முருகன் படையெடுத்தல்

bookmark

கதிரவன் உதயகிரியிலே தோன்றினான். அப்போது அரியாசனத்தில் எழுந்தருளி-யிருந்தார் அறுமுகப் பெருமான்; அருகே நின்ற அயலும் அணியும், இந்திரனும் வானவரும், முனிவர்களும் மற்றுமுள்ளோரும் கேட்க, வீரவாகுவை நோக்கி, "பாவமே புரியும் சூரனும் அசுரர் அனைவரும் இறந்துபடவும், வானவரது துயரம் நீங்கவும், வீரமகேந்திரத்திற்கு தேரைக் கொண்டுவருக" என்றார். வள்ளலாகிய முருகப் பெருமாள் பேசிய வாசகத்தைக் கேட்ட போது கடலில் மூழ்கினர்; எமது துன்பமெல்லாம் தீர்ந்த்து என்று துள்ளினர்; ஆடினர்; பாடினர். ஐயன் சேவடியைத் தலைமேற் சூடினர். அழிவில்லாத இலக்க வீர்ர்களும்,எட்டுப் பெருவீரரும் மந்தர மலைபோன்ற திண்மை வாய்ந்த வீரவாகுவும், தனித்தனியே தேர்களில் ஏறித் தேவ தேவனாகிய முருகப் பெருமானைச் சூழ்ந்தார்கள். பூதப் பெரும்படை எங்கும் நிறைந்த்து; வானவர் பூமாரி பொழிந்தார்கள். பூதர் சேய்த அட்டகாசம் எட்டுத் திசைகளிலும் சென்று நிறைந்தது. கடல் கலங்கியது; கார் மேகம் கலைந்தது; அண்ட கோளமும் உலைந்தது. இவ்வாறு வேற்படை தாங்கிய முருகவேள், ஈராயிரம் பூத வெள்ளம் ஆரவாரத்தோடு தொடர்ந்துவர, ஆகாய வழியே கடல்மீது எழுந்து சென்று, தூது சென்ற வீரவாகுவால் துயரமுற்ற இலங்கையைக் கடந்து, கருமலை போன்ற சூரன் வீற்றிருந்த மகேந்திரபுரத்தின் முன்புறம் போந்தார். அங்கு, முருகப்பெருமகன் ஆணைப்படி தேவதச்சன் மாட கூடங்களும், மண்டபங்களும், மணிப் பூஞ்சோலைகளும், தடாகங்களும், அழகிய தெருக்களும், கோடிகளிற் பெரிய கோபுரங்களும் அமைத்து, அச் சிறந்த பாடி வீட்டுக்கு ஏமகூடம் என்று பெயரிட்டான். ஏம கூடத்தின் நடுவேயுள்ள நகரத்தில் பூதவீரர் புடை சூழ வீற்திருந்தார், முருகன்.

வீரவாகுவும் பானுகோபனும் போர் புரிதல் 
அதனை அறிந்த போது நெருப்பெனக் கொதித்தான் சூரன். அண்டமும் புவனமும் சுழன்றன. "வேலனாய குமரவேளின் ஆற்றலையும், பூதப்படையின் வலிமையையும், மற்றையோர் திறமையையும் இன்னே தொலைப்பேன். பானுகோபனை அழைத்து வருக” எனப் பணித்தான் சூரன். அதையறிந்த பானு கோபன் தன் மாளிகையினின்றும் போந்து, தேரை விட்டிறங்கி, சூரன் இருந்த இடம் சென்றான்; அடி வணங்கினான்; "வீரர் பெருமானே! என்னை எதற்காக அழைத்தாய்?” என் வினவினான்.

அப்போது வீரக்கழலணிந்த மன்னவன் கூறலுற்றான்; "மைந்தனே! தாரகனைக் கொன்று, அவன் குன்றையும் அழித்த கந்தவேள், திருச்செந்துரினின்றும் புறப்பட்டு, கடல் கடந்து, நந்தி கணங்களும் பூதப்படைகளும் புடை சூழ, இந் நகரின் வடபால் வந்தடைந்தான். இந்திரன் வேண்டுகோளுக் கிசைந்து ஈசன் தன் மைந்தனாகிய கந்தனைப் பூதத் தலைவர்களுடன் இங்குப் போர் புரிய விடுத்துள்ளான். ஆதலால், மகனே! நானும் என் மைந்தனாய உன்னைக் கொண்டு வெற்றி பெறுதலே முறையாகும். இன்றே அசுரப் படைகளோடு அமர்க்களம் செல்க, ஈசன் மைந்தனையும், அவன் படைகளையும் போரில் வெல்க; வெற்றி மாலை புனைந்து கடிதின் வருக” என்றான்.

பகைவரது ஆற்றலை ஆராய்ந்தறியாத பானுகோபன் தந்தை பணித்தவாறே பெரு வில்லைக் கையில் எடுத்தான்; எவரையும் மயக்கும் மோகப்படையும் கைக்கொண்டான். காலாட்படையும் தேர்ப்படையும் கரிப்படையும் பரிப்படையும் எழுந்தன; ஆரவாரமும் எழுந்தது; கொடியும் பொடியும் மேல் எழுந்தன.

மெய்யறிவால் மேம்பட்ட வீரவாகுதேவர், முருகன் திருவருளைத் துணைக்கொண்டு மேருமலை போன்ற வில்லைக் கையில் எடுத்தார். வீரர் எண்மரும், இலக்கரும் எண்ணிறந்த பூதகணங்களும் போர்க்கோலம் கொண்டு, வானத்தை முட்டிய தேர்களில் வன்மையுடன் போந்தனர்.

இரு திறத்தவரும் நெருங்கிப் பேர் நிகழ்த்தினர்; இறந்த அசுரர் எண்ணிறந்தவர், முரிந்த காலும் தலையுமாய் உயிர் துறந்த பூதரும் அளவிறந்தவர். அசுரர் சேனை அழியக் கண்ட பானுகோபன் எழுந்தான். "கழிந்த செயலைக் குறித்துக் கவலை கொள்வதிற் பயனில்லை; யானே போர் முனையிற் சென்று, ஒரு நாழிகையில் பகைவரைப் பேரும் இல்லாமல் அழித்திடுவேன். அவ்வாறு செய்யாவிட்டால் நான் சூரன் மகன் அல்லேன்" என்று சூள் உரைத்தான்.

அந் நிலையில் வெற்றி வீரனாகிய வீரவாகு, குமரவேள் திருவடியை மனத்திற் கொண்டு, மகிழ்ச்சியுடன் துதித்து, திண்ணிய உள்ளமுடைய பானுகோபனை எதிர்த்தார். பெருந்திற வாய்ந்த வீரவாகுவும் பானுகோபனும் நிகழ்த்திய போரின் வன்மையை யாரே எடுத்துரைக்க வல்லார்? இருவர் கையிலுடி அமைந்த விற்படைகள் சக்கரம்போற் சுழன்று சரமாரி பொழிந்தன. வீரவாகுவின் வில்லினின்றும் எழுந்த அம்புகள் பள்ளத்திற் பாயும் வெள்ளம்போல் விரைந்து, நிலவுலகம்போற் பரந்து, தீயின் திறமையுற்று, ஆகாயம்போல் அழிவற்று, காற்றுப் போல் கடுகி, ஆயிரங்கோடி தலைகளை அறுத்தாலும் வெறுப்படையாமல் வேலை செய்தன.

தன் எதிரே தனி வில்லோடு நின்ற வீரனை நோக்கினான் பானுகோபன். "இன்று போர் புரிய வந்த அசுரப் பெரும் படையைக் கொன்றவன் இவனே அன்றோ? இன்னும் ஒரு நாழிகையில் இவன் உடலைச் சின்ன பின்னாமாக்குவேன்; அவ் விதம் செய்யேனாயின் உயிர் வாழ ஒருப்படேன்; நான் இவ்வுலகித் பிறந்தவனும் அல்லேன். வில்லோடு தீயில் விழுந்திடுவேன்" என்றான்; மாயம் விளைக்கும் மோகப் படையைக் கையில் எடுத்தான்; மனத்தில் அதற்குப் பூசனை புரிந்தான்; மாற்றான் சேனையையும் வீரவாகுவையும் பற்றி, "அவர் அறிவைக் கெடுத்து ஆக” என்று சொல்லி விடுத்தான். அத் திண்ணிய வெம்படை திறலுடன் சென்றது. அப்போது வீரவாகு எப் படையால் இதை ஆழிப்பது" என்று திகைத்துச் செயலற்று நின்றார். முன்னால் எழுத்த ஆலகாலம்போல் மோகப்படை எங்கும் மண்டிற்று எல்லோர் அறிவையும் அழித்தது.

உயிருக்குயிராய் நின்ற அருள் புரியும் அறுமுகப் பெருமான் அதனை அறிந்தார்; ஓர் அமோகப் படையை விரைந்து ஆக்கினார்: அதனை தேக்கி, "எம் வீரரைத் தெளிவித்து எழுப்புக: :மாற்றான் விடுத்த படையின் வன்மையைக் கெடுத்து வருக” என்று ஏவினார். வலிமை சான்ற அமோகப் பெரும்படை சென்று தாக்கிற்று. அந் நிலையில் கொடிய பானுகோபனது மோகப்படை விரைந்து ஓடிற்று. வீரரது மயக்கம் தீர்ந்தது. நிகரற்ற மோகப்படை நீர்மை யிழந்த போது, வீரவாகுவும் ஏனைய வீரரும் உடலைப் பிணித்த மயக்கம் தெளிந்து முருகவேளின் வெற்றிப்படையைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

இவற்றை செல்லாம் பார்த்தான், பானுகோபன்; வியப்புற்றான்; செருக்கு அழித்தான் துயரம் உற்றான். "இங்கு மாற்றாது அறிவை யெல்லாம் கவர்ந்தேன். மாநிலத்தில் வீழ்த்தினேன்; அன்னார் பிழைத்து அறிவு பெற்று எழுந்துவிட்டார்கள். இனி என்ன் செய்வேன்; ஐயோ! இஃது இறைவன் செயலே? அதோ வீரவாகு சிவப்படையை எடுக்கின்றான். அதை விடுவானாவின் என்னுயிர் போய்விடும். அதைத் தடுப்பதற்கு நான் சிவப்படையை எடுத்து வந்தேனில்லை. ஆதலால், வீரவாகுவை வென்றிடல் அரிது; இன்று நகரினுள்ளே சென்று, பல தெய்வப் படைகளை எடுத்து வந்து இவனை வெல்வேன். இனி இங்கு நிற்றல் தவறு." என்று எண்ணினான்; தன் நகரை நோக்கித் திரும்பினான்.

சூரன் போருக்கு எழுதல் 
"மாயையில் மறைந்து பானுகோபன் மாநகர் சேர்ந்தான். இனி நாளைக் காலையே வருவான். அவனை அப்போது விரைவில் அழித்திடுக" என்று கூறி வானவர் வீரவாகுவின்மீது விரைமலர் துவினர். அன்று நிகழ்ந்த போரில் தோற்று ஓடிய பானுகோபன், துன்பமும் பழியும் மானமும் அடைந்தான்; பெருமிதம் இழந்தான். தன் மைந்தன் அடைந்த வகையை பெருஞ்சினம் உற்றான் சூரன், "இனிப் போர் புரிவதற்கு யாரையும் அனுப்புவதில்லை. யானே படையுடன் சென்று பகைவர் வலிமையை அழிப்பேன்; வாகைமாலை சூடுவேன்” ஒன்று எண்ணினான்; வில்லையும் ஏனைய படைக்கலங்களையும் எடுத் தான்; முன்னாள் வானவர் கொடுத்த தெய்வப் படைக் கலங்களையும் கைக்கொண்டான்; கரத்திலே தோலுறை மாட்டினின் புறத்தில் அம்பறாத்தூணி தூக்கினான்; விரல்களில் பொன்னாலாகிய புட்டில் பூட்டினான். அப்பொழுது, சிங்கமுகாசுரன் மைந்தனாகிய அதிசூரனும், தாரகன் புதல்வனாகிய அசுரேந்திரனும் போர்க்கோலம் பூண்டு சூரனை அடைந்தார்கள். அவரை நோக்கி, "கடல் போன்ற பெருங்குளம் சிறு கரையில்லாவிடின் உடைத் திடும். அவ்வாறே அரும்போர் புரியும் பெரும்படைகள் இருப்பினும், காக்கும் தலைவர் இல்லையாயின் அவை கட்டழிந்து விடும். ஆதலால், நீங்கள் இருவரும் இன்று போர் புரியும் பெருஞ் சேனைக்குத் தலைவராய் முன்னே செல்க” எனப் பணித்ததன், சூரன். அவரும் வணங்கி, அப் பணியை ஏற்று விரைந்து சென்றார்கள். மதகளிகளும் தேர்களும் பரிகளும் கலந்து நெருங்கப் படையின் நடுவே, பெருமணிகள் பதித்த வயிரத் தேர்மேல் ஏறிச் சென்றான், சூரன். கருங்கடலில் ஊழித்தீவின் நடுவே ஆலகாலம் எழுந்தாற்போலச் சென்ற அசுரனைக் கண்டு வானவர் மயங்கினர்.

முருகவேள் போர்க்களம் புகுதல் 
இவ்வாறு அசுர சேனையோடு ஆகாய வழியே சூரன் தேர்ந்து வருவதை அறிந்தான் இந்திரன், உடனே எழுந்து ஓடினான். அறுமுகப பெருமான் அடிகளை வணங்கி,
"ஐயனே! முன்னாள் முதல்வன் அளித்த பெரும் படைகளோடு சூரன் இன்று போர் புரிய விரைந்து வருகின்றான். அவனை எதிர்த்து வென்று எமக்குச் சீர் அருள் வேண்டும்" என்று விண்ணப்பித்தான். உடனே செந்நிறப் பெருத்தேர் மீது ஏறி அமர்ந்தார், முருகவேள். செந்தலைப் பூதர்கள் கடலிலும் பெரிய ஆரவாரத்தோடு எழுந்தனர். அவர் பணித்தவாறே அழிவற்ற வீரவாகுவும், அவர் தம்பியரான எட்டு வீரர்களும், நூறாயிரவரும், பூதகணங்களின் தலைவரும் தேர்மீது ஏறித் திண்ணிய சேனையின் நடுவே சென்றார்கள். வீரம் நிறைந்த படைத்தலைவரை முன்னிட்டுச் சேனைகள் இவ் வண்ண்ம் செல்ல, ஈசன் அருளிய குமரவேள் அசுரப்படை நெருங்கி நின்ற போர்க்களத்தை அடைந்தார்.

சூரன் வீரவாகுவைத் தாக்குதல் 
அசுரர் சேனை குமரன் சேனையை வளைத்தது. பூதர்கள் கிளர்ந்தெழுந்தனர்; ஆரவாரம், செய்தனர்; அசுரரை உதைத்தனர். அவரும் இவர்களை எதிர்த்துத் கீரவாகுவைத்
தாக்கினார். பெரும்போர் மூண்டது. அண்டகேரளம் விண்டது. சூரனுடைய தம்பியரின் புதல்வரான படைத்தலைவர் இருவரும் இறந்தனர். அது கண்ட அசுர சேனை சிதறி ஓடிற்று. அண்டங்களை வென்ற சூரன் இவற்றைக் கண்டான்; ஊழித் தீயென உருத்து எழுந்தான். அன்னான் சீற்றத்தைக் கண்டு அயன் அஞ்சினன்; திருமால் துளங்கினன்; இந்திரன் அயர்ந்தனன்; கூற்றுவனும் கலங்கினன்; நல்லறம் நடுங் கிற்று: ஐம்பெரும் பூதங்களும் அச்சம் கொண்டன. மன்னுயி ரெல்லாம் ஏங்கித் துடித்தன.

அவ் வேளையில் பல்லாயிரங் கோடி அம்புகளைச் சூரன் அடுக்கடுக்காக விடுத்தான்; மாற்றார் வீசிய மலைகளையும் மரங்களையும் தடுத்தான்; பூதப்படையின் தலைவருடலைத் துளைத்தான். சூரன் விளைத்த போரின் கொடுமையைக் கண்டு
நீலனும் மாலியும் நெஞ்சழிந்தாக்கள்: கும்பன், நிகுல்டன் என்னும் இருவீரர் கண்ணும் பஞ்சடைந்தது. சண்டியும் தண்டியும் அஞ்சி ஏங்கினர்; வாமனும் சோமனும் வீழ்ந்து மடிந்தார்கள்.

பகைவரை நடுங்கச்செய்யும் வீரவாகு தேரூர்ந்து வந்து சூரன் எதிரே தோன்றினார்; அவரது அழகிய உருவத்தைக் கண்டபொழுது கடுங்கோபங் கொண்டான் அசுரர் கோமான், போர் புரிய நின்ற வீரவாகுவை நோக்கி, "நீ எமது வீரகேந்திரத்தை சாடினாய்; அளவிறந்த என் சுற்றத்தாரை அழித்தாய்; கணக்கற்ற சேனையைச் சிதைத்தாய்; என் மைந்தரையும் கொன்றாய்; இன்றே உன் உயிரை எடுப்பேன்; போரை முடிப்டேன். உனது வில்லின் வன்மையை அறிவேன் நான்; தெய்வப் படைக்கலத் தீறனும் தெரிவேன்; உன் உடல் வன்மையும் உணர்வேன்; தப்பாத ஒரு படைக்கலத்தால் உன்னை முடிப்பதற்குக் காலம் கருதி இருந்தேன்” என்று சொல்லிச் சூரன் விற்போர் தொடுத்தான். வீரவாகுவும் தமது வில்லை வளைத்து அம்புமணி பொழிந்தார். அப்பொழுது சூரன் பதினைந்து முத்தலை யம்புகளை விடுத்து, அவர் கையிலிருந்த வில்லை முரித்தான். வில் ஒடித்தபோது வீரவாகு சீறினார். வேற்படையொன்றை எடுத்து வீசினார்; அஃது அழியா வரம் பெற்ற சூரன் மார்பிற்பட்டு ஒடிந்தது. அது கண்ட சூரன், திருமால் முதலிய தேவர் திறமெல்லாம் ஒருங்கே கவர வல்ல தண்டாயுதத்தை எடுத்து வீரவாகுவின்மேல் வீசினான். அது விரைந்து சென்று அவர் மார்பில் தாக்கிற்று: மார்பு இருகூறலகப் பிளந்தது. குருதி வெள்ளம் ஆறாகப் பாய்ந்தது. பெருகி: குருதியும், பிளந்த மார்பும், புகைந்த மனமும், குறைந்த வலிமையும் உடையராய் வீரவாகு உடல் சேர்ந்து விழுந்தார், தேவர்கள் அஞ்சி ஓடினர்.

சூரனும் முருகனும் போர் புரிதல் 
அப்பொழுது கோடிக்கணக்கான சூரியர்கள் ஒருங்கே திரண்டு, உருவாகி, விண்ணினின்றும் இழிந்து போர்க்களத்தில் வந்தாற்போன்று குமரவேள் தோன்றினார். அவரைக் கண்டான், சூரன்; அன்று அலர்ந்த செந்தாமரை போன்ற ஆறுமுகமும், அழகிய கண்ணும், கrதில் அசைந்த குண்டலமும், தலையில் அணிந்த திருமுடியும், மணிமார்பும், பன்னிரு கைகளும், படைக்கலங்களின் ஒளியும், தண்டையும் சிலம்பும் ஒலிக்கும் திருவடியும் தெரியக் கண்டான். அண்டங்கள் ஆயிரத்தெட்டும் ஆளும் சூரனைத் தீவினையாளன் என்றே பலரும் சொல்லுவர். ஆயினும் அறுமுக வள்ளலை நேராகக் காணும் பேறு பெற்றானே அவன்! தவத்திற்கு மட்டுமா அனை தலைவன்; அறத்திற்கும் அவன் முதல்வன் அன்றோ?இன்றளவும் முனிவரும் தேவரும் எண்ணி எண்ணிக் காணாத இறைவனாய முருகனைச் சூரன் தன்னிரு கண்ணால் கண்டான் என்றல், அவன் இயற்றிய தவத்தின் பயனை யார் அறிந்து சொல்ல வல்லார்? தன் முன்னே நின்ற பெருமான் சங்கர காரணனாகிய சிவனார் திருமகனே என்று உணர்ந்தான், சூரன். உள்ளத்திற் கோபமுற்றுக் கந்தவேளை நோக்கி, "பாலனே! என்னை நீ இன்னான் என்று அறிந்திலை போலும். அன்று நீ வென்று அழித்த கிரவுஞ்ச கிரி என்னும் வலியற்ற மலையெனக் கருதினாய? நான் அளித்த செல்வத்தில் மயங்கிக் கிடந்த தரகாசுரன் என்று எண்ணினாயா? இன்று நிகழவிருக்கும் போரில் பிரம தேவனும், மாயவனும், விண்ணவர் வேந்தனும், எண்திசைப் பாலரும், இமயவல்லியும் இரக்கமுற்று வருந்த இமைப்பொழுதில் என் வில்லால் உன் வன்மையை அழிப்பேன்" என்றான்.

இவ்வாறு, சூரன் என்று பேர் பெற்ற் கொடியவன் வீரமும், வலிமையும், செருக்கும், சினமும் கொண்டு பேசியபோது, கருணை வடிவாய் நின்ற குமரவேள் புன்முறுவல் பூத்த முகத்தோடு அவனை நோக்கி, "வெற்றியுடையோம்; வீரமுடை யோம்; பெருமையுடையோம்; படைக்கலமுடையோம்; அழியா வரம் உடையோம்; அரும்பெருஞ் சேனையுடையோம் என்று அகந்தை கொள்ளாதே. அவற்றையெல்லாம் விரைவில் மாற்று வோம்” என்று சொல்லி முடிக்கு முன்னே மண்ணளந்த மாயவனைப்போல் பெரிய வில்லை எடுத்து வளைத்தான், சூரன்.

அதனைக் கண்டார், அறுமுகப் பெருமான். எங்கும் நெருங்கிச் சூழ்ந்து நின்ற அசுரப் பெரும் படையின்மீது தெய்வப் படைக்கலமாகிய சக்கராயுதத்தை விட்டார். அப் படை கொடுந் தொழில் புரியும் அசுரரைக் கொன்றது; அவர் மாயையாகிய இருளை மாற்றியது; குருதியின் நிறம் கொண்டு செங்கதிரவன் போல் விளங்கிற்று.

கருங்கடல் போல் நின்ற பெருஞ்சேனை விழுந்து ஒழிந்ததை அறிந்தான், சூரன்; மனம் மருண்டான்; தனியனாய் நின்றான்; தேர் இழந்தான்; வில் இழந்தான்; வீரன் என்னும் பேர் இழந்தான்; படை இழந்தான்; அணி இழந்தான், மணிமுடி இழந்தான்; குடையும் இழந்தான்; நாடிழந்த மன்னர்போல் நிலத்திடை நின்றான். அவன் நெஞ்சில் வெஞ்சினம் மூண்டது; உடம்பில் வேர்வை எழுந்தது; முடியணிதற்குரிய தலையை அசைத்தான்; "பாலகன் வலிமை நன்று நன்று" என்று நகைத்தான்; வெற்றி தரும் பிரமாஸ்திரத்தை எடுத்து முருகன் மேல் விடுத்தான். அப் படை நெருங்கிய பொழுது பரஞ்சுடராகிய குமரவேள் தம் கரத்திலிருந்த வேற்படையை எதிராக விட்டார். அது சென்று அவன் படையை விழுங்கிற்று.

அச் செயல் கண்டு வியப்புற்ற சூரன் திரிபுரமெரித்த சிவபெருமானது மெய்ப்படையைக் கையிலெடுத்து முறைப்படி அருச்சனை செய்து வேகமாக விட்டான். அப்போது மண்ணுலகம் நடுங்கிற்று; விசும்பிலுள்ள மேகம் இடியுமிழ்ந்து சிதறிற்று. சூரியன் துடித்தான்; சந்திரன் சுழன்றான்; மேருமலை வெடித்தது; அண்டம் பிளந்தது. இங்ஙனம் வெளிப்பட்ட சிவப்படையைக் கண்டார், முருகவேள்; அகத்திலே அன்பு கொண்டார்; "இஃது என் தந்தையின் படை” என்று. தமது செங்கையை நீட்டி வரவேற்றார்; கொடுத்தவர் வாங்கும் தன்மைபோல் அப் படையைப் பற்றினார். அந் நிலையில் சூரன், "இன்று வேற்படையின் வன்மை கண்டேன்; வில்லின் ஆற்றலும் கண்டேன்; மற்றைய படைக் கலங்களின் திறமையும் கண்டேன். இன்னும் பால் மணம் மாறாத பாலன் செய்வதைப் பஈர்ப்பேன்" என்று யாதும். பேசாமல் நின்றான்.

முருகன் கருணை காட்டுதல் 
அப்போது அறுமுகப் பெருமான் அசுரனை நோக்கி, "இங்கு உன்பால் நிறைந்து நின்ற பெருஞ்சேனை அழிந்தது. உன் வில்லாற்றலும் ஒழிந்தது; தெய்வப் படைகளும் கருணை தொலைந்தன. எல்லாம் இழந்து எளியனாய் நின்றாய். தாரகனைக் கொன்ற நெடுவேல் ஆயத்தமாய் உள்ளது. உன்னைக் கொல்வது பெரிதன்று: அரிதும் அன்று. படையிழந்த நிலையில் உன்னைக் கொல்லுதல் பழியாகும். அறப்போர் முறைப்படி உன்னை முடிக்கக் கருதிப் பொறுத்திருக்கின்றோம். பல பல பேசுதலாற் பயனென்ன? வானவரைச் சிறையினின்றும் விடுவாயாகில், உன்னுயிரைக் கவராமல் விடுவோம். அதற்கு இணங்காவிடின் உன்னை விரைவில் அழிப்போம். உன் கருத்தென்னை? கூறுக” என வினவினார்.

அம் மொழி கேட்ட சூரன், நான் படையிழந்து விட்டேன் என்று எண்ணியன்றோ இப் பாலன் வானவரைச் சிறையினின்று விட்டுவிடு என்று சொல்லத் துணிந்துவிட்டான்! சிறுபிள்ளைத் தனத்தால் இவ்வாறு செப்பினான். சாகா வரம் பெற்ற என் வெற்றியும் வீரமும் இவன் உணர்ந்தானில்லை. மலர் மாலை யணிந்த இம் முருகன் படைக்கலமற்ற என்னெதிரே நின்று எண்ணிறந்த காலம் பெரும்போர் புரியினும் என்னைக் கொல்ல வல்லனோ? இவனுடைய தந்தை கொடுத்த அழியாத வர முடையவன் அல்லனோ யான்? என்னை அவன் கொல்லுதல் அரிது; யானும் அவனை வெல்லுதல் அரிது. ஆதலால், என் நகரினுள்ளே சென்று போருக்கேற்ற சீரும் சேனையும் கொண்டு பின்னர் வந்து போர் செய்வேன்" என்று பல வகையான சூழ்ச்சிகளை மனத்திற் கொண்டு, மாயா மந்திரத்தை உன்னினான்; திடீர் என்று மறைந்தான்; பொன் மயமான மகேந்திர மாளிகையிற் புகுந்தான். மறைந்து சென்ற சூரன் செய்கையை உயிர்க்குயிராய் உறையும் முருகன் உணர்ந்தார். ஆயினும், வேற்படையை விடுத்து அவனுயிரை வாங்கக் கருதினாரல்லர், "இன்னும் தீயவன் மனந்திரும்பினால் நன்று” என்று பொறுத்திருந்தார்.

சூரனும் பானுகோபனும் 
போர்க்களத்தினின்றும் போந்து பாடி வீட்டை அடைந்தார், சூரனும் முருகவேள். பூதப்படை தெருக்களிற் சென்று அமர்ந்தது. இந்திரன் முதலாய தேவர்கள் போற்ற அரியாசனத்தில் அறுமுகப்பெருமான் ஈசனைப் போல் வீற்றிருந்தார். எவரும் அறியாவண்ணம் உரு மறைந்து சென்ற சூரன், திருமகள் போன்ற பதுமையின் மாளிகை அடைந்தான்; அங்கு மெல்லிய மஞ்சத்தில் உறங்கினான் அல்லன், யாரோடும் பேசினான் அல்ல்ன், வெம்போருக்குரிய விடயங் களையே நினைத்துக் கொண்டிருந்தான்.

அசுரர் கோமான் போர்க்களம் சென்றதும், போர் புரிந்ததும், வெறுங்கையனாய் மீண்டு வந்ததும் ஒற்றர் சென்று பானுகோபனுக்கு அறிவித்தார்கள். அப்போது அவன் தந்தையிடம் போந்து, "அரசே! இன்று நீ அமர்க்களம் சென்று அமரருக்கு ஊக்கமும், அசுரருக்கு ஏக்கமும் உண்டாக்கிவிட்டாய்; இந்திரனுக்கு மனமகிழ்ச்சியளித்தாய்! ஒரு பாலனோடும் பூத கணங்களோடும் நீ போர் புரியச் செல்லுதல் தகுமா? போனது போகட்டும். நான் சிறியனாயினும் என் சொல்லைச் சிந்தையிற் கொள்ளுதல் வேண்டும். இந்த இரவு அகன்றதும், யான் சென்று பகைவர் அனைவரையும் வென்று வருவேன்; என்னை அனுப்புக” என்று சொல்லிய பொழுது சூரன் மனமகிழ்ந்தான்; எதிரே நின்ற புதல்வனை நோக்கி, "அப்பா! பன்னிருகை படைத்த குமரனைப் பாலன் என்றெண்ணாதே. அவன் வலிமையில் ஒப்பற்றவன். அவனை எதிர்த்துப் போர் செய்ய வல்லவர் என்னைத் தவிர வேறு யாரும் இலர். வேற்படை தாங்கிய வீரனை யானே வென்றிடு கின்றேன். உனக்கு ஒன்று சொல்வேன். நீ நாளையே சேனை யோடு சென்று, முருக தூதனாக வந்து, நம் நகரத்தின் பதங் குலைத்த படைத்தலைவனைப் போருக்கு அழைத்து அவனைக் கொன்று வருக” என்றான்.

பானுகோபன் மாயப்படை தொடுத்தல் 
பகலவன் உதித்தவுடன் எழுந்தான் பானுகோபன், முறைப்படி நித்திய கருமங்களை முடித்தான்; ஒப்பற்ற மாயையை மனத்திலே தியானித்தான். அப்பொழுது மாயை அவன் முன்னே தோன்றினாள். அவள் அருளைப் பெறக் கருதிக் கை தொழுது, "என் தந்தையை ஈன்ற தாயே! முருக துரதனோடு நான் போர் செய்தேன்; மானம் இழந்தேன்; வன்மையும் கெட்டேன். நேற்றுப் போர்புரிந்து என்னை வென்ற அப் பகைவனை இன்று நான் வென்றிடல் வேண்டும் அதற்கு ஏற்ற படைக்கலம் தருவாயாக" என்று வேண்டினான், பானுகோபன். அசுரன் சொன்ன சொற்களைக் கேட்டாள், மாயை, ஒப்பற்ற மாயப்படை யொன்றை உண்டாக்கி, அவன் கையிற் கொடுத்து, "மைந்த! இப் படையை மறைந்து நின்று மாற்றார்மீது ஏவுக, இது முருக தூதனையும் மற்றையோரையும் வளைத்து அவர் அறிவை மயக்கிவிடும்;காற்றின் தொழிலையும் செய்யும். இதனால் இன்று வெற்றி உனதே, செல்க” எனப் பணித்தாள்.

மாயை மறைந்த பின்னர்ப் பானுகோபன், கனற்படை, காற்றுப்படை, கூற்றுப்படை மதிப்படை, மாற்படை, கதிர்ப்படை, அரன் படை, அயன் படை முதலியவற்றை எடுத்தான்; அப் படைக்கலங்களோடு அசுரசேனை சூழ்ந்து வர, மகேந்திர மாநகரை விட்டு, அழகிய மதிலைக் கடந்து சென்றான். இதை யறிந்த முருகவேள் வீரவாகுவை நோக்கி, "நேற்றுத் தோற்று ஓடிய சூரன் மகன் இன்று உன்னைக் கருதித் திண்மையோடு வந்துள்ளான். நீ படைத்தலைவர்களோடு நேற்றுப் போலவே சென்று மாற்றானை எதிர்த்துப் போர் புரிந்திடு; அவன் ஏவும் படைகளுக்கு எதிராக வுள்ள படைக்கலங்களை விடுத்திடு; அவ் வஞ்சகன் மாயம் புரிவானாயின் நமது வேல் விரைந்து வந்து அவன் மாயையை அழிக்கும். இப்பொழுதே சென்றிடு” என்றார். அப்பணி தலைமேற் கொண்ட வீரவாகு, அவர் பாதம் பணிந்து விடை பெற்றுப் புறப்பட்டார்.

கோடி கோடியான இடிகள் ஒன்றாகி மின்னலின் இடையே மறைந்து ஒலித்தாற் போன்று, வான் அளாவிய தோள்களையுடைய வீரவாகு, பகைவர் நடுங்கும்படி வில்லினின்றும் நானொலி எழுப்பினார். அது கண்ட பானுகோபன், "நான் அன்று போர்க்களத் தினின்று மறைந்து ஓடினேன் என்னும் வசை எங்கும் பரவிற்று. இன்றும் தப்பியோடுவேனாயின் எல்லோரும் என்னை இகழ்வர் என்று மனத்தில் எண்ணி, மாயை தந்த கொடும் படையை எடுத்தான்; அதற்குரிய பூசனை புரிந்தான்; அப் படையை நோக்கி, "யாவரும் அறியா வண்ணம் நீ பகைவரிடம் போந்து, அவர் அறிவை மயக்கி, உயிரைக் கவர்ந்து நன்னீக் கடலில் எறிந்து விடு” என்று கூறி விடுத்தான்.

அவ்வாறே அப் படைக்கலம் சென்று, பூத கணங்களையும், நூறாயிரம் வீரரையும், வாள் அணிந்த வயலீரர் எண்மரையும், பெருந்திறல் வாய்ந்த வீரவுாகுவையும் ஒருங்கே வளைத்து, அவர் அறிவை மயக்கியது; நொடிப்பொழுதில் அவரை எடுத்து ஆகயை வழியே சென்றது. மனோ வேகத்தில் பெருங் கடல்கள் ஆறும் கடந்து, அப்பால் நின்ற நன்னிக் கடலின் நடுவே எடுத்துச் சென்று, பெருஞ் சேனையை எறிந்துவிட்டு அங்கேயே காவல் செய்து நின்றது.

இத் தன்மை கண்ட பானுகோபன் மனமகிழ்ந்து, "ஒழித்தான் வீரவாகு, பூதரும் பிறரும் தொலைந்தார்; கடலிலே ஆழ்ந்தார். நமது சூழ்ச்சி வென்றது” என்று எயிறு தோன்ற நகைத்தான் பெரு மகிழ்ச்சியுற்றுப் போர்க்களத்தினின்று புறப்பட்டான். ஆகாய வழியே விரைந்து சென்றான்; திக்கெலாம் புகழ அரசு வீற்றிருந்த தந்தையைக் கண்டு, வணங்கி நின்று, "ஐயனே! இன்று யான் போர்க்களம் சென்றேன்;பெரும்போர் புரிந்தேன்; வெம்போர் நிகழ்த்திய வீரவாகுவையும் அவனைச் சார்ந்தோரையும், ஆயிரம் வெள்ளமான பூதப் படையையும் வென்றேன்; எல்லோரையும் கொன்றேன்; நன்னிக் கடலிற் கொண்டு தள்ளிவிட்டேன். இனிச் சிறிதும் உனக்குக் கவலை வேண்டா. நாளையே சேனையோடு நான் சென்று,கடலை அலைக்கும் கடுங் காற்றைப்போல் கந்தன் பாசறையைச் சுற்றி வளைத்து அதனைத் தகர்ப்பேன்; அவனையும் வெல்வேன்; மாயவனையும் பிரமனையும் இந்திரனையும் பிடித்து இங்கே கொண்டு வருவேன்” என்று கூறினான்.

அப்பொழுது சூரன் மனத்தில் இன்பம் பொங்கி எழுந்தது; தோள் நிமிர்ந்து உயர்ந்தது; புயத்திற் பூட்டிய வாகுவலயம் மூட்டறுந்தது; கையிலனிந்திருந்த கடகம் தெறித்தது: மெய்ம்மயிர் சிலிர்த்தது;புன்சிரிப்புத் தோன்றிற்று. வீரப் புதல்வனைக் கட்டி அணைத்து, "என் ஐய! அந் நாளில் நெடுந்தவம் செய்தேன்; அதற்கு ஈசன் பேரரசும் பெருந்திருவும் தந்தான். அச் செய்தி எல்லா உலகங்களிலும் பரவிற்று, அஃது ஒருபுறம் இருக்க, நான் ஆளும் அரசும் செல்வமும் இன்று நீயே தந்தாய்; நான் பெற்றேன்" என்று மெச்சினான்; "முன்னம் நீ சொல்லியவாறே அறுமுகப் பகைவனையும் நீயே வென்று,பூதப்படைகளைக் கொன்று; எஞ்சியுள்ள தேவரையும் சிறையிலே செறித்து, என் பகையை மூடித்திடு நாளைக் காலையே செல்க" எனப் பணித்தான்.

மாயப்படையை வேற்படை வெல்லுதல் 
இஃதிவ்வாறாக, "பானுகோபன் மறைந்து நின்று மாயப்படை தொடுத்து, வீரவாகு முதலிய எல்லோரையும் மயக்கி மாய்த்து, அப் படைக்கலத்தால் நன்னிக் கடலில் தள்ளினான்" என்று நாத முனிவர் முருகப் பெருமானிடம் கூறினார். பின்பு வானவர் அணி அணியாகச் சென்று, அவர் திருவடிகளை வணங்கிப் படைவீரர் அழிந்த பான்மையை அறிவித்தனர்.

அப்போது பெருமான் தம் கையில் அமைந்த வெற்றி வேலை நோக்கி, "கங்கை போன்ற தூய நன்னீர்க் கடலிற். போந்து, அங்குள்ள மாயப்படையை அறுத்து, நம் வீரரது மயக்கம் தீர்த்து, அவர்களை விரைவில் இங்கே கொண்டுவருக” எனப் பணித்தார். அப்பணி பூண்ட வெற்றிவேல் வேகமாகப் புறப்பட்ட போது ஆயிரம் கோடி கதிர்கள் எழுந்து மண்ணுலகின் இருளை மாய்த்தன; முப்புரத்தை எரிப்பதற்கு இறைவன் விடுத்த நெருப்புப் போல் விரைந்து ஓடி, அறுவகைப்பட்ட கடல்களும் கடந்து, விண்ணவர் போற்ற நன்னிக் கடலில் புகுந்தது.

வேற்படை வந்தவுடன் மாயப் படைக்கலம் நடுங்கிற்று: மயங்கிக் கிடந்த வீரரை விட்டு ஒழிந்தது;வன்மையும் இழந்தது. அந் நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த வீரர்கள் அறுமுகப் பெருமானது செவ்வேல் ஆகாய வழியே வ்ரக் கண்டார்கள். அவருள்ளத்தில் இன்பம் பொங்கிற்று. பன்முறை வேற்படையைப் பணிந்து போற்றினார்கள்! உச்சிமேற் கூப்பிய கையராய் எதிர் சென்று வரவேற்றார்கள்.

பானுகோபன் இழைத்த மாயையால் நிலையழிந்து, உணா விழந்து, நெடுங்கடலுள் விழுந்ததும், ஐயன் வேலால் மீண்டு எழுந்ததும், பிறவும் உணர்ந்தார், அறிஞருள் அறிஞரான வீரவணகு, காலத்தில் வந்து காத்தருளிய வேற்படையை நோக்கி, "அந்நாள் கொடிய அசுரனாகிய தாரகன் எங்களை வஞ்சனையால் மலையில் அடைத்து மயக்கம் விளைத்தான்; அன்றும் நீ எழுந்தருளி வந்த அறிவு தந்தாய்! அவ்வாறே இன்றும் இங்கு வந்து எம்மை ஆட் கொண்டாய்; ஆதலால் நாங்கள் பிழைத்தோம். உனக்குச் செய்யத் தக்க கைம்மாறும் இவ் வுலகில் உண்டோ? என்றார்.

வீரவாகு சொல்லிய நல்லுரையைக் கேட்ட பொழுது வேற் படை தன் வரலாற்றைக் கூறுவதாயிற்று. "நீங்கள் அறிவிழந்து மயங்கிய தன்மையை எம்பெருமான் உணர்ந்தார்; என்னை இங்கே விடுத்தார்; நான் இங்கு வரும் தன்மையை அறிந்து மாயப்படை மாய்ந்தது. ஆதலால், இனி என்னோடு வருக”என்றது, அப் படை.

"நன்று, நன்று" என்று கை தொழுதார், வீரவாகுè முக மலர்ந்தார்; தம்பியரோடும் பூதப் படை வீரர்களோடும் வேலின் பின்னே சென்றார். அப் படை விரைந்து சென்று அறுமுகன் கரத்தில் அமர்ந்தது.