந்தீயைக் குளிர்ந்த நீராக்குவான். இத்தகை அசுரன் மெய்த்தமிழ் முனிவர் செல்லும் வழியில் விந்தமலை போன்று கொத்தும் குவடும் நிறைந்ததொரு நெடுமலையாகி நின்றான். 

அம்மலையின் ஊடே ஒரு பாதை சென்றது. அதனைக் கண்டார். அகத்தியர். அவர் அவ் வழியாகச் செல்லும் பொழுது கடுங்கனல் எழுந்து சூழ்ந்தது; சூறாவளி சுழன்று அடித்தது, சோனைமாரி சொரிந்தது; இடி இடித்தது; இருட்படலம் சூழ்ந்தது. இங்ஙனம் எண்ணிறந்த மாயை இயற்றினான் அசுரன். அது கண்ட அகத்திய முனிவர், நன்று நன்று அசுரன் இவ்வண்ணம் செய்ய வல்லனோ? அவன் வலிமையை இன்றே அழிக்கின்றேன்! என்று தமது கையிலமைந்த திரிதண்டத்தால் அம் மலையினைக் குத்திக் குடைந்து ஒரு வஞ்சினம் கூறலுற்றார்: "இத் தண்டத்தால் உண்டாகிய பிலங்கள் எல்லாம் நானா வித மாயைக்கு இருப்பிடம் ஆகுக, எம்பெருமான் பெற்ற செம்பொருளாகிய முருகன் வேற்படையால் இக் குன்றம் விரைவில் அழிந்து ஒழிக" என்று சாபமிட்டார்.

முனிவர் விந்த மலையின் அகந்தையை அழித்தல் 
அப்பால், கங்கையாற்றின் கரையில் அமைந்த காசிப் பதியிற் முனிவர் விந்த கோயில் கொண்ட ஈசனது கமல பாதம் பணிந்து மலையின் அவ்விடத்தினின்றும் புறப்பட்டு, ஓங்கி உயர்ந்த அகந்தையை விந்த மலையின் ஒரு புறம் சென்று, அதன் அழித்தல் நிலையை அறியுமாறு பேச்சுக் கொடுத்தார்; "ஓங்கி எழுந்து விண்ணளாவி நிற்கும் விந்த மாமலையே! நாம் பொதிய மலையிற் போந்து இருந்திடக் கருதி வந்தோம். நாம் செல்லுதற்குச் சிறிது வழி விடுக” என்றார். அம் மலை வழி தர மறுத்தவுடன், மிகச் சிறியவராகிய முனிவர் விந்த மலையின் முடியினைத் தம் அங்கையால் அழுத்தினார். அப்போது, வானவர் வியப்புற, அந்த மலை தரையளவாகத் தாழ்ந்து, பின் பாதாளவுலகிற் போந்து, ஆதிசேடனது எல்லையை அடைந்தது. அப்பொழுது சூரியன் முதலாகிய வானவர் அகத்திய முனிவரிடம் விரைந்து போந்து, வணங்கித் துதித்து, "எந்தாய்! நீர் செய்த உதவி வேறு யாவரே செய்வார்? இவ் வுதவியால் நாங்கள் ஆகாய வழியாகச் செல்லும் பேறு பெற்றோம். இனிப் பொதிய மலையிற் போந்து எம்பொருட்டு இருந்தருள்வீராக” என்று நல்லுரை பகர்ந்தனர்.

முனிவர் வில்லவனையும் வாதவியையும் முடித்தல் 
முனிவரும் நன்றென இசைந்து, வானவரிடம் விடை பெற்றுத் தெற்கு நோக்கிச் சென்றார். குன்றுகள் செறிந்த நாட்டின வழியே செல்லும்பொழுது வில்வலன், வாதாவி என்ற இருவரும் அவர் வருகையைக் கண்டார்கள். உடனே வில்வலன் தவக்கோலம் புனைந்தான்; தலையிலே சடையும், நெற்றியிலே திருநீறும், மார்பிலே தாழ்வடமும், மேனியில் வெண்ணீறும், கையிலே தண்டமும், இடையிலே மரவுரியும் புனைந்து அகத்திய முனிவர் முன்னே விரைந்து சென்றான்; "என் தந்தையே தவக்குலத் தலைவனே! யானும் என் குலமும் ஈடேறும் வண்ணம் இங்கு எழுந்தருளினாய் போலும் இன்று என் குடிசையில் தங்கி, நான் சமைத்துத் தரும் புல்லுணவைப் புசித்து, மிச்சிலை எனக்குத் தந்து, அருள் புரிதல் வேண்டும்" என்று விண்ணப்பம் செய்தான்; அட்டிற் சாலையின் அருகே அகத்தியரை அழைத்துச் சென்றான்; அங்கு இட்டிருந்த ஆசனத்தில் அவரை அமர்த்தினான்; ஆசைமொழி பேசினான்; வாசங் கலந்த நன்னீரும், விரையுறு மலரும், நறும்புகையும் தீபமும் கொண்டு வஞ்சக முறையிற் பூசனை செய்து, அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.

சமைத்த உணவையும் கறிவகைகளையும் அன்பிலனாகிய வில்வலன் படைத்தான். அவற்றைப் பசி தீரும் அளவாக இனிது அருந்தினார் முனிவர்; பின்பு அசுரன் தமது கரத்திற் கொடுத்த வாசநீரைப் பருகி எழுந்து பொடியினாற் கைகளைத் தேய்த்துத் தண்ணிராற் கழுவி அமர்ந்தார்.

அப்போது வில்வலன், பிரமதேவன் அளித்த வரத்தை மனத்தில் நினைத்து, விருந்தினராகிய அருந்தவ முனிவரைக் கொல்லும் வண்ணம், "வாதாவி மைந்தார் இளையோய்! விரைந்து வா வா!” என்று அழைத்தான்.

அந் நிலையில் முனிவரது வயிற்றிலே கறியாகக் கிடந்த வாதாவி, ஆடாக உருப்பெற்று எழுந்து பேசத் தொடங்கினான்; "அண்ணா, வில்வலா! அன்று கடலைப் பருகிய கொடியோன் இன்று எண்ணிப் பாராது என் உடலையும் உண்டான், இவன் வயிற்றைக் கிழித்து வருகிறேன்” என்று ஆட்டுத்தம்பி அரிமான் போல் முழங்கினான். மாநிலம் புகழும் முனிவர், தீயோர் செய்த மாயம் தெரிந்து கடுஞ் சீற்றமுற்றார். "ஊன் கொண்ட கறியாகி, உட்சென்ற வாதாவி அப்படியே உயிர் நீத்து ஒழிக" என்று தம் வயிற்றை ஒருமுறை தடவினார், முனிவர். காட்டுத்தீயில் அகப் பட்ட சிறு செடிபோல், அவர் சாபத் தீயால் வாதாவி இறந்தொழிந்தான்.

கருமேகம்போல் எதிரே நின்ற வில்வலன், தம்பி இறந்ததை யறிந்து புகைந்து எழுந்தான்; புனைந்திருந்த சிவக்கோலத்தை விட்டு பழைய அசுர வடிவம் கொண்டான், கழியொன்றைக் கையில் எடுத்து முனிவரை அடித்துக் கொல்லக் கருதி வந்தான். அப்பொழுது அவர் அங்கிருந்த புல் ஒன்றை எடுத்தார்; அதனைச் சிவப்படையாகக் கருதி விடுத்தார்; அப்படையின், வேகத்திற்கு ஆற்றாது, வில்வலன் விழுந்து மடிந்தான். அப்பொழுதே கொடிய வஞ்சகரது இடத்தை விட்டு அகன்றார்,அகத்தியர்; அன்னாரைக் கொன்ற பாவம் தீர்ந்தொழியும் வண்ணம் பரமசிவன் திருவடியில் ஆர்வத்தோடு அர்ச்சனை புரிந்தார். 
விநாயகர் காகமாய்ச் சென்று காவிரியைக் கவிழ்த்தல்

அருந்தமிழ் முனிவர் ஆற்றிய செயல்களை முற்றும் அறிந்த நாரதர், வானவர் வேந்தனாகிய இந்திரனிடம் போந்தார். அவனை நோக்கி, அகத்தியர் வரலாற்றைக் கூறலுற்றார்; தனக்கு உவமையில்லாத் தலைவனாகிய ஈசன் அகத்திய கவிழ்த்தல் முனிவரைப் பொதிய மலையிற் போய் இருக்கும்படி அனுப்பியவாறும், அம் முனிவர் விந்த மாமலையைப் பாதலத்தில் அழுத்தியவாறும், மற நெறியை மேற்கொண்ட சூரனுடைய மருகர் இருவரையும் முடித்தவாறும், அவரைக் கொன்ற பாவம் தீருமாறு கொங்கு நாட்டை அடைந்து சங்கரனை மெய்யன்போடு போற்றி வழிபட்டு அங்கே இருந்தவாறும் முறையாகக் கூறி முடித்து மேலும் பேசலுற்றார். "அமரர் கோமானே! அவ் வருந்தவ முனிவர் இன்னும் கொங்கு நாட்டில் ஈசனார்க்குப் பூசனை புரிந்து கொண்டிருக்கின்றார்; அதனை நான் கண்டு வந்தேன். அவர் பக்கத்திலுள்ள கமண்டலத்தில் காவிரி யாறு அடங்கியுள்ளது. அந் நதி இங்கு வருவதற்குரிய வழியை நாடினால் உன் மனக்கவலை ஒழியும்" என்றார், நாரதர்.

இவ்வாறு நாரதர் கூறுதலும், "எம்பெருமானே! குறு முனிவர் கொண்டுவந்துள்ள திருநதியை இச் சோலைக்கு வருவித்தல் எங்ஙனம்? சொல்லியருள வேண்டும்” என்று வேண்டினான், இந்திரன், "வேழமுகம் உடைய விநாயகப் பெருமானைப் பேரமுது படைத்துப் போற்றினால், அவர் அக் கமண்டலத்தைக் கவிழ்த்திடுவார்” என்று கூறினார், நாரதர்.

அது கேட்ட இந்திரன், சிவகுமாரனாகிய பிள்ளையாரை அன்போடு தொழுது போற்றினான். அப் பெருமான் அவன் முன்னே தோன்றிக் கருணையால் நோக்கி, "அன்பனே! நீ ஆற்றிய பெரும் பூசையை ஏற்றுக்கொண்டோம்; உனக்கு வேண்டும் வரம் யாது?" என வினவினார். அப்பொழுது இந்திரன், "ஐயனே திருமலர் எடுத்துத் தேவதேவனை வழிபடக் கருதி நந்தவனம் ஒன்று வைத்தேன். அது நீரின்றிக் கரிந்து, பகலவன் கதிர்களால் மடிந்து, ஈசனார் கண்ணழலால் எரிந்த திரிபுரம்போல் ஆயிற்று. உலகத்தில் உயர்ந்து விளங்கும் மகாமேரு மலையின் அடிவாரத்திலிருந்து அகத்திய முனிவர் புறப்பட்டு, துன்பம் செய்யும் அசமுகியின் மைந்தர் இருவரையும் கொன்று, கொங்கு நாட்டிற் போந்து ஈசனுக் குகந்த பூசனை புரிகின்றாராம். அம் முனிவரது அழகிய கமண்டலத்தில் காவிரியென்னும் பெருநதி அடங்கி யுள்ளதாம். என் ஐயனே! அந் நதியை நிலத்திற் கவிழ்த்துவிட்டால் என் நந்தவனம் பிழைக்கும்; என் மனக்குறையும் தீரும்” என்றான்.

இந்திரன் இவ்வாறு கூறுதலும், பிள்ளையாராகிய வள்ளல் மனமகிழ்ந்து, "அவ்வாறே செய்வோம்” என்று அருளி, அவனை அவ்விடத்தில் விட்டு, காக வடிவாக விரைந்து போந்து, அகத்திய முனிவரது கமண்டலத்தில் அமர்ந்தார். காகத்தை ஒட்டக் கையை ஒச்சினார், முனிவர். அப்போது பிள்ளையார் கமண்டலத்தைக் கவிழ்த்துத் தள்ளிக் காவிரியை ஓட விட்டார். காவிரி ஓடிய பின்பு காகத்தின் வடிவை விட்டு, வேதம் பயிலும் வேதியச் சிறுவன்போல் நடந்து சென்றார், பிள்ளையார்; அது கண்ட அகத்திய முனிவர் சர்வ சங்கார காலத்தில் தோன்றும் ஆதி மூர்த்தி போல் சீற்றங்கொண்டு நின்றார்; "இவன் தேவனோ? அசுரனோ? அரக்கனோ? ஆற்றல் வாய்ந்த இவன் யாவனோ? அறியேன்! ஆற்றைக் கவிழ்த்துவிட்டு அமைதியாகப் போகின்றான்! கருத்தின்றிக் காரியம் செய்யும் செருக்கன் போலும் யாவனாயினும் இவன் தன்மையை விரைவில் அறிவேன்” என்று எழுந்து, இரு மணிக்கரங்களையும் மடித்தார்; அவன் தலையில் குட்டுதற்காகச் சென்றார். அவ் வேதியச் சிறுவர், முனிவரின் அருகே வருவார்; கிளர்ந்து மேலே எழுவார்; எட்டுத் திசைகளையும் எட்டுவார்; நெருங்கி வருவார்; நெடுந்தூரம் செல்வார். இவ்வாறு விளையாடிய விநாயகப் பெருமான், தொடர்ந்து வந்த முனிவர்க்குத் தம் உண்மைத் திருவுருவைக் காட்டினார். கண்டார் முனிவர்; கலங்கினார்; "அந்தோ! விநாயக மூர்த்தியோ இங்கு எழுந்தருளியவர் அவரையா யான் வன்மையோடு துரத்தினேன்!” என்று ஏக்கமுற்று வருந்தினார்;அவரைக் குட்டும்படி மடக்கிய கரங்களைக்கொண்டு மலையின் மேல் இடி விழுந்தாற்போல் தமது நெற்றியிலே குட்டிக்கொண்டார். "ஐயனே! ஒன்றும் உணராத அடியேன், உம்மை அந்தணச் சிறுவன் என்று எண்ணினேன்; உமது தலையில் குட்டத் துணிந்தேன்; அப் பெருங்குற்றத்திற்குக் கழுவாயாக என்னை நானே சூட்டிக் கொள்கிறேன்" என்றார், முனிவர்.

அம் மொழி கேட்ட பெருமான் புன்னகை புரிந்தார்: "மனம் வருந்தாதே" என்றார்: "இங்கு நீ செய்தவற்றையெல்லாம் சிறந்த தொரு விளையாட்டாகக் கண்டோமே யன்றிக் கோபம் கொண்டோ மில்லை. நெடுஞ் சடையுடைய எம் தந்தையார்க்கு நீ அன்பன்: ஆதலால், எமக்கும் அப்படியே. நீ வேண்டிய வரம் தருகின்றோம்; விரைந்து கேள்” என்றார். அப்பொழுது முனிவர், "ஐயனே! என்னைப்போல் உம் முன்னே நின்று. இரு கைகளாலும் முறையாக நெற்றியில் குட்டிக்கொள்வோருடைய குறைகளைக் கருணைகூர்ந்து தீர்த்தருளல் வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தார். அவ்வாறே ஆகுக" என்று விநாயகப்பெருமான் வரம் அளித்து, தமக்குரிய கணங்களோடு யாவரும் வியப்புற மறைந்தருளினார்.