தருமரைத் தேடுகிறார்கள்

அவர் ஊரில் நியாயம் தீர்த்து வைக்கும் அம்பலக்காரர். இரவு பகலாக ஊர் வழக்குகளை எல்லாம் தீர்த்து வைப்பார். ஊரில் எல்லோரும் அவரை தருமர் என்று அழைப்பார்கள். போலீசார் அவருடைய உதவியை எப்பொழுதும் நாடுவார்கள். அவர் இறந்துவிட்டபொழுது அவருடைய மகள் ஒப்பாரி சொல்லி வருந்துகிறாள்.
கவனருட கச்சேரியாம்
கவனருட கச்சேரியிலே
கெடி ராந்தா நின்னெரியும்
கெடி ராந்தா நின்னெரிய
சீமையெல்லாம் தேடுதாக
தண்ணியிலே மங்களமாம்
தர்மரோட கச்சேரியிலே
தர்மரோட கச்சேரியிலே
தனிராந்த நிண்ணெரிய
தனிராந்த நிண்ணெரிய
தாமரையே தேடுதாக
தங்கமிதியடியாம்
தர்மரோட கச்சேரியாம்
தருமருக்கு வாய்த்த பிள்ளை
தம்பி சிறுசுகளாம்
பொன்னு மிதியடியாம்
போலீசார் கச்சேரியாம்
போலீசார் கையமத்த
புள்ளை சிறுசய்யா
வட்டார வழக்கு : கவனர்-கவர்னர் ; கெடிராந்தா-விடிய விடிய எரியும் மண்ணெண்ணெய் விளக்கு ; மங்களா-பங்களா ; கையமத்த-விடை கூற.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை.
-----------