காய்க்காத தென்னை (மலடி)

bookmark

வாசக் கருவேப்பிலே
வாங்கி வச்ச தென்னம் பிள்ளே
மட்டை புடிக்கு மின்னு
மரநெருங்கக் காய்க்கு மின்னு
நா மவுந்தேன் சில காலம்
மட்டை புடிக்காமே
மர நெருங்கக் காய்க்காமே
நா மாபாவி ஆனேனப்பா !
கோயில் கருவேப்பிலே
கொண்டு வந்த தென்னம் பிள்ளே
கொன்னை புடிக்கு மின்னு
கொலை நெருங்கக் காய்க்குமின்னு
நா குளிந்தேன் சில காலம்
கொன்னை புடிக்காமே
கொலை நெறையக்காய்க்காமே
நா கொடும்பாவி ஆனேனப்பா !

வட்டார வழக்கு : நா-நான் ; மவுந்தேன்-மகிழ்ந்தேன் ; குளிந்தேன்-குளிர்ந்தேன்.
உதவியவர் : நல்லம்மாள் சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்.
------------