நடுநாட்டுத் திருப்பதிகள் - 2

1. திருவயிந்திரபுரம்
அன்பணிந்த சிந்தையரா யாய்ந்த மலர்தூவி
முன்பணிந்து நீரெமக்கு மூர்த்தியரே - என்பா
எமையிந் திரபுரத்தார்க் கின்றொண்ட ரானார்
தமையிந் திரபுரத்தார் தாம். (72)
2. திருக்கோவலூர்
தாமரையா னாதியாய்த் தரவரங்க ளீறான
சேம வுயிருஞ் செகமனைத்தும் - பூமடந்தைக்
காங்கோவ லாயுதன்பின் னாக வவதரித்த
பூக்கோவ லரயன் பொருள். (73)
நடுநாட்டுத் திருப்பதிகள் முற்றும்.