எதிர்ப்பாட்டு

கிராமங்களில் மாட்டுக்காரச் சிறுவர்கள் நேரத்தைப் போக்க ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு பாடுவார்கள். அதில் வசையும், கேலியும் கலந்து இருக்கும். தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் பாடப்படுகின்றன.
ஒருவன்: வறுத்த கடலை தின்னி
வகை வகையாத் தவிடு தின்னி
சொறியாந் தவளை தின்னி
சொல்லி வாடா தெம்மாங்கை
அடுத்தவன்: எதிர்ப் பாட்டு பாடாதடா
எனக்கு வெட்கம் ஆகுதடா
சுரக்குடுக்கை வாங்கித்தாரேன்
சொல்லாதே ஓடிப்போடா
ஒருவன்: சுண்டெலி லாலா
சுடுகாட்டு மண்டெலும்பே
அண்டத்து மயிர் எலும்பே
அடக்கடா தெம்மாங்கை
சேகரித்தவர் : வாழப்பாடி சந்திரன்
இடம் : ஆத்தூர், சேலம் மாவட்டம்.
--------------