நடுகை-3

bookmark

ஒரு சிறு நிலச்சுவானின் வயலில் நடுகை நடக்கிறது. பெண்கள் வேகமாக வேலையை முடித்துச் செல்லுவதற்காக அகலமாக நடுகிறார்கள். அவ்வாறு நட்டால் விளைச்சல் குறையும். அதைக் கண்ட நிலச்சுவான் அவர்களைக் கெஞ்சி நெருக்கி நடவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறான். அவர்களுக்குக் கோபம் வராமல் இருக்க நயமாக அவர்களுடைய அழகை அவர்களது காதலன் புகழ்ந்து போற்றுவதாகச் சொல்லுகிறான். ஒருத்தியின் தண்டைக்கால் அழகைக் கண்டு அவளது காதலன் ஐந்து மாதம் கொஞ்சினானாம். மற்றொருத்தியின் கொண்டை அழகைக் கண்டு அவளது காதலன் ஆறுமாதம் கொஞ்சினானாம். இவ்வாறு அவர்களது உள்ளத்தைக் குளிர்வித்து தன் ஏழ்மை நிலையையும் சொல்லி நெருக்கி நட வேண்டிக் கொள்கிறான்.

நாலு மூலை வயலுக்குள்ளே
நாத்து நடும் பொம்பிளே
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு
பெண்டுகளே! பெண்டுகளே!
தண்டு போட்ட பெண்டுகளே!-உன்
கொண்டை அழகைக் கண்டு
கொஞ்சுறானாம் ஆறுமாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

உதவியவர்: செல்வராஜு; சேகரித்தவர்: கு. சின்ன்ப்ப பாரதி
இடம்: மடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
---------