நடுகை-4

ஆவுடைத் தங்கம் என்ற பெயருடைய சங்கரன் கோவில் தெய்வம் ஆவுடையம்மன். கூட்டமாக நின்று வயலில் பெண்கள் நாற்று நடுகிறார்கள். கூட்டமாக வேலை செய்யும் பொழுது உற்சாகம் பிறக்கிறதல்லவா? அதுவும் வேலைக்குரிய கூலியைக் குறைக்காமல் அன்போடு அழைத்துக் கொடுக்கும் ஆவுடைத் தங்கத்தின் வயலில் நடுகை நடுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி பிறக்கிறது. ஒரு பெண் பாடத் தொடங்கினாள்; மற்றைப் பெண்களும் சேர்ந்து பாடுகிறார்கள்.
ஆராளு நூறாளு
அருபத்தி ரெண்டாளு
ஆவுடைத் தங்கம் கையாளு
ஆல வட்டம் போடு தில்ல
அம்பது ஆள வச்சு
ஆதரவா வேலை வாங்கி
கூப்பிட்டுப் பேரு போடும்
குணமுள்ள ஆவுத்தங்கம்
வட்டார வழக்கு: ஆராளு-யார் ஆள்?; ஆல வட்டம்-கூட்டமாகச் சேர்ந்திருக்கும் அழகு; ஆவுத்தங்கம்-ஆவுடைத் தங்கம் என்பது.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-----------