திருச்செங்கோடு

bookmark

பாடல் 585
ராகம் - ஆஹிரி ; தாளம் - ஆதி 

தந்தான தந்த தந்தான தந்த 
தந்தான தந்த ...... தனதான 


அன்பாக வந்து உன்றாள் பணிந்து 
ஐம்பூத மொன்ற ...... நினையாமல் 

அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க 
ளம்போரு கங்கள் ...... முலைதானும் 

கொந்தே மிகுந்து வண்டாடி நின்று 
கொண்டாடு கின்ற ...... குழலாரைக் 

கொண்டே நினைந்து மன்பேது மண்டி 
குன்றா மலைந்து ...... அலைவேனோ 

மன்றாடி தந்த மைந்தா மிகுந்த 
வம்பார் கடம்பை ...... யணிவோனே 

வந்தே பணிந்து நின்றார் பவங்கள் 
வம்பே தொலைந்த ...... வடிவேலா 

சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ 
செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும் 

செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த 
செங்கோ டமர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 586 
தந்தான தந்த தந்தான தந்த 
தந்தான தந்த ...... தனதான 


பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து 
பைந்தார் புனைந்த ...... குழல்மீதே 

பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற 
பங்கே ருகங்கொள் ...... முகமீதே 

மந்தார மன்றல் சந்தார மொன்றி 
வன்பாத கஞ்செய் ...... தனமீதே 

மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து 
மங்காம லுன்ற ...... னருள்தாராய் 

கந்தா அரன்றன் மைந்தா விளங்கு 
கன்றா முகுந்தன் ...... மருகோனே 

கன்றா விலங்க லொன்றாறு கண்ட 
கண்டா வரம்பை ...... மணவாளா 

செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு 
திண்டோ ள் நிரம்ப ...... அணிவோனே 

திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு 
செங்கோட மர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 587 
தந்தான தந்த தந்தான தந்த 
தந்தான தந்த ...... தனதான 


வண்டார் மதங்க ளுண்டே மயங்கி 
வந்தூரு கொண்ட ...... லதனோடும் 

வண்காம னம்பு தன்கால் மடங்க 
வன்போர் மலைந்த ...... விழிவேலும் 

கொண்டே வளைந்து கண்டார் தியங்க 
நின்றார் குரும்பை ...... முலைமேவிக் 

கொந்தா ரரும்பு நின்தாள் மறந்து 
குன்றாம லுன்ற ...... னருள்தாராய் 

பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு 
பண்போ னுகந்த ...... மருகோனே 

பண்சார நைந்து நண்போது மன்பர் 
பங்காகி நின்ற ...... குமரேசா 

செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில் 
நின்றாடி சிந்தை ...... மகிழ்வாழ்வே 

செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற 
செங்கோ டமர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 588
தனதன தனதன தனதன தனதன 
தந்தான தந்த ...... தனதான 


கரையற வுருகுதல் தருகயல் விழியினர் 
கண்டான செஞ்சொல் ...... மடமாதர் 

கலவியில் முழுகிய நெறியினி லறிவுக 
லங்காம யங்கும் ...... வினையேனும் 

உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும் 
உன்பாத கஞ்ச ...... மலர்மீதே 

உரவாடு புனைதர நினைதரு மடியரொ 
டொன்றாக என்று ...... பெறுவேனோ 

வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி 
வந்தேற இந்த்ர ...... புரிவாழ 

மதவித கஜரத துரகத பததியின் 
வன்சேனை மங்க ...... முதுமீன 

திரைமலி சலநிதி முறையிட நிசிசரர் 
திண்டாட வென்ற ...... கதிர்வேலா 

ஜெகதல மிடிகெட விளைவன வயலணி 
செங்கோ டமர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 589 
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் 
தனந்தாத் தனத்தம் ...... தனதான 


இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற் 
றிணங்காப் பசிப்பொங் ...... கனல்மூழ்கி 

இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க் 
கிரங்கார்க் கியற்றண் ...... டமிழ்நூலின் 

உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத் 
துளங்காத் திடப்புன் ...... கவிபாடி 

ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத் 
துறும்பாற் குணக்கன் ...... புறலாமோ 

கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட் 
கணைந்தாட் கணித்திண் ...... புயமீவாய் 

கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத் 
துசெங்கோட் டில்நிற்குங் ...... கதிர்வேலா 

அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க் 
கவிழ்ந்தோர்க் குணற்கொன் ...... றிலதாகி 

அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க் 
கறிந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே. 
பாடல் 590 
தனத்தந் தானன தனத்தந் தானன 
தனத்தந் தானன ...... தனதான 


கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய 
கருப்பஞ் சாறெனு ...... மொழியாலே 

கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகளள் 
கடைக்கண் பார்வையி ...... லழியாதே 

விலக்கும் போதக மெனக்கென் றேபெற 
விருப்பஞ் சாலவு ...... முடையேனான் 

வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை 
விடற்கஞ் சேலென ...... அருள்வாயே 

அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை 
அறுக்குங் கூரிய ...... வடிவேலா 

அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை 
யடுக்கும் போதக ...... முடையோராம் 

சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக 
திருச்செங் கோபுர ...... வயலூரா

திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய 
திருச்செங் கோடுறை ...... பெருமாளே. 
பாடல் 591 
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் 
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் 
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் ...... தனதான 


துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக் 
கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக் 
கொண்ட ணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் ...... திரிமானார் 

தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத் 
தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத் 
துன்ப வாழ்க்கைத் தொழிற்பண் டாட்டத் ...... துழலாதே 

கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக் 
கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக் 
கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக் ...... கிடையாநீ 

கண்டு வேட்டுப் பொருட் கொண்டாட்டத் 
தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத் 
தந்து காத்துத் திருக்கண் சாத்தப் ...... பெறுவேனோ 

வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத் 
துன்று சூர்ப்பொட் டெழச்சென் றோட்டிப் 
பண்டு வாட்குட் களிக்குந் தோட்கொத் ...... துடையோனே 

வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத் 
தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித் 
தொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத் ...... திளையோனே 

கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட் 
குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக் 
கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டிற் ...... புணர்வோனே 

கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற் 
கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக் 
கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுப் ...... பெருமாளே. 
பாடல் 592
தானனந் தானதன தானனந் தானதன 
------ 6 முறை ----- ...... தந்ததான 


நீலமஞ் சானகுழல் மாலைவண் டோ டுகதி 
நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை 

நீலபொன் சாபநுத லாசையின் தோடசையு 
நீள்முகந் தாமரையி னார்மொழிந் தாரமொழி 

நேர்சுகம் போலமு கானகந் தாரர்புய 
நேர்சுணங் காவிகிளை யேர்சிறந் தார்மலையி ...... ரண்டுபோல 

நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை 
நீடலங் காரசர மோடடைந் தார்மருவி 

நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையி 
னீலவண் டேவியநல் காமனங் காரநிறை 

நேசசந் தானஅல்குல் காமபண் டாரமுதை 
நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர் ...... சம்பையாரஞ் 

சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண 
தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை 

சாதிசந் தானெகின மார்பரந் தோகையென 
தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி 

தாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி 
தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை ...... யஞ்சியோடத் 

தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள் 
தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகு 

தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள் 
தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு 

சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு 
தானிருந் தோதஇரு வோரகம் பேறுறுக ...... விஞ்சைதாராய் 

சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை 
தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல 

தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை 
தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய் 

தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை 
தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும் ...... விந்தையோனே 

சூரசங் காரசுரர் லோகபங் காவறுவர் 
தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை 

தோளகண் டாபரம தேசிகந் தாவமரர் 
தோகைபங் காஎனவே தாகமஞ் சூழ்சுருதி 

தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர் 
சோரிகொண் டாறுவர வேலெறிந் தேநடன ...... முங்கொள்வேலா 

மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு 
வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு 

மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு 
மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர் 

மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு 
மார்பகன் காணமுடி யோனணங் கானமதி ...... யொன்றுமானை 

மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை 
வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச 

வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண 
வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி 

மாதுபங்கா மறைகு லாவுசெங் கோடைநகர் 
வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ் ...... தம்பிரானே. 
பாடல் 593 
தந்த தத்தத் தந்த தத்தத் 
தந்த தத்தத் தந்த தத்தத் 
தந்த தத்தத் தந்த தத்தத் ...... தனதான 


பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத் 
தும்ப றுத்திட் டின்று நிற்கப் 
புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் ...... கறியாமே 

பொங்கி முக்கிச் சங்கை பற்றிச் 
சிங்கி யொத்தச் சங்க டத்துப் 
புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட் ...... கொடியார்மேல் 

துன்று மிச்சைப் பண்ட னுக்குப் 
பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத் 
தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப் ...... பதிமீதே 

தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக் 
கண்டு பற்றத் தண்டை வர்க்கத் 
துங்க ரத்தப் பங்க யத்தைத் ...... தருவாயே 

குன்றெ டுத்துப் பந்த டித்துக் 
கண்சி வத்துச் சங்க ரித்துக் 
கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச் ...... சுரலோகா 

கொம்பு குத்திச் சம்ப ழுத்தித் 
திண்ட லத்திற் றண்டு வெற்பைக் 
கொண்ட முக்கிச் சண்டை யிட்டுப் ...... பொரும்வேழம் 

சென்று ரித்துச் சுந்த ரிக்கச் 
சந்த விர்த்துக் கண்சு கித்துச் 
சிந்தை யுட்பற் றின்றி நித்தக் ...... களிகூருஞ் 

செண்ப கத்துச் சம்பு வுக்குத் 
தொம்ப தத்துப் பண்பு ரைத்துச் 
செங்கு வட்டிற் றங்கு சொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 594 
தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன 
தந்தத் தனத்தந் தாத்தன ...... தனதான 


மந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழற்பின் காட்டுவர் 
மஞ்சட் பிணிப்பொன் காட்டுவ ...... ரநுராக 

வஞ்சத் திரக்கங் காட்டுவர் நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர் 
வண்பற் றிருப்புங் காட்டுவர் ...... தனபாரச் 

சந்தப் பொருப்புங் காட்டுவர் உந்திச் சுழிப்புங் காட்டுவர் 
சங்கக் கழுத்துங் காட்டுவர் ...... விரகாலே 

சண்டைப் பிணக்குங் காட்டுவர் பண்டிட் டொடுக்கங் காட்டுவர் 
தங்கட் கிரங்கங் காட்டுவ ...... தொழிவேனோ 

பந்தித் தெருக்கந் தோட்டினை யிந்துச் சடைக்கண் சூட்டுமை 
பங்கிற் றகப்பன் தாட்டொழு ...... குருநாதா 

பைம்பொற் பதக்கம் பூட்டிய அன்பற் கெதிர்க்குங் கூட்டலர் 
பங்கப் படச்சென் றோட்டிய ...... வயலூரா

கொந்திற் புனத்தின் பாட்டிய லந்தக் குறப்பெண் டாட்டொடு 
கும்பிட் டிடக்கொண் டாட்டமொ ...... டணைவோனே 

குன்றிற் கடப்பந் தோட்டலர் மன்றற் ப்ரசித்தங் கோட்டிய 
கொங்கிற் றிருச்செங் கோட்டுறை ...... பெருமாளே. 
பாடல் 595 
தத்தா தத்தா தத்தா தத்தா 
தத்தா தத்தத் ...... தனதான) 


மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே 
நிச்சார் துற்பப் ...... பவவேலை 

விட்டே றிப்போ கொட்டா மற்றே 
மட்டே யத்தத் ...... தையர்மேலே 

பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார் 
பத்தார் விற்பொற் ...... கழல்பேணிப் 

பிற்பால் பட்டே நற்பால் பெற்றார் 
முற்பா லைக்கற் ...... பகமேதான் 

செச்சா லிச்சா லத்தே றிச்சே 
லுற்றா ணித்துப் ...... பொழிலேறுஞ் 

செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய் 
நித்தா செக்கர்க் ...... கதிரேனல் 

முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள் 
முத்தார் வெட்சிப் ...... புயவேளே 

முத்தா முத்தீ யத்தா சுத்தா 
முத்தா முத்திப் ...... பெருமாளே. 
பாடல் 596 
தனத்தந் தான தானன தனத்தந் தான தானன 
தனத்தந் தான தானன ...... தனதான 


வருத்தங் காண நாடிய குணத்தன் பான மாதரு 
மயக்கம் பூண மோதிய ...... துரமீதே 

மலக்கங் கூடி யேயின வுயிர்க்குஞ் சேத மாகிய 
மரிக்கும் பேர்க ளோடுற ...... வணியாதே 

பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய 
பிறப்புந் தீர வேயுன ...... திருதாளே 

பெறத்தந் தாள வேயுயர் சுவர்க்கஞ் சேர வேயருள் 
பெலத்தின் கூர்மை யானது ...... மொழிவாயே 

இரத்தம் பாய மேனிக ளுரத்துஞ் சாடி வேல்கொடு 
எதிர்த்துஞ் சூரர் மாளவெ ...... பொரும்வேலா 

இசைக்குந் தாள மேளமெ தனத்தந் தான தானன் 
எனத்திண் கூளி கோடிகள் ...... புடைசூழத் 

திருத்தன் பாக வேயொரு மயிற்கொண் டாடி யேபுகழ் 
செழித்தன் பாக வீறிய ...... பெருவாழ்வே 

திரட்சங் கோடை வாவிகள் மிகுத்துங் காவி சூழ்தரு 
திருச்செங் கோடு மேவிய ...... பெருமாளே. 
பாடல் 597 
தான தானன தத்தன தத்தன 
தான தானன தத்தன தத்தன 
தான தானன தத்தன தத்தன ...... தனதான 


ஆல காலப டப்பைம டப்பியர் 
ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர் 
யாவ ராயினு நத்திய ழைப்பவர் ...... தெருவூடே 

ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர் 
பேசி யாசை கொடுத்தும ருட்டிகள் 
ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர் ...... பல்ருடே 

மாலை யோதிவி ரித்துமு டிப்பவர் 
சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள் 
வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள் ...... உறவாலே 

மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள் 
காம போகவி னைக்குளு னைப்பணி 
வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி ...... லுழல்வேனோ 

மேலை வானொரு ரைத்தச ரற்கொரு 
பால னாகியு தித்தொர்மு நிக்கொரு 
வேள்வி காவல்ந டத்திய கற்குரு ...... அடியாலே 

மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின் 
மாது தோள்தழு விப்பதி புக்கிட 
வேறு தாயட விக்குள் விடுத்தபி ...... னவனோடே 

ஞால மாதொடு புக்கவ னத்தினில் 
வாழும் வாலிப டக்கணை தொட்டவ 
னாடி ராவண னைச்செகு வித்தவன் ...... மருகோனே 

ஞான தேசிக சற்குரு உத்தம 
வேல வாநெரு வைப்பதி வித்தக 
நாக மாமலை சொற்பெற நிற்பதொர் ...... பெருமாளே. 
பாடல் 598 
ராகம் - சங்கராபரணம் ; தாளம் - திஸ்ர ஏகம் (3) 

தான தனத் ...... தனதான 


காலனிடத் ...... தணுகாதே 

காசினியிற் ...... பிறவாதே 

சீலஅகத் ...... தியஞான 

தேனமுதைத் ...... தருவாயே 

மாலயனுக் ...... கரியானே 

மாதவரைப் ...... பிரியானே 

நாலுமறைப் ...... பொருளானே 

நாககிரிப் ...... பெருமாளே. 
பாடல் 599 
தானா தானா தானா தானா 
தானா தானத் ...... தனதான 


தாமா தாமா லாபா லோகா 
தாரா தாரத் ...... தரணீசா 

தானா சாரோ பாவா பாவோ 
நாசா பாசத் ...... தபராத 

யாமா யாமா தேசா ரூடா 
யாரா யாபத் ...... தெனதாவி 

யாமா காவாய் தீயே னீர்வா 
யாதே யீமத் ...... துகலாமோ 

காமா காமா தீனா நீணா 
காவாய் காளக் ...... கிரியாய்கங் 

காளா லீலா பாலா நீபா 
காமா மோதக் ...... கனமானின் 

தேமார் தேமா காமீ பாகீ 
தேசா தேசத் ...... தவரோதுஞ் 

சேயே வேளே பூவே கோவே 
தேவே தேவப் ...... பெருமாளே. 
பாடல் 600 
தத்த தனதனன தத்த தனதனன 
தத்த தனதனன ...... தனதான 


அத்து கிரினலது ரத்து அலனவள 
கத்து வளர்செய்புள ...... கிதபூத 

ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி 
யத்தி யிடனுறையு ...... நெடுமாம 

ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத 
லத்து ரகசிகரி ...... பகராதே 

யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொள்நிரை 
யத்தி னிடையடிமை ...... விழலாமோ 

தத்து கவனவரி ணத்து வுபநிடவி 
தத்து முநியுதவு ...... மொழியாறுத் 

தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர் 
தத்தை தழுவியப ...... னிருதோளா 

தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர் 
தத்து மலையவுணர் ...... குலநாகந் 

தத்த மிசைமரக தத்த மனியமயில் 
தத்த விடுமமரர் ...... பெருமாளே. 
பாடல் 601 
தத்த தாத்தத் தத்த தாத்தத் 
தத்த தாத்தத் ...... தனதான 


அத்த வேட்கைப் பற்றி நோக்கத் 
தத்தை மார்க்குத் ...... தமராயன் 

பற்ற கூட்டத் திற்ப ராக்குற் 
றச்சு தோட்பற் ...... றியவோடும் 

சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச் 
சிக்கை நீக்கித் ...... திணிதாய 

சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச் 
செச்சை சாத்தப் ...... பெறுவேனோ 

கொத்து நூற்றுப் பத்து நாட்டக் 
கொற்ற வேத்துக் ...... கரசாய 

குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப் 
பொற்ப வேற்கைக் ...... குமரேசா 

தத்வ நாற்பத் தெட்டு நாற்பத் 
தெட்டு மேற்றுத் ...... திடமேவும் 

தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச் 
சத்ய வாக்யப் ...... பெருமாளே. 
பாடல் 602 
ராகம் - பீம்பளாஸ் ; தாளம் - ஆதி 
(எடுப்பு - 3/4 இடம்) 

தத்தன தத்தன தத்தன தத்தன 
தத்தன தத்தன ...... தனதான 


பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு 
பட்சிந டத்திய ...... குகபூர்வ 

பச்சிம தட்சிண வுத்தர திக்குள 
பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ் 

சித்ரக வித்துவ சத்தமி குத்ததி 
ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ் 

செப்பென வைத்துல கிற்பர வத்தெரி 
சித்தவ நுக்ரக ...... மறவேனே 

கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி 
கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல் 

கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி 
கட்டிய ணைத்தப ...... னிருதோளா 

சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத 
கப்பனு மெச்சிட ...... மறைநூலின் 

தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய 
சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே. 
பாடல் 603 
ராகம் - நவரஸ கன்னட; தாளம் - ஆதி 

தத்ததன தான தத்ததன தான 
தத்ததன தான ...... தனதான 


புற்புதமெ னாம அற்பநிலை யாத 
பொய்க்குடில்கு லாவு ...... மனையாளும் 

புத்திரரும் வீடு மித்திரரு மான 
புத்திசலி யாத ...... பெருவாழ்வு 

நிற்பதொரு கோடி கற்பமென மாய 
நிட்டையுடன் வாழு ...... மடியேன்யான் 

நித்தநின தாளில் வைத்ததொரு காதல் 
நிற்கும்வகை யோத ...... நினைவாயே 

சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத 
சக்ரகதை பாணி ...... மருகோனே 

தர்க்சமண் மூகர் மிக்ககழு வேற 
வைத்தவொரு காழி ...... மறையோன 

கற்புவழு வாது வெற்படியின் மேவு 
கற்றைமற வாணர் ...... கொடிகோவே 

கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால 
கற்பதரு நாடர் ...... பெருமாளே. 
பாடல் 604 
தத்தத்தத் தத்தத் தத்தத் 
தத்தத்தத் தத்தத் தத்தத் 
தத்தத்தத் தத்தத் தத்தத் ...... தனதான 


பொற்சித்ரப் பச்சைப் பட்டுக் 
கச்சிட்டுக் கட்டிப் பத்மப் 
புட்பத்துக் கொப்பக் கற்பித் ...... திளைஞோர்கள் 

புட்பட்டுச் செப்பத் துப்பற் 
கொத்தப்பொற் றித்தத் திட்பப் 
பொற்பிற்பெற் றுக்ரச் சக்ரத் ...... தனமானார் 

கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித் 
தத்திற்புக் கிட்டப் பட்டுக் 
கைக்குத்திட் டிட்டுச் சுற்றித் ...... திரியாமல் 

கற்றுற்றுச் சித்திக் கைக்குச் 
சித்திப்பப் பக்ஷத் திற்சொற் 
கற்பித்தொப் பித்துக் கொற்றக் ...... கழல்தாராய் 

குற்சித்துக் கொட்டுக் கொட்டுத் 
துக்கச்சத் துக்குக் குக்குக் 
குக்குக்குக் குக்குக் குக்குக் ...... கெனமாறா 

குட்சிக்குப் பக்ஷிக் கைக்குக் 
கக்ஷத்திற் பட்சத் தத்தக் 
கொட்டிச்சுட் டிக்கொக் ரிக்குக் ...... குடதாரி 

சற்சித்துத் தொற்புத் திப்பட் 
சத்தர்க்கொப் பித்தட் சத்துச் 
சத்தத்தைச் சத்திக் கொச்சைப் ...... பதிவாழ்வே 

தக்ஷப்பற் றுக்கெர்ப் பத்திற் 
செற்பற்றைச் செற்றிட் டுச்சச் 
சற்பப்பொற் றைக்குட் சொக்கப் ...... பெருமாளே. 
பாடல் 605 
ராகம் - சந்தர கெளன்ஸ்; தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 

தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன 
தனன தனதன தனதன தனதன ...... தனதான 


கொடிய மறலியு மவனது கடகமு 
மடிய வொருதின மிருபதம் வழிபடு 
குதலை யடியவ னினதருள் கொடுபொரு ...... மமர்காண 

குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு 
மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ் 
கொடியு மகிலமும் வெளிபட இருதிசை ...... யிருநாலும் 

படியு நெடியன எழுபுண ரியுமுது 
திகிரி திகிரியும் வருகென வருதகு 
பவுரி வருமொரு மரகத துரகத ...... மிசையேறிப் 

பழய அடியவ ருடனிமை யவர்கண 
மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு 
பரவ வருமதி லருணையி லொருவிசை ...... வரவேணும் 

சடில தரவிட தரபணி தரதர 
பரசு தரசசி தரசுசி தரவித 
தமரு கமிருக தரவனி தரசிர ...... தரபாரத் 

தரணி தரதநு தரவெகு முககுல 
தடினி தரசிவ சுதகுண தரபணி 
சயில விதரண தருபுர சசிதரு ...... மயில்வாழ்வே 

நெடிய வுடலரு இருளெழ நிலவெழ 
எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி 
நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ ...... நெடுவானும் 

நிலனும் வெருவர வருநிசி சரர்தள 
நிகில சகலமு மடியவொர் படைதொடு 
நிருப குருபர சுரபதி பரவிய ...... பெருமாளே.