காசி

bookmark

பாடல் 651
ராகம் - சந்த்ர கெளன்ஸ்; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2 

தான தத்தன தான தானன 
தான தத்தன தான தானன 
தான தத்தன தான தானன ...... தனதான 


தார ணிக்கதி பாவி யாய்வெகு 
சூது மெத்திய மூட னாய்மன 
சாத னைக்கள வாணி யாயுறு ...... மதிமோக 

தாப மிக்குள வீண னாய்பொரு 
வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள் 
தாமு யச்செயு மேது தேடிய ...... நினைவாகிப் 

பூர ணச்சிவ ஞான காவிய 
மோது தற்புணர் வான நேயர்கள் 
பூசு மெய்த்திரு நீறி டாஇரு ...... வினையேனைப் 

பூசி மெய்ப்பத மான சேவடி 
காண வைத்தருள் ஞான மாகிய 
போத கத்தினை யேயு மாறருள் ...... புரிவாயே 

வார ணத்தினை யேக ராவுமு 
னேவ ளைத்திடு போதுமேவிய 
மாய வற்கித மாக வீறிய ...... மருகோனே 

வாழு முப்புர வீற தானது 
நீறெ ழப்புகை யாக வேசெய்த 
மாம திப்பிறை வேணி யாரருள் ...... புதல்வோனே 

கார ணக்குறி யான நீதிய 
ரான வர்க்குமு னாக வேநெறி 
காவி யச்சிவ நூலை யோதிய ...... கதிர்வேலா 

கான கக்குற மாதை மேவிய 
ஞான சொற்கும ராப ராபர 
காசி யிற்பிர தாப மாயுறை ...... பெருமாளே. 
பாடல் 652 
தந்தத் தனதன தானன தானன 
தந்தத் தனதன தானன தானன 
தந்தத் தனதன தானன தானன ...... தனதான 


மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல் 
பங்கப் படமிசை யேபனி போல்மதம் 
வந்துட் பெருகிட வேவிதி யானவ ...... னருள்மேவி 

வண்டுத் தடிகைபொ லாகியெ நாள்பல 
பந்துப் பனைபழ மோடிள நீர்குட 
மண்டிப் பலபல வாய்வினை கோலும ...... வழியாலே 

திங்கட் பதுசெல வேதலை கீழுற 
வந்துப் புவிதனி லேமத லாயென 
சிந்தைக் குழவியெ னாவனை தாதையு ...... மருள்கூரச் 

செம்பொற் றடமுலை பால்குடி நாள்பல 
பண்புத் தவழ்நடை போய்வித மாய்பல 
சிங்கிப் பெருவிழி யாரவ மாயதி ...... லழிவேனோ 

அங்கைத் தரியென வேயொரு பாலக 
னின்பக் கிருபைய தாயொரு தூண்மிசை 
அம்பற் கொடுவரி யாயிரண் யாசுர ...... னுடல்பீறி 

அண்டர்க் கருள்பெரு மான் முதி ராவணி 
சங்குத் திகிரிக ரோனரி நாரவ 
ரங்கத் திருவணை மேல்துயில் நாரணன் ...... மருகோனே 

கங்கைச் சடைமுடி யோனிட மேவிய 
தங்கப் பவளொளி பால்மதி போல்முக 
கங்குற் றரிகுழ லாள்பர மேசுரி ...... யருள்பாலா 

கந்துப் பரிமயில் வாகன மீதிரு 
கொங்கைக் குறமக ளாசையொ டேமகிழ் 
கங்கைப் பதிநதி காசியில் மேவிய ...... பெருமாளே. 
பாடல் 653 
ராகம் - சாரங்கா; தாளம் - அங்கதாளம் (8 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தக-1 

தான தந்தன தானன ...... தனதான 


வேழ முண்ட விளாகனி ...... யதுபோல 
மேனி கொண்டு வியாபக ...... மயலூறி

நாளு மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி 
நானு நைந்து விடாதருள் ...... புரிவாயே 

மாள அன்றம ணீசர்கள் ...... கழுவேற 
வாதில் வென்ற சிகாமணி ...... மயில்வீரா 

காள கண்ட னுமாபதி ...... தருபாலா 
காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே.