காஞ்சீபுரம்

bookmark

பாடல் 309
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான 


அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ் 
சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங் 
கணைதருஞ் செச்சைப் பொற்புய னத்தன் ...... குறவாணார் 

அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென் 
றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண் 
டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன் ...... குமரேசன் 

துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங் 
களைபவன் பச்சைப் பக்ஷிந டத்துந் 
துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துன் ...... புகழ்பாடிச் 

சுருதியின் கொத்துப் பத்தியு முற்றுந் 
துரியமுந் தப்பித் தத்வம னைத்துந் 
தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும் ...... படிபாராய் 

கதிபொருந் தக்கற் பித்துந டத்துங் 
கனல்தலம் புக்குச் சக்ரமெ டுக்குங் 
கடவுளும் பத்மத் தச்சனு முட்கும் ...... படிமோதிக் 

கதிரவன் பற்குற் றிக்குயி லைத்திண் 
சிறகரிந் தெட்டுத் திக்கர்வ குக்குங் 
கடகமுந் தட்டுப் பட்டொழி யக்கொன் ...... றபிராமி 

பதிவ்ரதம் பற்றப் பெற்றம கப்பெண் 
பரிவொழிந் தக்கிக் குட்படு தக்கன் 
பரிபவம் பட்டுக் கெட்டொழி யத்தன் ...... செவிபோயப் 

பணவிபங் கப்பட் டப்படி வெட்கும் 
படிமுனிந் தற்றைக் கொற்றம்வி ளைக்கும் 
பரமர்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே. 
பாடல் 310
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான 


கனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங் 
கடகசங் கத்துப் பொற்புய வெற்பன் 
கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும் ...... பொடியாக 

கறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன் 
குமரனென் றர்ச்சித் தப்படி செப்புங் 
கவிமொழிந் தத்தைக் கற்றற வுற்றும் ...... புவியோர்போய் 

குனகியுங் கைக்குக் கற்பக மொப்பென் 
றனகனென் றிச்சைப் பட்டத ளிக்குங் 
குமணனென றொப்பிட் டித்தனை பட்டிங் ...... கிரவான 

குருடுகொண் டத்தச் சத்தம னைத்துந் 
திருடியுஞ் சொற்குத் தக்கதொ டுத்துங் 
குலவியுங் கத்தப் பட்டக லக்கந் ...... தெளியாதோ 

சனகனன் புற்றுப் பெற்றம டப்பெண் 
தனிப்பெருங் கற்புச் சக்ரந டத்துந் 
தகையிலங் கைச்சுற் றத்தைமு ழுத்துஞ் ...... சுடவேவெஞ் 

சமரசண் டக்கொற் றத்தவ ரக்கன் 
கதிர்விடும் பத்துக் கொத்துமு டிக்குந் 
தனியொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங் ...... களைவோனும் 

தினகரன் சொர்க்கத் துக்கிறை சுக்ரன் 
சசிதரன் திக்குக் கத்தர கத்யன் 
திசைமுகன் செப்பப் பட்டவ சிட்டன் ...... திரள்வேதஞ் 

செகதலஞ் சுத்தப் பத்தியர் சித்தம் 
செயலொழிந் தற்றுப் பெற்றவர் மற்றும் 
சிவனும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே. 
பாடல் 311
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான 


செடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ் 
செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ் 
சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந் ...... தவிகாரம் 

திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ் 
செனனபங் கத்துத் துக்கக டற்கண் 
திருகுரும் பைப்பட் டுச்சுழல் தெப்பங் ...... கரணாதி 

குடிபுகும் பொக்கப் புக்கிலி றப்பின் 
குடிகலம்வெந் தொக்குக் கொட்டில்ம லத்தின் 
குசைசுமந் தெட்டுத் திக்கிலு முற்றுந் ...... தடுமாறுங் 

குவலயங் கற்றுக் கத்தியி ளைக்குஞ் 
சமயசங் கத்தைத் தப்பியி ருக்குங் 
குணமடைந் துட்பட் டொக்கஇ ருக்கும் ...... படிபாராய் 

படிதருங் கற்புக் கற்பக முக்கண் 
கொடிபசுஞ் சித்ரக் குத்தர முத்தம் 
பணிநிதம் பத்துச் சத்தியு கக்குங் ...... குமரேசா 

பரவசங் கெட்டெட் டக்கர நித்தம் 
பரவுமன் பர்க்குச் சித்திய ளிக்கும் 
பரமர்வந் திக்கத் தக்கப தத்தன் ...... குருநாதா 

தொடியிடும் பத்மக் கைக்குமி டைக்குஞ் 
சுருள்படும் பத்திப் பட்டகு ழற்குந் 
துகிர்கடைந் தொப்பித் திட்டஇ தழ்க்குங் ...... குறமானின் 

சுடர்படுங் கச்சுக் கட்டுமு லைக்குந் 
துவளுநெஞ் சத்தச் சுத்தஇ ருக்கும் 
சுரரும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே. 
பாடல் 312
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான 


கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன் 
றசுரர்தண் டத்தைச் செற்றவி தழ்ப்பங் 
கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும் ...... பரையாளுங் 

கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும் 
பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங் 
கரதலம் பற்றப் பெற்றவொ ருத்தன் ...... ஜகதாதை 

புனவிளந் தத்தைக் கிச்சையு ரைக்கும் 
புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும் 
புதியவன் செச்சைப் புட்பம ணக்கும் ...... பலபாரப் 

புயனெனுஞ் சொற்கற் றுப்பிற கற்கும் 
பசையொழிந் தத்தத் திக்கென நிற்கும் 
பொருடொறும் பொத்தப் பட்டதொ ரத்தம் ...... பெறுவேனோ 

அனல்விடுஞ் செக்கட் டுக்கய மெட்டும் 
பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம் 
பணிதருஞ் சித்ரத் தொற்றையு ரத்தன் ...... திடமாக 

அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன் 
றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன் 
றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண் ...... டவனீடுந் 

தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ் 
சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன் 
தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும் ...... பெரியோனுந் 

தலைவியும் பக்கத் தொக்கவி ருக்குஞ் 
சயிலமுந் தெற்குச் சற்குரு வெற்புந் 
தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே. 
பாடல் 313
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான 


தெரியலஞ் செச்சைக் கொத்து முடிக்கும் 
பரிதிகந் தத்தைச் சுற்றந டத்துஞ் 
சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங் ...... கையில்வாழுஞ் 

சிறுவனென் றிச்சைப் பட்டுப ஜிக்கும் 
படிபெரும் பத்திச் சித்ரக வித்வஞ் 
சிறிதுமின் றிச்சித் தப்பரி சுத்தம் ...... பிறவாதே 

பரிகரஞ் சுத்தத் தக்கப்ர புத்வம் 
பதறியங் கட்டப் பட்டனர் தத்வம் 
பலவையுங் கற்றுத் தர்க்கம தத்வம் ...... பழியாதே 

பரபதம் பற்றப் பெற்றஎ வர்க்கும் 
பரவசம் பற்றிப் பற்றற நிற்கும் 
பரவ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்றென் ...... துயர்போமோ 

சரியுடன் துத்திப் பத்திமு டிச்செம் 
பணதரங் கைக்குக் கட்டிய நெட்டன் 
தனிசிவன் பக்கத் தற்புதை பற்பந் ...... திரிசூலந் 

தரிகரும் பொக்கத் தக்கமொ ழிச்சுந் 
தரியரும் பிக்கப் பித்தத னத்தந் 
தரிசுரும் பிக்குப் பத்ரையெ வர்க்குந் ...... தெரியாத 

பெரியபண் டத்தைச் சத்திய பித்தன் 
பிரிதியுண் கற்புப் பச்சையெ றிக்கும் 
ப்ரபையள்தண் டிற்கைப் பத்மம டப்பெண் ...... கொடிவாழ்வே 

பிரமரண் டத்தைத் தொட்டதொர் வெற்பும் 
பிளவிடுஞ் சத்திக் கைத்தல நித்தம் 
பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே. 
பாடல் 314
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான 


புனமடந் தைக்குத் தக்கபு யத்தன் 
குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும் 
பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் ...... பிறிதேதும் 

புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம் 
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் 
பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் ...... தனைநாளும் 

சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண் 
டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந் 
தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் ...... செயல்பாடித் 

திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந் 
திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ் 
சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே 

கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம் 
கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண் 
கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் ...... திருவாயன் 

கவளதுங் கக்கைக் கற்பக முக்கண் 
திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன் 
கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் ...... றனையீனும் 

பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண் 
கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண் 
பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் ...... பணிவாரைப் 

பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும் 
பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம் 
பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே. 
பாடல் 315
ராகம் - தோடி; தாளம் - ஆதி 
(எடுப்பு - 1/2 இடம்) 

தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான 


கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ் 
சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங் 
கரவடன் கொற்றக் குக்குட வத்தன் ...... தனிவீரக் 

கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன் 
பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங் 
கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந் ...... தமிழ்பாடிக் 

குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும் 
பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென் 
குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன் ...... றிலதான 

குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங் 
குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங் 
குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங் ...... கிடையாதோ 

பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந் 
தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம் 
பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன் ...... றையும்வேணிப் 

பிறவுநின் றொக்கத் தொக்கும ணக்குஞ் 
சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண் 
பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங் ...... கயவாவி 

திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம் 
பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந் 
த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின் ...... திருவான 

தெரிவையந் துர்க்கிச் சத்தியெ வர்க்குந் 
தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண் 
சிறுவதொண் டர்க்குச் சித்திய ளிக்கும் ...... பெருமாளே. 
பாடல் 316
ராகம் - ஷண்முகப்ரியா; தாளம் - ஆதி 
(எடுப்பு - 1/2 இடம்) 

தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான 


செறிதரும் செப்பத் துற்பல வெற்பும் 
பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ் 
சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ் ...... சுடர்வேலும் 

திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந் 
தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம் 
திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் ...... படிநாடும் 

அறிவறிந் தத்தற் கற்றது செப்புங் 
கடவுளன் பத்தர்க கச்சம றுத்தன் 
பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும் ...... பெருமானென் 

றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின் 
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென் 
றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் ...... றருள்வாயே 

குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும் 
பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன் 
குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ் ...... சிறுபாலன் 

குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங் 
கனகனங் கத்திற் குத்திநி ணச்செங் 
குடர்பிடுங் கித்திக் குற்றமு கச்சிங் ...... கமுராரி 

பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண் 
துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம் 
புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன் ...... ஜகதாதை 

புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன் 
பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண் 
புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும் ...... பெருமாளே. 
பாடல் 317
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான 


அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண் 
டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென் 
றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் ...... கொருகோடி 

அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும் 
பலவியங் கொட்டச் சக்கடி கற்றந் 
தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் ...... படிபாடிப் 

பரிமுகங் கக்கச் செக்கண் விழித்தும் 
பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும் 
படுகளம் புக்குத் தொக்குந டிக்கும் ...... படிமோதிப் 

படைபொருஞ் சத்திப் பத்மநி னைத்துஞ் 
சரவணன் கச்சிப் பொற்பனெ னப்பின் 
பரவியுஞ் சித்தத் துக்குவ ரத்தொண் ...... டடைவேனோ 

பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும் 
சிறியவஞ் சிக்கொத் தெய்த்தநு சுப்பும் 
ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை துத்தங் ...... குரலாதி 

பிரிவில்கண் டிக்கப் பட்டவு ருட்டும் 
கமுகமுஞ் சிற்பச் சித்ரமு ருக்கும் 
பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந் ...... தியும்நீலக் 

கரியகொண் டற்கொப் பித்தக துப்புந் 
திலதமுஞ் செப்பொற் பட்டமு முத்தின் 
கனவடங் கட்டப் பட்டக ழுத்துந் ...... திருவான 

கருணையுஞ் சுத்தப் பச்சைவ னப்புங் 
கருதுமன் பர்க்குச் சித்திய ளிக்குங் 
கவுரியம் பைக்குப் புத்ரஎ வர்க்கும் ...... பெருமாளே. 
பாடல் 318
ராகம் - ஆரபி ; தாளம் - ஆதி (எடுப்பு - 1/2 இடம்) 

தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான 


கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும் 
பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங் 
கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந் ...... திலும்வேலும் 

கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங் 
கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங் 
களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் ...... சுழல்வேனைப் 

புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம் 
பழையகங் கைக்குற் றப்புது முத்தம் 
புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் ...... றுருகாஎப் 

பொழுதும் வந்திக்கைக் கற்றஎ னைப்பின் 
பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும் 
பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன் ...... றுளதோதான் 

அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந் 
தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந் 
தமலைதென் கச்சிப் பிச்சிம லர்க்கொந் ...... தளபாரை 

அறவிநுண் பச்சைப் பொற்கொடி கற்கண் 
டமதினுந் தித்திக் கப்படு சொற்கொம் 
பகிலஅண் டத்துற் பத்திசெய் முத்தின் ...... பொலமேருத் 

தனிவடம் பொற்புப் பெற்றமு லைக்குன் 
றிணைசுமந் தெய்க்கப் பட்டநு சுப்பின் 
தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம் ...... பையினூடே

தவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண் 
டறமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும் 
தலைவிபங் கர்க்குச் சத்யமு ரைக்கும் ...... பெருமாளே. 
பாடல் 319
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான 


தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ் 
சரியவெண் கொக்குக் கொக்கந ரைத்தந் 
தலையுடம் பெய்த்தெற் புத்தளை நெக்கிந் ...... த்ரியமாறித் 

தடிகொடுந் திக்குத் தப்பந டக்கும் 
தளர்வுறுஞ் சுத்தப் பித்தவி ருத்தன் 
தகைபெறும் பற்கொத் துக்கள னைத்துங் ...... கழலாநின் 

றசலருஞ் செச்செச் செச்செயெ னச்சந் 
ததிகளும் சிச்சிச் சிச்சியெ னத்தங் 
கரிவையும் துத்துத் துத்துவெ னக்கண் ...... டுமியாமற் 

றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங் 
கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண் 
டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் ...... றருள்வாயே 

குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண் 
டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங் 
குரகதங் கட்டிக் கிட்டிந டத்துங் ...... கதிர்நேமிக் 

குலரதம் புக்கொற் றைக்கணை யிட்டெண் 
டிரிபுரஞ் சுட்டுக் கொட்டைப ரப்புங் 
குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங் ...... கதிர்வேலா 

திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ் 
சிகரியுங் குத்துப் பட்டுவி ழத்தெண் 
டிரையலங் கத்துப் புக்குல விச்சென் ...... றெதிரேறிச் 

சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன் 
றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ் 
சிதறிநின் றொட்டிப் பொட்டெழ வெட்டும் ...... பெருமாளே. 
பாடல் 320
ராகம் - ஹிந்தோளம்; தாளம் - ஆதி 
(எடுப்பு - 1/2 இடம்) 

தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான 


புரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன் 
தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன் 
புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் ...... துரிசாளன் 

பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ் 
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் 
பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் ...... கொடியேனின் 

கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங் 
கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன் 
கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் ...... கதிர்வேலுங் 

கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும் 
பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங் 
கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் ...... டடைவேனோ 

குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங் 
கதறிவெந் துட்கக் கட்புர துட்டன் 
குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென் ...... றொருநேமிக் 

குவடொதுங் கச்சொர்க் கத்தரி டுக்கங் 
கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங் 
குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங் ...... குடியேறத் 

தரைவிசும் பைச்சிட் டித்தஇ ருக்கன் 
சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந் 
ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம் ...... பகையோடத் 

தகையதண் டைப்பொற் சித்ரவி சித்ரந் 
தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ் 
சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும் ...... பெருமாளே. 
பாடல் 321
தனதன தத்தத் தனந்த தந்தன 
தனதன தத்தத் தனந்த தந்தன 
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான 


சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில் 
சகலவி னைக்கொத் திருந்தி டும்படி 
சதிரவு றுப்புச் சமைந்து வந்தொரு ...... தந்தைதாயும் 

தரவரு பொய்க்குட் கிடந்த கந்தலி 
லுறையுமு யிர்ப்பைச் சமன்து ரந்தொரு 
தனியிலி ழுக்கப் படுந்த ரங்கமும் ...... வந்திடாமுன் 

பலவுரு வத்தைப் பொருந்தி யன்றுயர் 
படியுநெ ளிக்கப் படர்ந்த வன்கண 
படமயில் புக்குத் துரந்து கொண்டிகல் ...... வென்றிவேலா 

பரிமள மிக்கச் சிவந்த நின்கழல் 
பழுதற நற்சொற் றெரிந்து அன்பொடு 
பகர்வதி னிச்சற் றுகந்து தந்திட ...... வந்திடாயோ 

சிலையுமெ னப்பொற் சிலம்பை முன்கொடு 
சிவமய மற்றுத் திடங்கு லைந்தவர் 
திரிபுர மத்தைச் சுடுந்தி னந்திரி ...... திண்கையாளி 

திருமகள் கச்சுப் பொருந்தி டுந்தன 
தெரிவையி ரக்கத் துடன்பி றந்தவள் 
திசைகளி லொக்கப் படர்ந்தி டம்பொரு ...... கின்றஞானக் 

கலைகள ணைக்கொத் தடர்ந்து வம்பலர் 
நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய் 
கருகஇ டத்திற் கலந்தி ருந்தவள் ...... கஞ்சபாதங் 

கருணைமி குத்துக் கசிந்து ளங்கொடு 
கருதும வர்க்குப் பதங்கள் தந்தருள் 
கவுரிதி ருக்கொட் டமர்ந்த இநதிரர் ...... தம்பிரானே. 
பாடல் 322
ராகம் - சுத்த தன்யாஸி; தாளம் - ஆதி 
(எடுப்பு - 1/2 இடம்) 

தனதன தத்தத் தனந்த தந்தன 
தனதன தத்தத் தனந்த தந்தன 
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான 


தலைவலை யத்துத் தரம்பெ றும்பல 
புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி 
தருமயில் செச்சைப் புயங்க யங்குற ...... வஞ்சியோடு 

தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி 
தழுவிய செக்கச் சிவந்த பங்கய 
சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ...... னம்புகாளப் 

புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி 
தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண 
புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன ...... னம்பெறாதோ 

பொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய 
துறவனெ னத்திக் கியம்பு கின்றது 
புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை ...... தந்திடாதோ 

குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி 
யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி 
குறைவற முப்பத் திரண்ட றம்புரி ...... கின்றபேதை 

குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி 
கணபண ரத்நப் புயங்க கங்கணி 
குவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சின ...... வஞ்சிநீலி 

கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி 
கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி 
கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி ...... யெங்களாயி 

கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை 
சுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகி 
கவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர் ...... தம்பிரானே. 
பாடல் 323
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் 
தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான 


இதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத் 
தியக்கத்திற் றியக்குற்றுச் ...... சுழலாதே 

எலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற் 
றெடுத்துப்பற் றடுத்தற்பத் ...... துழலாதே 

சுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற் 
றுவக்கிற்பட் டவத்தைப்பட் ...... டயராதே 

துணைச்செப்பத் தலர்கொத்துற் பலச்செச்சைத் தொடைப்பத்திக் 
கடப்பப்பொற் கழற்செப்பித் ...... தொழுவேனோ 

கொதித்துக்குத் திரக்கொக்கைச் சதித்துப்பற் றிகைக்குட்பொற் 
குலத்தைத்குத் திரத்தைக்குத் ...... தியவேலா 

குறத்தத்தைத் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்கிக்குக் 
குலத்துக்குக் குடக்கொற்றக் ...... கொடியோனே 

கதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக்கொற் றவற்குக்கற் 
பகச்சொர்க்கப் புரப்பொற்பைப் ...... புரிவோனே 

கடுக்கைக்கட் செவிக்கற்றைச் சடைப்பக்கக் கொடிக்கற்புக் 
கடற்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 324
ராகம் - கமாஸ்; தாளம் - ஆதி - மிஸ்ரநடை (28) 
நடை - தகிட தகதிமி 

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் 
தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான 


எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப் 
பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் ...... குடில்மாயம் 

எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப் 
பிறக்கைக்குத் தலத்திற்புக் ...... கிடியாமுன் 

தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற் 
பெறச்செச்சைப் புயத்தொப்பித் ...... தணிவோனே 

செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித் 
திரட்டப்பிக் கழற்செப்பத் ...... திறல்தாராய் 

பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப் 
பணத்துட்கக் கடற்றுட்கப் ...... பொரும்வேலா 

பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப் 
பலிப்பப்பத் தருக்கொப்பித் ...... தருள்வாழ்வே 

கனிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக் 
கிடைப்புக்குக் களிப்புக்குத் ...... திரிவோனே 

கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக் 
கடற்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 325
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் 
தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான 


இறைச்சிப்பற் றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட் 
டெலுப்புக்கட் டளைச்சுற்றிச் ...... சுவர்கோலி 

எடுத்துச்செப் பெனக்கட்டிப் புதுக்குப்புத் தகத்திற்புக் 
கெனக்குச்சற் றுனக்குச்சற் ...... றெனுமாசைக் 

சிறைக்கொத்திப் பிறப்பிற்பட் டுறக்கச்சொப் பனத்துற்றுத் 
திகைக்கப்பட் டவத்தைப்பட் ...... டுழலாதுன் 

திருப்பத்மத் திறத்தைப்பற் றுகைக்குச்சித் திரத்தைச்சொற் 
றிதக்கொற்றப் புகழ்ச்செப்பித் ...... திரிவேனோ 

பிறைச்செக்கர்ப் புரைக்கொத்துச் சடைப்பச்சைக் கொடிக்கிச்சைப் 
பிறக்குற்றத் திருப்பக்கச் ...... சிவநாதர் 

பெருக்கப்புத் தடக்கைக்கற் பகத்தொப்பைக் கணத்துக்குப் 
பிரசித்தக் கொடிக்குக்டக் ...... கொடியோனே 

பறைக்கொட்டிக் களைச்சுற்றக் குறட்செக்கட் கணத்திற்குப் 
பலிக்குப்பச் சுடற்குத்திப் ...... பகிர்வேலா 

பணப்பத்திக் கணத்துத்திப் படுக்கைக்கச் சபத்திச்சைப் 
படுக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 326
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் 
தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான 


கடத்தைப்பற் றெனப்பற்றிக் கருத்துற்றுக் களித்திட்டுக் 
கயற்கட்பொற் பிணைச்சித்ரத் ...... தனமாதர் 

கலைக்குட்பட் டறக்கத்திச் சலித்துக்கட் டளைச்சொற்பொய்த் 
திரைக்குட்பட் டறச்செத்திட் ...... டுயிர்போனால் 

எடுத்துக்கொட் டிடக்கட்டைப் படத்தெட்டத் தணற்றட்டக் 
கொளுத்திச்சுற் றவர்ப்பற்றற் ...... றவர்போமுன் 

இணக்கிப்பத் திமைச்செச்சைப் பதத்தைப்பற் றுகைக்குச்சொற் 
றமிழ்க்கொற்றப் புகழ்செப்பித் ...... திரிவேனோ 

அடைத்திட்டுப் புடைத்துப்பொற் பதச்சொர்க்கத் தனைச்சுற்றிட் 
டலைப்புப்பற் றெனச்சொற்றிட் ...... டறுசூரை 

அடித்துச்செற் றிடித்துப்பொட் டெழப்பொர்ப்புப் படக்குத்திட் 
டலைத்துச்சுற் றலைத்தெற்றுக் ...... கடல்மாயப் 

புடைத்திட்டுப் படிக்குட்செற் றடப்புக்குக் கதத்துக்கக் 
கயிற்கொக்கைப் படக்குத்திப் ...... பொருவோனே 

புனத்திற்பொற் குறத்திக்குப் புணர்க்கொத்தப் பசப்பெத்திப் 
பூணர்க்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 327
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் 
தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான 


கருப்பற்றிப் பருத்தொக்கத் தரைக்குற்றிட் டுருப்பெற்றுக் 
கருத்திற்கட் பொருட்பட்டுப் ...... பயில்காலங் 

கணக்கிட்டுப் பிணக்கிட்டுக் கதித்திட்டுக் கொதித்திட்டுக் 
கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் ...... சமனாவி 

பெருக்கப்புத் தியிற்பட்டுப் புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப் 
பிணத்தைச்சுட் டகத்திற்புக் ...... கனைவோரும் 

பிறத்தற்சுற் றமுற்றுற்றிட் டழைத்துத்தொக் கறக்கத்துப் 
பிறப்புப்பற் றறச்செச்சைக் ...... கழல்தாராய் 

பொருப்புக்கர்ப் புரக்கச்சுத் தனப்பொற்புத் தினைப்பச்சைப் 
புனக்கொச்சைக் குறத்தத்தைக் ...... கினியோனே 

புரத்தைச்சுட் டெரித்துப்பற் றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப் 
புணர்த்தப்பித் தனைக்கற்பித் ...... தருள்வோனே 

செருக்கக்குக் கரைக்குத்திச் செருப்புக்குப் பிடித்தெற்றிச் 
சினத்திட்டுச் சிதைத்திட்டுப் ...... பொரும்வீரா 

திருத்தத்திற் புகற்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத் 
திருக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 328
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் 
தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான 

கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட் 
பிறக்கிட்டுப் படக்கற்பித் ...... திளைஞோர்தங் 

கழுத்தைச்சிக் கெனக்கட்டித் தனச்செப்புப் படக்குத்திட் 
டுருக்கிக்கற் பழிக்கப்பொற் ...... பெழுகாதல் 

புறப்பட்டுக் களிக்கக்கற் புதர்தைப்பிட் டரக்கிப்பொற் 
பணிக்கட்டிற் புறத்துற்றுப் ...... புணர்மாதர் 

பொருத்தத்தைத் தவிர்த்துச்சற் றிரக்ஷித்துப் புரப்பப்பொற் 
பதத்தைப்பெற் றிருக்கைக்குப் ...... பெருவேனோ 

திறற்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக் 
கரிக்குப்புத் திரற்குற்றுத் ...... தளைபூணச் 

சினத்துப்பொற் பொருப்பைப்பொட் டெழுத்தித்திக் கரித்துப்புத் 
திரத்தத்திற் சிரித்துற்றுப் ...... பலபேய்கள் 

பறிக்கப்பச் சிறைச்சிக்கட் கறிக்குப்பைச் சிரச்சிக்குப் 
பரப்பொய்க்கட் டறப்புக்குப் ...... பொருதோனே 

பணிச்செச்சைத் தொடைச்சித்ரப் புயத்துக்ரப் படைச்சத்திப் 
படைக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 329
ராகம் - பாகேஸ்ரீ; தாளம் - ஸங்கீர்ண சாபு (4 1/2) 
தக-1, திமி-1, தகதகிட-2 1/2 

தத்தத் தனதான தத்தத் ...... தனதான) 

அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை 
பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ 

வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா 
கற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே. 
பாடல் 330
ராகம் - பெஹாக்; தாளம் - அங்கதாளம் (6) 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3 
தத்தத் தத்தத் ...... தனதான 


முட்டுப் பட்டுக் ...... கதிதோறும் 
முற்றச் சுற்றிப் ...... பலநாளும் 

தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச் 
சற்றுப் பற்றக் ...... கருதாதோ 

வட்டப் புட்பத் ...... தலமீதே 
வைக்கத் தக்கத் ...... திருபாதா 

கட்டத் தற்றத் ...... தருள்வோனே 
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 331 ( காஞ்சீபுரம் )

தத்தத் தத்தத் தத்தத் தத்தத் 
தத்தத் தத்தத் ...... தனதான 


அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித் 
தத்தத் தத்தத் ...... தருவோர்தாள் 

அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத் 
தொக்குத் திக்குக் ...... குடில்பேணிச் 

செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச் 
செத்துச் செத்துப் ...... பிறவாதே 

செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச் 
செச்சைச் செச்சைக் ...... கழல்தாராய் 

துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத் 
துட்கத் திட்கப் ...... பொரும்வேலா 

சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச் 
சொர்க்கத் தத்தைக் ...... கினியோனே 

கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக் 
கத்தக் கத்தக் ...... களைவோனே 

கற்புச் சத்திப் பொற்புச் சத்திக் 
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 331

தத்தத் தத்தத் தத்தத் தத்தத் 
தத்தத் தத்தத் ...... தனதான 


அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித் 
தத்தத் தத்தத் ...... தருவோர்தாள் 

அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத் 
தொக்குத் திக்குக் ...... குடில்பேணிச் 

செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச் 
செத்துச் செத்துப் ...... பிறவாதே 

செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச் 
செச்சைச் செச்சைக் ...... கழல்தாராய் 

துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத் 
துட்கத் திட்கப் ...... பொரும்வேலா 

சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச் 
சொர்க்கத் தத்தைக் ...... கினியோனே 

கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக் 
கத்தக் கத்தக் ...... களைவோனே 

கற்புச் சத்திப் பொற்புச் சத்திக் 
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 332
தத்தத் தத்தத் தத்தத் தத்தத் 
தத்தத் தத்தத் ...... தனதான 


சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச் 
சுத்தப் பட்டிட் ...... டமுறாதே 

தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட் 
சொற்குற் றத்துத் ...... துறைநாடி 

பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற் 
றொத்துக் கித்திப் ...... பிணிமாதர் 

பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப் 
பிற்பட் டிட்டுத் ...... தளர்வேனோ 

அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத் 
தத்திக் கத்துப் ...... பலமீவாய் 

அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத் 
தைக்குச் செச்சைத் ...... தொடைசூழ்வாய் 

கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக் 
கைத்தச் சத்திப் ...... படையேவுங் 

கற்புச் சத்திப் பொற்புச் சத்திக் 
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 333
தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத் 
தத்தத் தத்தத் தனனத் ...... தனதான 


கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக் 
கொத்துற் றுக்குப் பிணியுற் ...... றவனாகிக் 

குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக் 
கொத்தைச் சொற்கற் றுலகிற் ...... பலபாஷை 

திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச் 
செற்றைச் சட்டைக் குடிலைச் ...... சுமைபேணும் 

சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத் 
திட்டத் துக்குப் புகலப் ...... பெறுவேனோ 

அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட் 
டத்ரத் தெற்றிக் கடுகப் ...... பொருசூரன் 

அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட் 
புக்குப் பட்டுத் துருமத் ...... தடைவாகத் 

தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட் 
கைக்கொட் டிட்டிட் டுடல்சிற் ...... கணமாடிச் 

சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச் 
சத்திக் கச்சிக் குமரப் ...... பெருமாளே. 
பாடல் 334
தத்தத் தத்தத் தத்தத் தத்தத் 
தத்தத் தத்தத் ...... தனதான 


தத்தித் தத்திச் சட்டப் பட்டுச் 
சத்தப் படுமைக் ...... கடலாலே 

சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத் 
தட்டுப் படுமப் ...... பிறையாலே 

சித்தத் துக்குப் பித்துற் றுச்சச் 
சித்ரக் கொடியுற் ...... றழியாதே 

செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச் 
செச்சைத் தொடையைத் ...... தரவேணும் 

கொத்துத் திக்குப் பத்துட் புக்குக் 
குத்திக் கிரியைப் ...... பொரும்வேலா 

கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக் 
கொச்சைக் குறவிக் ...... கினியோனே 

சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத் 
துக்கத் தையொழித் ...... திடும்வீரா 

சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச் 
சொக்கப் பதியிற் ...... பெருமாளே. 
பாடல் 335
ராகம் - பஹுதாரி; தாளம் - திஸ்ர ரூபகம் (5) 
(எடுப்பு - /3 0) 

தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத் 
த்தத்தத் தத்தத் ...... தனதான 


பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப் 
பொய்த்தெத்துத் தத்துக் ...... குடில்பேணிப் 

பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப் 
பொற்சித்ரக் கச்சுக் ...... கிரியார்தோய் 

துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத் 
துக்கித்துக் கெய்த்துச் ...... சுழலாதே 

சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத் 
துச்சற்றர்ச் சிக்கப் ...... பெறுவேனோ 

திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச் 
செற்பத்ரக் கொக்கைப் ...... பொரும்வேலா 

செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச் 
செச்சைக்கொத் தொப்பித் ...... தணிவோனே 

கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக் 
கட்கத்தத் தர்க்குப் ...... பெரியோனே 

கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக் 
கச்சிக்குட் சொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 336
தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத் 
தனனத்தத் தனனத்தத் ...... தனதான 


அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக் 
கணுரத்தைக் கனவெற்புத் ...... தனமேகம் 

அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித் 
திளகிக்கற் புளநெக்குத் ...... தடுமாறித் 

துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத் 
தொடியர்க்கிப் படியெய்த்துச் ...... சுழலாதே 

சுருதிப்பொற் பொருள்செக்கர்க் குரவிட்டுத் தமர்பற்றித் 
தொழுசெச்சைக் கழல்பற்றிப் ...... பணிவேனோ 

புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப் 
புனமுத்தைப் புணர்சித்ரப் ...... புயவீரா 

புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப் 
புகல்பொற்குக் குடவெற்றிக் ...... கொடியோனே 

கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக் 
கரணிச்சித் தருள்கச்சிப் ...... பதியோனே 

கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப் 
பொருசத்திக் கரசொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 337
தத்தத் தனதன தத்தத் தனதன 
தத்தத் தனதன ...... தனதான 


கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய 
மச்சக் கொடிமதன் ...... மலராலுங் 

கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை 
அச்சப் படவெழு ...... மதனாலும் 

பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது 
சொச்சத் தரமல ...... இனிதான 

பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய 
செச்சைத் தொடையது ...... தரவேணும் 

பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய 
கச்சிப் பதிதனி ...... லுறைவோனே 

பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட 
உற்றுப் பொரவல ...... கதிர்வேலா 

இச்சித் தழகிய கொச்சைக் குறமகள் 
மெச்சித் தழுவிய ...... திருமார்பா 

எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட 
வெட்டித் துணிசெய்த ...... பெருமாளே. 
பாடல் 338
தனதன தானாந்தன தனதன தானாந்தன 
தனதன தானாந்தன ...... தனதான 


கமலரு சோகம்பர முடிநடு வேய்பூங்கணை 
கலகமர் வாய்தோய்ந்தம ...... ளியின்மீதே 

களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி 
கனவிய வாரேந்தின ...... இளநீர்தோய்ந் 

தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய 
இவளுடன் மால்கூர்ந்திடு ...... மநுபோகம் 

இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள் 
இதவிய பாதாம்புய ...... மருள்வாயே 

அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர 
அதுலன நீலாம்பர ...... மறியாத 

அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள் 
அறமுறு சீகாஞ்சியி ...... லுறைவோனே 

விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய 
வெடிபடு தேவேந்திர ...... னகர்வாழ 

விரிகடல் தநமுண்டிட நிசிசரர் வேர்மாண்டிட 
வினையற வேல்வாங்கிய ...... பெருமாளே. 
பாடல் 339
ராகம் - பெஹாக்; தாளம் - அங்கதாளம் (15 1/2) 

தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 

தனன தானன தத்தன தனதன 
தானா தத்தத் ...... தனதான 


கரும மானபி றப்பற வொருகதி 
காணா தெய்த்துத் ...... தடுமாறுங் 

கலக காரண துற்குண சமயிகள் 
நானா வர்க்கக் ...... கலைநூலின் 

வரும நேகவி கற்பவி பரிதம 
னோபா வத்துக் ...... கரிதாய 

மவுன பூரித சத்திய வடிவினை 
மாயா மற்குப் ...... புகல்வாயே 

தரும வீம அருச்சுன நகுலச 
காதே வர்க்குப் ...... புகலாகிச் 

சமர பூமியில் விக்ரம வளைகொடு 
நாளோர் பத்தெட் ...... டினிலாளுங் 

குரும கீதல முட்பட வுளமது 
கோடா மற்க்ஷத் ...... ரியர்மாளக் 

குலவு தோர்கட வச்சுதன் மருககு 
மாரா கச்சிப் ...... பெருமாளே. 
பாடல் 340
தனதன தத்தத் தாந்த தானன 
தனதன தத்தத் தாந்த தானன 
தனதன தத்தத் தாந்த தானன ...... தனதான 


கலகலெ னப்பொற் சேந்த நூபுர 
பரிபுர மொத்தித் தாந்த னாமென 
கரமல ரச்சிற் றாந்தொ மாடிய ...... பொறியார்பைங் 

கடிதட முற்றுக் காந்த ளாமென 
இடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை 
கனதன பொற்பிட் டோ ங்கு மார்பொடு ...... வடமாடச் 

சலசல சச்சச் சேங்கை பூண்வளை 
பரிமள பச்சைச் சேர்ந்து லாவிய 
சலசமு கத்துச் சார்ந்த வாள்விழி ...... சுழலாடத் 

தரளந கைப்பித் தாம்ப லாரிதழ் 
குலமுகி லொத்திட் டாய்ந்த வோதியர் 
சரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய ...... ருறவாமோ 

திலதமு கப்பொற் காந்தி மாதுமை 
யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி 
சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி ...... சிவகாமி 

திரிபுவ னத்தைக் காண்ட நாடகி 
குமரிசு கத்தைப் பூண்ட காரணி 
சிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமை ...... யருள்பாலா 

அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட 
நரிகழு குப்பிச் சீர்ந்து வாயிட 
அசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர ...... முடையோனே 

அமரர்ம கட்குப் போந்த மால்கொளும் 
விபுதகு றத்திக் காண்ட வாதின 
மழகுசி றக்கக் காஞ்சி மேவிய ...... பெருமாளே. 
பாடல் 341
தத்தா தத்தா தத்தா தத்தா 
தத்தா தத்தா ...... தனதான 


கொத்தார் பற்கா லற்றே கப்பாழ் 
குப்பா யத்திற் ...... செயல்மாறிக் 

கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே 
கொட்டா விக்குப் ...... புறவாசித் 

தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன் 
அஆ உஉ...... எனவேகேள் 

செற்றே சுட்டே விட்டே றிப்போ 
மப்பே துத்துக் ...... கமறாதோ 

நித்தா வித்தா ரத்தோ கைக்கே 
நிற்பாய் கச்சிக் ...... குமரேசா 

நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர் 
நெட்டோ தத்திற் ...... பொருதோனே 

முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ 
முட்டா திட்டத் ...... தணிவோனே 

முற்றா நித்தா அத்தா சுத்தா 
முத்தா முத்திப் ...... பெருமாளே. 
பாடல் 342
தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான 


கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் ...... கொடியார்தங் 

கோலக் கச்சுக் கட்டிய முத்தத் ...... தனமேவிப் 

பாவத் துக்குத் தக்கவை பற்றித் ...... திரியாதே 

பாடப் பத்திச் சித்த மெனக்குத் ...... தரவேணும் 

மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் ...... பொரும்வேலா 

மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக் ...... கினியோனே 

சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் ...... பதியோனே 

தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே. 
பாடல் 343
ராகம் - தர்பர்; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 

தகிடதகதிமி-3 1/2 

தான தத்தனத் தான தத்தனத் 
தான தத்தனத் தான தத்தனத் 
தான தத்தனத் தான தத்தனத் ...... தனதான 


சீசி முப்புரக் காடு நீறெழச் 
சாடி நித்திரைக் கோசம் வேரறச் 
சீவன் முத்தியிற் கூட வேகளித் ...... தநுபூதி 

சேர அற்புதக் கோல மாமெனச் 
சூரி யப்புவிக் கேறி யாடுகச் 
சீலம் வைத்தருட் டேறி யேயிருக் ...... கறியாமற் 

பாசம் விட்டுவிட் டோ டி போனதுப் 
போது மிப்படிக் காகி லேனினிப் 
பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் ...... தடியேனைப் 

பார டைக்கலக் கோல மாமெனத் 
தாப ரித்துநித் தார மீதெனப் 
பாத பத்மநற் போதை யேதரித் ...... தருள்வாயே 

தேசில் துட்டநிட் டூர கோதுடைச் 
சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித் 
தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் ...... தருள்வோனே 

சீர்ப டைத்தழற் சூல மான்மழுப் 
பாணி வித்துருப் பாத னோர்புறச் 
சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் ...... குருநாதா 

காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக் 
கோவ லத்தியிற் கான நான்மறைக் 
காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் ...... புலிவேளூர்

காள அத்தியப் பால்சி ராமலைத் 
தேச முற்றுமுப் பூசை மேவிநற் 
காம கச்சியிற் சால மேவுபொற் ...... பெருமாளே. 
பாடல் 344
ராகம் - கானடா; தாளம் - ஆதி 

தத்ததன தந்த தத்ததன தந்த 
தத்ததன தந்த ...... தனதான 


நச்சரவ மென்று நச்சரவ மென்று 
நச்சுமிழ்க ளங்க ...... மதியாலும் 

நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு 
நத்திரைவ ழங்கு ...... கடலாலும் 

இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த 
இச்சிறுமி நொந்து ...... மெலியாதே 

எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கி 
இத்தனையி லஞ்ச ...... லெனவேணும் 

பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை 
பச்சைமலை யெங்கு ...... முறைவோனே 

பத்தியுட னின்று பத்திசெயு மன்பர் 
பத்திரம ணிந்த ...... கழலோனே 

கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்பு 
கச்சியில மர்ந்த ...... கதிர்வேலா 

கற்பக வனங்கொள் கற்பகவி சும்பர் 
கைத்தளைக ளைந்த ...... பெருமாளே. 
பாடல் 345
ராகம் - சாரங்கா; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
தகிடதகதிமி- 3 1/2 

தனன தத்தன தனன தத்தன 
தனன தத்தன ...... தனதான 


படிறொ ழுக்கமு மடம னத்துள 
படிப ரித்துட ...... னொடிபேசும் 

பகடி கட்குள மகழ மெய்ப்பொருள் 
பலகொ டுத்தற ...... உயிர்வாடா 

மிடியெ னப்பெரு வடவை சுட்டிய 
விதன முற்றிட ...... மிகவாழும் 

விரகு கெட்டரு நரகு விட்டிரு 
வினைய றப்பத ...... மருள்வாயே 

கொடியி டைக்குற வடிவி யைப்புணர் 
குமர கச்சியி ...... லமர்வோனே 

குரவு செச்சைவெண் முளரி புத்தலர் 
குவளை முற்றணி ...... திருமார்பா 

பொடிப டப்பட நெடிய விற்கொடு 
புரமெ ரித்தவர் ...... குருநாதா 

பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை 
பொருது ழக்கிய ...... பெருமாளே. 
பாடல் 346
தனனத்தத் தானத் தானன 
தனனத்தத் தானத் தானன 
தனனத்தத் தானத் தானன ...... தந்ததான 


மகுடக்கொப் பாடக் காதினில் 
நுதலிற்பொட் டூரக் கோதிய 
மயிரிற்சுற் றோலைப் பூவோடு ...... வண்டுபாட 

வகைமுத்துச் சோரச் சேர்நகை 
யிதழிற்சொற் சாதிப் பாரியல் 
மதனச்சொற் பாடுக் கோகில ...... ரம்பைமாதர் 

பகடிச்சொற் கூறிப் போர்மயல் 
முகவிச்சைப் பேசிச் சீரிடை 
பவளப்பட் டாடைத் தோளிரு ...... கொங்கைமேலாப் 

பணமெத்தப் பேசித் தூதிடு 
மிதயச்சுத் தீனச் சோலிகள் 
பலரெச்சிற் காசைக் காரிகள் ...... சந்தமாமோ 

தகுடத்தத் தானத் தானன 
திகுடத்தித் தீதித் தோதிமி 
தடுடுட்டுட் டாடப் பேரிகை ...... சங்குவீணை 

தடமிட்டுப் பாவக் கார்கிரி 
பொடிபட்டுப் போகச் சூரர்கள் 
தலையிற்றிட் டாடப் போர்புரி ...... கின்றவேலா 

திகிரிப்பொற் பாணிப் பாலனை 
மறைகற்புத் தேளப் பூமனை 
சினமுற்றுச் சேடிற் சாடிய ...... கந்தவேளே 

தினையுற்றுக் காவற் காரியை 
மணமுற்றுத் தேவப் பூவொடு 
திகழ்கச்சித் தேவக் கோன்மகிழ் ...... தம்பிரானே. 
பாடல் 347
ராகம் - லதாங்கி ; தாளம் - திஸ்ர த்ருபுடை (7) 

தத்தத்தத் தானன தானன 
தத்தத்தத் தானன தானன 
தத்தத்தத் தானன தானன ...... தனதான 


மக்கட்குக் கூறரி தானது 
கற்றெட்டத் தான்முடி யாதது 
மற்றொப்புக் கியாதுமொ வாதது ...... மனதாலே 

மட்டிட்டுத் தேடவோ ணாதது 
தத்வத்திற் கோவைப டாதது 
மத்தப்பொற் போதுப கீரதி ...... மதிசூடும் 

முக்கட்பொற் பாளரு சாவிய 
அர்த்தக்குப் போதக மானது 
முத்திக்குக் காரண மானது ...... பெறலாகா 

முட்டர்க்கெட் டாதது நான்மறை 
யெட்டிற்றெட் டாதென வேவரு 
முற்பட்டப் பாலையி லாவது ...... புரிவாயே 

செக்கட்சக் ராயுத மாதுலன் 
மெச்சப்புற் போதுப டாவிய 
திக்குப்பொற் பூதர மேமுதல் ...... வெருபம் 

சிட்டித்துப் பூதப சாசுகள் 
கைக்கொட்டிட் டாடம கோததி 
செற்றுக்ரச் சூரனை மார்பக ...... முதுசோரி 

கக்கக்கைத் தாமரை வேல்விடு 
செச்சைக்கர்ப் பூரபு யாசல 
கச்சுற்றப் பாரப யோதர ...... முலையாள்முன் 

கற்புத்தப் பாதுல கேழையு 
மொக்கப்பெற் றாள்விளை யாடிய 
கச்சிக்கச் சாலையில் மேவிய ...... பெருமாளே. 
பாடல் 348
தனதான தந்த தனதான தந்த 
தனதான தந்த ...... தனதான 


மயலோது மந்த நிலையாலும் வஞ்ச 
வசைபேசு கின்ற ...... மொழியாலும் 

மறிபோலு கின்ற விழிசேரு மந்தி 
மதிநேரு கின்ற ...... நுதலாலும் 

அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச 
நடையாலும் அங்கை ...... வளையாலும் 

அறிவே யழிந்து அயர்வாகி நைந்து 
அடியேன் மயங்கி ...... விடலாமோ 

மயிலேறி யன்று நொடி போதி லண்டம் 
வலமாக வந்த ...... குமரேசா 

மறிதாவு செங்கை அரனா ரிடங்கொள் 
மலைமாது தந்த ...... முருகேசா 

நயவா னுயர்ந்த மணிமாட மும்பர் 
நடுவே நிறைந்த ...... மதிசூழ 

நறைவீசு கும்ப குடமேவு கம்பை 
நகர்மீத மர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 349
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த 
தத்த தத்த தாத்த ...... தனதான 


முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர் 
முற்செ மத்து மூர்க்கர் ...... வெகுபாவர் 

முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண் 
முச்சர் மெத்த சூட்சர் ...... நகையாலே 

எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர் 
இட்ட முற்ற கூட்டர் ...... விலைமாதர் 

எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண் 
இப்ப டிக்கு மார்க்கம் ...... உழல்வேனோ 

தித்தி மித்தி மீத்த னத்த னத்த மூட்டு 
சிற்று டுக்கை சேட்டை ...... தவில்பேரி 

திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள் 
செக்க டற்கு ளாழ்த்து ...... விடும்வேலா 

கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர் 
கத்தர் பித்தர் கூத்தர் ...... குருநாதா 

கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள் 
கச்சி நத்தி நாட்கொள் ...... பெருமாளே. 
பாடல் 350
ராகம் - ஆபோகி; தாளம் - ஆதி - 2 களை 
(எடுப்பு 1/4 இடம்) 

தந்த தாத்தன தன்ன தனந்தன 
தத்தத் தத்தத் ...... தனதானா 


வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம 
யத்துக் கத்துத் ...... திரையாளர் 

வன்க லாத்திரள் தன்னை யகன்றும 
னத்திற் பற்றற் ...... றருளாலே 

தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு 
கிப்பொற் பத்மக் ...... கழல்சேர்வார் 

தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு 
வைக்கச் சற்றுக் ...... கருதாதோ 

வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு 
வெற்புப் பொட்டுப் ...... படமாசூர் 

வென்ற பார்த்திப பன்னிரு திண்புய 
வெட்சிச் சித்ரத் ...... திருமார்பா 

கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு 
கைக்குக் கற்புத் ...... தவறாதே 

கம்பை யாற்றினி லன்னை தவம்புரி 
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 351
தாந்தத்தன தானன தானன 
தாந்தத்தன தானன தானன 
தாந்தத்தன தானன தானன ...... தனதானா 


வாய்ந்தப்பிடை நீடு குலாவிய 
நீந்திப்பது மாதியை மீதினி 
லூர்ந்துற்பல வோடையில் நீடிய ...... உகள்சேலை 

வார்ந்துப்பக ழீயெதி ராகிமை 
கூர்ந்துப்பரி யாவரி சேரவை 
சேர்ந்துக்குழை யோடுச லாடிய ...... விழியாலே 

சாய்ந்துப்பனை யூணவ ரானபொ 
லாய்ந்துப்பாணி னாரிரு தாளினில் 
வீழ்ந்திப்படி போகினு மோர்மொழி ...... மறவேனே 

சார்ந்தப்பெரு நீர்வெள மாகவெ 
பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ 
காந்தப்பெரு நாதனு மாகிய ...... மதராலே 

தாந்தக்கிட தாகிட தாகிட 
தோந்திக்கிட தோதிமி தோதிமி 
சேஞ்செக்கண சேகெண சேகெண ...... வெனதாளம் 

காந்தப்பத மாறியு லாவுய 
ராந்தற்குரு நாதனு மாகியெ 
போந்தப்பெரு மான்முரு காவொரு ...... பெரியோனே 

காந்தக்கலு மூசியு மேயென 
ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு 
காஞ்சிப்பதி மாநகர் மேவிய ...... பெருமாளே. 
பாடல் 352
ராகம் - சாரங்கா; தாளம் - அங்கதாளம் (5 1/2) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 

தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த 
தனதனாத் தந்த தந்த ...... தனதான 


அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர் 
அசடர்பேய்க் கத்தர் நன்றி ...... யறியாத 

அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து 
அவரைவாழ்த் தித்தி ரிந்து ...... பொருள்தேடிச் 

சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து 
தெரிவைமார்க் குச்சொ ரிந்து ...... அவமேயான் 

திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து 
தெளியமோ க்ஷத்தை யென்று ...... அருள்வாயே 

இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து 
இடபமேற் கச்சி வந்த ...... உமையாள்தன் 

இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த 
இறைவர்கேட் கத்த குஞ்சொ ...... லுடையோனே 

குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று 
குருவியோட் டித்தி ரிந்த ...... தவமானைக் 

குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த 
குமரகோட் டத்த மர்ந்த ...... பெருமாளே.