சமணசமயப் புகழ்ப்பாக்கள் - 2

வஞ்சிப்பா
பார்பரவிய பருவரைத்தாய்
கார்கவினிய கதழொளியாய்
நீர்மல்கிய நீண்மலரவாய்
திறமல்கிய தேனினமுமாய்,
அதனால்
மொய்ம்மலர் துவன்றிய தேம்பாய்
மலரடியிணையை வைத்தவா மனனே. (47)
முரன்று சென்று வட்டின
நிரந்த பிண்டி நீழலுள்
பரந்த சோதி நாதனெம்
அரந்தை நீக்கு மண்ணலே. (48)
முருகவிழ்தா மரைமலர்மேன் முடியிமையோர் புடைவரவே
வருசினநா தருமறைநூல் வழிபிழையா மனமுடையார்
இருவிளைபோய் விழமுறியா வெதிரியகா தியையெறியா
நிருமலரா யருவினராய் நிலவுவர்சோ தியினிடையே. (49)
முழங்கு களியானை மூரிக் கடற்படை முறிதார் மன்னர்
வழங்கு மிடமெல்லாந் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன்
செழுந்தண்பூம் பழசையுட் சிறந்ததுநா ளுஞ்செய
வெழுந்த சேதிசத் துள்ளிருந்த வண்ணலடி
விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளுந்தொழத்
தொடர்ந்துநின் றவ்வினை துறந்துபோ மாலரோ. (50)
வினையைத் தான்மிடைந் தோட்டிநீர்
அனகைத் தானருள் காண்குறிற்
கனகத் தாமரைப் பூமிசைச்
சினனைச் சிந்திமின் செவ்வனே. (51)
அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு
நலங்கிளர் திருமணியு நன்பொன்னுங் குயின்றழகார்
இலங்கெயிற் றழலரிமா னெருத்தஞ்சே ரணையின்மேல்
இருபுடையும் இயக்கரசர் இணைக்கவரி எடுத்தெறிய
விரிதாமம் துயல்வரூஉம் வெண்குடைமூன் றுடனிழற்ற
வண்டரற்ற நாற்காதம் வகைமாண உயர்ந்தோங்கும்
தண்டளிர்ப்பூம் பிண்டிக்கீழ்த் தகைபெறவீற் றிருந்தனையே.
தாழிசை
ஒல்லாத பிறப்புணர்ந்தும் ஒளிவட்டம் புடைசூழ
எல்லார்க்கும் எதிர்முகமா யின்பஞ்சேர் திருமுகத்துள்
ஏர்மலர மணிப்பொய்கை எழிலாம்பல் பொதியவிழ
ஊர்களோ டுடன்முளைத்த ஒளிவட்டத் தமர்ந்தனையே;
கனல்வயிரங் குறடாகக் கனல்பைம்பொன் சூட்டாக
இனமணி யாரமா இயன்றிருள் இரிந்தோட
அந்தரத் துருளுநின் அலர்கதிர் அறவாழி
இந்திரனும் பணிந்தேத்த இருவிசும்பில் திகழ்ந்தன்றே;
வாடாத மணமாலை வானவர்கள் உள்ளிட்டார்
நீடாது தொழுதேத்த நிறஞ்சேர்ந்த பெருங்கண்ணு
முகிழ்பரிதி முகநோக்கி முறுவலித் துண்ணெகிழ்ந்து
திகழ்தகைய குடைபுடைசூழ் திருந்துகழல் திளைத்தன்றே.
அம்போதரங்கம்
நாற்சீர் ஈரடி
மல்லல் வையம் அடிதொழு தேத்த
அல்லல் நீத்தக் கறப்புணை யாயினை
ஒருதுணி வழிய உயிர்க்கர ணாகி
இருதுணி யொருபொருட் கியல்வகை கூறினை.
நாற்சீர் ஓரடி
ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி
வீடொடு கட்டினை விளக்கும் நின்மொழி
விருப்புறு தமனியம் விளக்கும் நின்நிறம்
ஒருத்தல் கூடுற வுஞற்றும் நின்புகழ்.
ழுச்சீரோரடி
இந்திரற்கும் இந்திரன்நீ; இணையில்லா இருக்கையைநீ;
மந்திரமொழியினைநீ; மாதவர்க்கு முதல்வனும்நீ;
அருமைசால் அறத்தினைநீ; ஆருயிரும் அளித்தனைநீ;
பெருமைசால் குணத்தினைநீ; பிறர்க்கறியாத் திறத்தினைநீ
இருசீர் ஓரடி
பரமன்நீ; பகவன்நீ; பண்பன்நீ; புண்ணியன்நீ;
உரவன்நீ; குரவன்நீ; யூழிநீ; உலகுநீ;
அருளும்நீ; அறமும்நீ; அன்பும்நீ; அணைவும்நீ;
பொருளும்நீ; பொருப்புநீ; பூமியும்நீ; புணையும்நீ;
எனவாங்கு,
சுரிதகம்
அருள்நெறி ஒருவநிற் பரவுதும் எங்கோன்
திருமிகு சிறப்பிற் பெருவரை யகலத்து
எண்மிகு தானைப் பண்ணமை நெடுந்தேர்
அண்ணல் யானைச் செங்கோல் விண்ணவன்
செருமுனை செருக்கறத் தொலைச்சி
ஒருதனி வெண்குடை ஓங்குக எனவே. (52)
தலையளவு அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா
தரவு
அலைகடற் கதிர்முத்தம் மணிவயிர மவையணிந்து
மலையுறைமா சுமந்தேந்து மணியணைமேல் மகிழ்வெய்தி
யோசனைசூழ் திருநகருண் ணுலகொருமூன் றுடனேத்த
ஈசனையா மினிதமர்ந்தங் கிருடிகட்கு மிறைவற்கும்
அருளறமே யறமாக வயலார்கள் மயலாக
இருளறநன் கெடுத்தியம்பி யிருவினைகள் கடிந்திசினோய்.
தாழிசை
துன்னாத வினைப்பகையைத் துணிசெய்யுந் துணிவினையாய்
இன்னாத பகைமுனைபோல் எரித்தடக்கு நினைப்பினால்
இருளில்லா வுணர்வென்னு மிலங்கொளியா லெரித்தனையா
யருளெல்லா மடைந்தெங்கண் ணருளுவதுன் னருளாமோ
மதிபுரைமுக் குடைநீழல் மகிழ்வெய்தி யடைந்தோரைக்
கதிர்பொருதக் கருவரைமேற் கதிர்பொருத முகம்வைத்துக்
கொன்முனைபோல் வினைநீங்கக் குளிர்நிழற்கண்
மகிழ்ந்தனிர்போ
னின்மினீ ரெனவுரைத்தல் நிருமலநின் பெருமையோ
மனைதுறந்து வளம்புகுமின் மலமறுக்கல் உறுவீரேல்
வினையறுக்க லுறுவார்க்கு விழுச்செல்வம் பழுதென்றிங்
கலகில்லாப் பெருஞ்செல்வத் தமரரசர் புடைசூழ
வுலகெல்லா முடன்றுறவா வுடைமையுநின் னுயர்வாமோ.
அராகம்
அரைசரும் அமரரும் அடிநிழல் அமர்தர
முரைசதிர் இமிழிசை முரணிய மொழியினை.
பேரெண்
அணிகிளர் அவிர்மதி யழகெழில் அவிர்சுடர்
மணியொளி மலமறு கனலி நின்னிறம்
மழையது மலியொலி மலிகடல் அலையொலி
முறைமுறை யரியது முழக்கம் நின்மொழி.
இடையெண்
வெலற்கரும் வினைப்பகை வேரொடும் வென்றனை
சொலற்கரு மெய்ப்பொருள் முழுவதும் சொல்லினை
அருவினை வெல்பவர்க் கரும்புணை ஆயினை
ஒருவனை யாகி யுலகுடன் உணர்ந்தனை.
சிற்றெண்
உலகுடன் உணர்ந்தனை உயிர்முழு தோம்பினை
நிலவுறழ் நிறத்தினை, நிழலிய லியாக்கையை
மாதவர் தாதையை, மலர்மிசை மகிழ்ந்தனை
போதிவர் பிண்டியை, புலவருட் புலவனை
எனவாங்கு,
சுரிதகம்
அருளுடை ஒருவநிற் பரவுதும் எங்கோன்
இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை
ஒருவனை வேண்ட இருநிறங் கொடுத்த
நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி
ஒற்றைச் செங்கோல் ஓச்சிக்
கொற்ற வெண்குடை நிழற்றுக எனவே. (53)
இடையளவு அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா
தரவு
பிறப்பெண்ணும் பிணிநீங்கப் பிரிவரிய வினைக்கடலை
அறப்புணையே புணையாக மறுகரைபோய்க் கரையேறி
இறப்பிலநின் அருள்புரிந்தாங் கெமக்கெல்லா மருளினையாய்
மறவாழி ஒளிமழுங்க மனையவர்க்கும் முனையவர்க்கும்
அறவாழி வலனுயரி யருள்நெறியே யருளியோய்.
தாழிசை
அருளெல்லா மகத்தடக்கி யடிநிழலை யடைந்தோர்க்குப்
பொருளெல்லாம் நீவிளங்கப் புகரில்லா வகையினால்
இருளில்லா மனஞானம் இயம்பியதுன் இயலாமோ.
தீதில்லா நயமுதலாத் திருந்தியநல் லளவைகளால்
கோதில்லா அரும்பொருளைக் குறைவின்றி யறைந்ததற்பின்
பேதில்லா வியற்காட்சி யருளியதுன் பெருமையோ.
துணையில்லாப் பிறப்பிடைக்கண் துயரெல்லாம் உடனகல
புணையில்லா உயிர்கட்குப் பொருளில்லா அருளினால்
இணையில்லா நல்லொழுக்க மிசைத்ததுநின் னிறைமையோ.
அராகம்
அருள்புரி திருமொழி அமரரும் அரசரும்
மருள்வரு மனிதரும் மகிழ்வுற இயம்பினை.
பேரெண்
பூமலர் துதைந்த பொழிலணி கொழுநிழல் தேமல ரசோகினை
தூமலர் விசும்பின் விஞ்சையர் பொழியும் மாமலர் மாரியை.
இடையெண்
காமரு கதிர்மதி முகத்தினை
சாமரை யிடையிடை மகிழ்ந்தனை
தாமரை மலர்புரை யடியினை
தாமரை மலர்மிசை ஒதுங்கினை.
சிற்றெண்
அறிவனைநீ. அதிசயன்ந.¦
யருளினைநீ. பொருளினைநீ.
உறுவனைநீ. உயர்ந்தனைநீ.
உலகினைநீ. அலகினைநீ.
எனவாங்கு,
சுரிதகம்
இணையை ஆதலின் முனைவருள் முனைவ
நினையுங் கால நின்னடி யடைதும்
ஞானமும் காட்சியும் ஒழுக்கமும் நிறைந்து
துன்னிய தீவினைத் துகள்தீர்
முன்னிய பொருளது முடிகவெமக் கெனவே. (54)
கடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு
கடையில்லா அறிவோடு ஞானமும் காட்சியும்
உடைமையா யுலகேத்த ஒண்பொருள தியல்புணர்ந்து
மறவாழி இறையவரும் மாதவரும் புடைசூழ
அறவாழி வலனுயரி யருள்நெறியே அருளியோய்.
தாழிசை
வினையென்னும் வியன்பகையை வேரோடு முடன்கீழ்ந்து
முனையவர்கள் தொழுதேத்த இருப்பதுநின் முறைமையோ.
பொருளாடல் புரியீரேல் புகர்தீரும் என அருளி
மருளானா மணியணைமேல் மகிழ்வதுநின் மாதவமோ.
வேந்தர்க்கும் முனைவர்க்கும் விலங்கிற்கும் மருள்துறவா
தோந்தீர்த் துறந்தநின் துறவரசுந் துறவாமோ.
அராகம்
முழுவதும் உணர்பவர் முனைவருள் முனைவர்கள்
தொழுதெழு துதியொலி துதைமலர் அடியினை
பேரெண்
நிழல்மணி விளையொளி நிகர்க்கும் நின்னிறம்
எழில்மதி இதுவென இகலும் நின்முகம்.
இடையெண்
கருவினை கடந்தோய்நீ.
காலனை யடர்ந்தோய்நீ.
ஒருவினையும் இல்லோய்நீ.
உயர்கதிக்கு முனைவன்நீ.
சிற்றெண்
அறவன்நீ. அமலன்நீ.
அருளும்நீ. பொருளும்நீ.
உறவுநீ. உயர்வுநீ.
உலகுநீ. அலகுநீ.
எனவாங்கு,
சுரிதகம்
அருளுடை ஒருவநின் அடியிணை பரவுதும்
இருளுடை நாற்கதி யிடர்முழு தகலப்
பாடுதற் குரிய பல்புகழ்
வீடுபே றுலகம் கூடுக எனவே. (55)
வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு
தெரிவில்லா வினைகெடுத்துத் தீவினையிற் றெரிந்தோங்கிச்
சரிவில்லா இன்பத்தால் சங்கரனும், முழுதுலகும்
தெரிந்தொன்றி யுணர்ந்தநின் திப்பியஞா னந்தன்னால்
விரிந்தெங்கும் சென்றமையால் விண்ணுமாய் மண்ணின்மிசை
தேர்வுற்ற வாரீட நான்மையினும் திரிவில்லாச்
சார்வுற்ற நன்மையினும் சதுமுகனாய் உயர்ந்தனையே.
தாழிசை
இருக்கையு நூனெறிய தியல்வகையுந் தன்னாலும்
வருந்தாத கொள்கையால் மன்னுயிரைத் தலையளிப்போய்
தொடர்த்தமுக்கும் பிணியரசன் தொடர்ந்தோட ஞானத்தால்
அடர்த்தமுக்க வென்றதுநின் அறமாகிக் காட்டுமோ.
ஏதிலா வுயிர்களை எவ்வகைக் கதியகத்தும்
காதலால் உழப்பிக்கும் காமனைக் கறுத்தவன்
வடிவுகெடச் சிந்தையால் எரித்ததூஉம் வல்வினையைப்
பொடிபட வென்றதுநின் பொறையுடைமை ஆகுமோ.
எவ்வுயிர்க்கும் ஓரியல்பே என்பவை தமக்கெல்லாம்
செவ்விய நெறிபயந்து சிறந்தோங்கு குணத்தகையாய்
கொலைத்திறத்தால் கூட்டுண்ணுங் கூற்றப்பே ரரசனு
அலைத்தவனை வென்றதுநின் அருளாகிக் கிடக்குமே
அராகம்
தாதுறு நனைசினை தழலெழில் சுழல்சுழற்
கைவகை முகைநகு தடமலர் அசோகினை
சீருறு கெழுதகு செழுமணி முழுதணி
செறியுளை விலங்கரை சணிபொனி னணையினை.
வாருறு கதிரெதிர் மரகத நிரை நிரை
வரிபுரி தௌ¤மதி வெருவரு குடையினை.
போருறு தகையன புயலுளர் வியலொளி
புதுமது நறவின புனைமலர் மழையினை.
பொறிகிளர் அமரர்கள் புகலிடம் எனமனு
பொலிமலி கலிவெலும் பொருவறும் எயிலினை
வெறிகிளர் உருவின விரைவினி னினிதெழ
வெறிவரு தெரிதக வினிதுளர் கவரியை.
விறலுணர் பிறவியை வெருவரு முறைதரு
வியலெரி கதிரென மிடலுடை ஒளியினை.
அறிவுள ரமரர்கள் அதிபதி யிதுவெனக்
கடலுடை யிடிபட வெறிவன விசையினை.
பேரெண்
மன்னுயிர் காத்தலான் மறம்விட்ட அருளினோடு
இன்னுயிர் உய்கென்ன இல்லறமும் இயற்றினையே.
புன்மைசால் அறநீக்கிப் புலவர்கள் தொழுதேத்தத்
தொன்மைசால் குணத்தினால் துறவரசாய்த் தோற்றினையே.
இடையெண்
பீடுடைய இருக்கையைநின் பெருமையே பேசாதோ
வீடுடைய நெறிமையைநின் மேனியே விளக்காதோ
ஒல்லாத வாய்மையைநின் உறுபுகழே யுரையாதோ
கல்லாத அறிவுநின் கட்டுரையே காட்டாதோ.
சிற்றெண்
அறிவினால் அளவிலைநீ. அன்பினால் அசைவிலைநீ.
செறிவினால் சிறந்தனைநீ. செம்மையால் செழுங்கதிர்நீ.
காட்சியால் கடையிலைநீ. கணஞ்சூழ்ந்த கதிர்ப்பினைநீ.
மாட்சியால் மகிழ்வினைநீ. மணிவரைபோல் வடிவினைநீ.
அளவெண்
வலம்புரி கலந்தொருபால் வால்வளை ஞிமிர்ந்தொருபால்
நலந்தரு கொடியொருபால் நலம்புணர் குணமொருபால்
தீதறு திருவொருபால் திகழொளி மணியொருபால்
போதுறு மலரொருபால் புணர்கங்கை யாறொருபால்
ஆடியின் ஒளியொருபால் அழலெரி யதுவொருபால்
மூடிய முரசொருபால் முழங்குநீர்க் கடலொருபால்
பொழிலொடு கயமொருபால் பொருவறு களிறொருபால்
எழிலுடை ஏறொருபால் இணையரி மானொருபால்.
எனவாங்கு,
சுரிதகம்
இவைமுத லாகிய இலக்கணப் பொறிகிளர்
நவையில் காட்சி நல்லறத் தலைவநின்
தொல்குணந் தொடர்ந்துநின் றேத்துதும், பல்குணப்
பெருநெறி யருளியெம் பிறவியைத் தெறுவதோர்
வரம்மிகத் தருகுவை எனநனி
பரவுதும் பரமநின் அடியிணை பணிந்தே. (59)
-------------
இந்நூல் எழுத உதவியாய் நின்ற நூல்கள்
நூல் |
ஆசிரியர் |
அருங்கலச் செப்பு |
|
ஆதிநாதர் பிள்ளைத் தமிழ் |
(கையெழுத்துப் பிரதி) |
கயாதர நிகண்டு |
கயாதரர் |
காஞ்சி மகாத்மியம் |
|
சிலப்பதிகாரம் |
இளங்கோ அடிகள் |
சிவஞானபோத மாபாடியம் |
மாதவச்சிவஞான சுவாமிகள் |
சீவக சிந்தாமணி |
திருத்தக்க தேவர் |
சிறுபஞ்சமூலம் |
காரியாசான் |
சூளாமணி |
தோலாமொழித் தேவர் |
சூடாமணி நிகண்டு |
மண்டலபுருடர் |
செவ்வந்திப் புராணம் |
|
தக்கயாகப் பரணி (உரையுடன்) |
ஒட்டக்கூடத்தர் |
திவாகர நிகண்டு |
திவாகரமுனிவர் |
தேவாரம் |
அப்பர், சம்பந்தர், சுந்தார் |
தேவீபாகவதம் |
|
திருக்கலம்பகம் |
உதீசி தேவர் |
திருக்குறள் |
திருவள்ளுவர் |
திருக்கூவப் புராணம் |
|
திருநூற்றந்தாதி |
அவிரோதியாழ்வார் |
திருமந்திரம் |
திருமூலர் |
திருவிளையாடற் புராணம் |
பரஞ்சோதி முனிவர் |
நரிவிருத்தம் |
திருத்தக்க தேவர் |
நன்னூல் |
பவணந்தி முனிவர் |
நாலடி நானூறு |
சமண முனிவர் |
நாலாயிர திவ்யப் பிரபந்தம் |
ஆழ்வார்கள் |
நீலகேசி |
அ. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் பதிப்பு |
நேமிநாதம் |
குணவீர பண்டிதர் |
பழொழி நானூறு |
மூன்றுறையரையர் |
புறநானூறு |
சங்கப் புலவர்கள் |
பெரிய புராணம் |
சேக்கிழார் |
பெளத்தமும் தமிழும் |
மயிலை சீனி. வேங்கடசாமி |
மணிமேகலை |
சீத்தலைச் சாத்தனார் |
மகாபலிபுரத்து ஜைன சிற்பம் |
சீனி. வேங்கடசாமி |
மேருமந்தர புராணம் |
வாமனுச்சாரியர் |
யாப்பருங்கலம் உரை |
அமுதசாகரர் |
யாப்பருங்கலக் காரிகை-உரை |
|
பூபுராணம் |
வே. வேங்கடராஜுலு ரெட்டியார் பதிப்பு |