சிவகாசிக் கலகம்-1

bookmark

அண்ணன் தம்பி நாலு பேராம்
அழகான ராமச்சந்திரன்
ஆனைகுத்தும் வெள்ளைத் தேவர்
அடிச்சாராம் பட்டாளத்த
பூனைகுத்து பொன்னுச்சாமி
புலியக் குத்தும் ராமச்சந்திரன்
கலங்கிடா படை திரட்டிக்
கொல்லுதாரே சிவகாசிய
கட்டக் கட்ட வெடியெடுத்து
கரு மருந்து உள்ளடச்சு
சுட்டாரே சிவகாசிய
செந்தூளாய்ப் போகும்படி
நல்ல மறத்தி பெற்ற
நடுவப் பட்டி வெள்ளையத் தேவர்
சுட்டாராம் சிவகாசிய
செந்தூளாய்ப் போகும்படி
கருந்தூளா ஆக்குச் சய்ய
வெள்ளையத் தேவர் பட்டாக்கத்தி
ஆறுமுகம் உள்ள புத்தி
சாலாட்சி அம்மன் வெற்றி

வட்டார வழக்கு: குத்தும்-கொல்லும்; கட்ட-கட்டை; சிவகாசிய-சிவகாசியை; ஆக்குச் சய்ய-ஆக்கி விட்டது ஐயா; சாலாட்சி-விசாலாட்சி.
குறிப்பு: ஆறுமுகம் என்பவர் இப்பாடலை எழுதியவராகலாம்.
-------------