படை திரண்டு எழுதல்

bookmark

முருகவேள் பெரியதொரு தேரின்மீது எழுந்தருளினார். அவர் அருளைப் பெற்ற வீரர்கள் அருகே வந்து சேர்ந்தார்கள். முனிவரும் தேவரும் முறையாகச் சூழ்ந்து நின்றார்கள். திருநீறும் கண்டிகையும் அணிந்தவர்கள்; சிவபெருமானையன்றி மற்றெவரையும் தெய்வமாக மனத்திலும் கருதாதவர்கள்;மாற்றார் உயிரைப் பலியாக உண்டவர்கள்; கூற்றுவனது வீரப்படையையும் வெற்றி கொள்ளும் திறலுடையவர்கள்; இத்தகைய பூதப்படை வீரர்கள் தத்தம் தலைவரோடு திரண்டெழுந்து சண்முகப் பெருமானை அடைந்து, கையெடுத்துத் தொழுது துதித்துப் பெருங்கடல் உடைந்தாற் போன்று ஆரவாரித்தார்கள். அப்போது முருகவேள் நெடுங்கடலின் நடுவே இலங்கும் சூரியன் போலப் பரந்த சேனை சூழ்ந்துவரக் கயிலாய மலையை விட்டு நிலவுலகத்தில் வந்தருளினார்.

கிரவுஞ்ச மலையின் தன்மையை முருகவேள் அறிதல் 
வழியில், கிரவுஞ்சம் என்னும் மலை நிமிர்ந்து ஓங்கி நின்றது. அதைக் கண்டு வானவர், மனம் பதைத்தார். இந்திரன் கலக்கங் கொண்டு நின்றான். அப்போது நாரதர் முருகப்
பெருமானது மலரடி தொழுது, "ஐயனே! இதுதான் மலையின் கிரவுஞ்சம் என்னும் மலை. இதன் பக்கத்திலுள்ள மாய மாநகரில் சூரன் தம்பியாகிய தாரகன் முருகவேள் வாழ்கின்றான். இக் கொடியவன் திருமாலின் நேமிப்படையைப் பொன்னாரமெனப் பூண்டவன். இவனைக் கொன்றுவிட்டால்,மூத்தவனாகிய சூரனை வென்றிடல் எளிதாகும்” என்று மொழிந்தார். அது கேட்ட குமரவேள், "இவனை இங்கேயே அழிப்போம்” என்றார்.

வீரவாகுவைப் போர் செய்ய அனுப்புதல் 
வானவர் பெருமகிழ்வடைய, அருகே நின்ற மெய்யருள் வீரவணகுவைப் பெற்ற வீரவாகு தேவரை நோக்கி, "அதோ நிற்கும் மலையே கிரவுஞ்ச மலையாம். அதன் பக்கத்தில் உள்ள கோட்டையுள், நிறைந்த அசுரப்படைகளுடன் தாரகன் என்னும் அசுரன் அமர்ந்திருக்கின்றான். பூதப்படைகளோடு நீ போந்து அவன் கோட்டையை வளைத்திடு; தடுத்துப் போர் புரியும் அசுர சேனையைப் படுத்திடு; பாவியாகிய தாரகன் வந்தால் போர் தொடுத்திடு; அவனைக் கொல்லுதல் அரிதாயின் நாம் வந்து முடித்திடுவோம். முன்னே செல்க" என முருகப் பெருமான் பணித்தார். வீரவாகு தேவரும் வீரரும் முருகவேளை மும்முறை வலம் வந்து தொழுது, விடை பெற்று, ஆயிரம் வெள்ளமாகக் கூடி மகிழ்ந்து சென்றார்கள். இவ் வண்ணம் படைவீரரோடும் பூதர்களோடும் எழுந்து சென்ற வீரவாகு தேவர், யானை முகத்தைக் கொண்ட தாரகாசுரன் கொடுங்கோல் ஆட்சி புரிந்த மாய மாநகரை அடைந்தார்.

தாரகாசுரன் எதிர்த்தல் 
உடனே, பூதப்படைகள் நகரத்தின் உள்ளே புகுந்து, எதிர்த்த தரகாசுரன் அசுரரோடு நின்று போர் புரிந்தன. அதை யறிந்த தூதாகள் அரண்மனைககு ஒடிச சென்று, தாரகனை " வணங்கி, "ஐயனே! உம் தமையன் சிறை வைத்துள்ள வானவரை விடுவிக்கச் சிவபெருமான் மைந்தனாகிய கந்தன் என்பவன் வந்துள்ளான். அவன் அசுரரை வெல்வான் என்று ஆகாய வழியே சென்ற தேவர்கள் சொல்லக் கேட்டோம். அன்னார் சொல்லிய வண்ணமே கந்தன் வந்துள்ளான். அவன் படை நமது நகரத்தை அழித்தது" என்றார்கள். அப்பொழுது ஊழித்தீயில் நெய்க்கடல் விழுந்தால் எழும் தீக்கொழுந்து போல உயர்ந்த அரியாசனத்தினின்றும் மலை போன்ற மகுடம் அண்ட கோளத்தை முட்டும்படி எழுந்தான்,தாரகன். வெற்றி முரசம் முதலிய வாத்தியங்கள் முழங்கின. மன்னர் மன்னனாகிய தாரகன், சேனையோடு வரக் கண்ட பூதப் பெரும்படைகள், சீற்றம் கொண்டு ஆரவாரித்து, கட்லில் சென்று பாயும் ஆறுகள் போலப் பல மரங்களையும் ஆயுதங்களையும் மலைகளையும் கையில் ஏந்தி எதிரே சென்றன. திருமால் விடுத்த நேமிப்படையை ஆரமாகக் கழுத்தில் அணிந்த தாரகன் பூதப் பெரும் படையைக் கொன்று குவித்தான். அவனை எதிர்த்துப் போர் செய்வதற்கு ஏற்ற வலிமை தம்மிடம் இல்லை என்று அறிந்த பூத கணத் தலைவர்கள் மனம் உடைந்து சிதறியோடினர்.

தாரகனும் வீரவாகுவும் போர் செய்தல் 
அது கண்டு, உயர்ந்தோர் புகழும் திறம் வாய்ந்த வீரவாகு தேவர் பெரிய மரம் போன்ற வில்லை வளைத்துத் தாரணிந்து எதிரே நின்ற தாரகனைப் பார்த்து, "அழியாத் திறமை கொண்டு அமர் புரிந்த பூததையும் வில்லாளரையும் வென்று விட்டோம் என்று எண்ணினாயோ? இதோ! நின் உயிரை உண்பேன்" என்று வீரமொழி பேசினார். அது கேட்ட தாரகன், "அரியை நரி வெல்லுமாயின் நீயும் என்னை வெல்வாய் திருமாலைப் போர்க்களத்தில் வென்றேன். அவன் நேமிப் படையைக் கழுத்தில் அணிந்தேன். என் வலிமையைச் சிறிதும் எண்ணிப் பாராமல் "கொல்வேன்" என்று வீரம் பேசினை” என்று இகழ்ந்துரைத்தான். அந் நிலையில் மாயைக்குரிய மந்திரத்தைத் தாரகன் மனத்திலே நினைத்தான்; அதன் பயனாக எண்ணிறந்த வடிவங்களைக் கொண்டான்; எங்கும் இருள் பரவினாற் போல எல்லையற்ற படைக்கலங்களை ஏவி, ஒருவனாக நின்று போர் புரிந்தான். அப்பொழுது, வீரவாகு தேவர் ஒரு வீரப் பெரும்படையை விடுத்து மாயையை விலக்கினார். தாரகன் புறங்காட்டி ஓடினான். வீரவாகு முருகப் பெருமானைச் சிந்தித்து அவனைப் பின் தொடர்ந்தார். மாயையின் இருப்பிடமாகிய கிரவுஞ்ச மலையின் ஒரு குகையிலே சென்று ஒளித்தான், தாரகாசுரன், கோபமுற்ற வீரவாகு தேவர், இது மாய மலை" என்றெண்ணிக்கொண்டு திகைத்து நின்றபோது, அம் மலை, மயக்கம் தரும் உறக்கத்தை உண்டாக்கி, அவர் அறிவை மயக்கிற்று.

இங்ஙனம் வெற்றி வீரனாகிய வீரவாகு தேவரும் மற்றைய வீரர்களும் மயக்கமுற்ற நிலை கண்டு தாரகன் வெளிப்பட்டான் ; மாற்றாரை உற்று நோக்கினான்: "நம் மாயையால் இவர் எல்லோரும் ஒழிந்தார் என்று,மன் மகிழ்ந்தான்; அம் மலையின்மீது தோன்றினான்; ஒரு பெருந் தேரின்மேல் அமர்ந்து அசுரர்கள் சூழ்ந்து ஆரவாரிக்க, பொன்மயமான தன் வில்லை வளைத்துப் போர்க்களம் போந்தான்.

முருகவேள் போரிட வருதல் 
நாரதர் வாயிலாக நிகழ்ந்தனவெல்லாம் அறிந்த முருகப் பெருமான், அஞ்சி நின்ற வானவரை நோக்கி, "எல்லோரும் கேண்மின், இப்பொழுதே நாம் அமர்க்களம் செல்வோம்: தாரகனை வேற்படையால் தடிந்து ஒழிப்போம்; அசுரர் கோட்டையாகிய கிரவுஞ்ச கிரியையும் தகர்ப்போம்; கணப் பொழுதில் நம்முடைய வீரரையும் மீட்போம்” என்று அருளிச்செய்தார்.

முழுமதி போன்ற ஆறு முகங்களும், கருணை பொழியும் பன்னிரு கண்களும், வேலும், வேறுள்ள படைகளும் தாங்கிய அழகிய பன்னிரு கரங்களும், அணிமணித் தண்டை ஒலிக்கும் திருவடியுங்கொண்டு போர்க்களத்தில் நின்ற முருகவேளைக் கண்டான் தாரகன் என்றால், அவன் செய்த தவம் சொல்லும் தரத்ததோ? ஆணவம் பொருந்திய மனத்தையுடைய அசுரன், இங்ஙனம் ஞான முதல்வராகிய பெருமான் கொண்ட திருக்கோலத்தைக் கண்டு வியப்படைந்து, "நம்மீது போர் செய்ய வந்த இவன் கற்பனை கடந்த முழுமுதற் கடவுள்தானோ? என்று சிந்தித்தான்; இவ்வாறு நினைத்துப் பின்பு தனது நிலைமையை எண்ணினான். எவர்க்கும் மேலாகிய ஈசனிடம் தான் பெற்ற வரமும், திறமும், மற்றுமுள்ள ஏற்றமும் நினைந்து, அகங்காரம் கொண்டு, கந்தப்பெருமானை நோக்கி, "நாராயணனாகிய திருமாலுக்கும் நான்முகனாகிய பிரமனுக்கும் வெள்ளை யானையுடைய இந்திரனுக்கும் எமக்கும் போர் நிகழக் காரணம் உண்டு. சந்திரசேகரனாகிய சிவபெருமானுக்கும் எமக்கும் அமர் நிகழ காரணம் ஒன்றும் இல்லையே! அவ்வாறிருக்க, குமரா நீ இங்கு எதற்காகப் போர்க்கோலம் கொண்டு வந்தாய்?" என்று வினவினான்.

அதற்கு மாற்றம் உரைக்கக் கருதிய முருகவேள், "நீங்கள் வானவரைச் சிறையில் அடைத்து வைத்தீர்கள்! நீதி செலுத்தும் முறையில் அருள்புரிதல், தண்டித்தல் ஆகிய இரண்டும் செய்கின்ற ஈசன், உங்கள் கொடுமையை ஒழிக்கத் திருவுளம் கொண்டு எம்மை அனுப்பினார்” என்றார்.

தாரகன் கூற்று 
அம் மொழி கேட்ட தாரகன், "திருமால், கருடன் மேல் எழுந்து போர் புரிந்து என்மீது ஆழிப்படையை விட்டதும், அதனை யான் கழுத்தில் அணியாகக் கொண்டதும் நீ அறிந்திலையோ? இன்றுவரை எம்முடன் பகைத்துப் போர் செய்ய வந்தவர் யாவரும் சிறிது நேரத்தில் வீட்டினர்; அன்றி ஓடினர்; வென்றவர் யாரும் இலர்; இதை நீ கேட்டிலையோ? முன்னமே நீ போர்க்களத்திற்கு அனுப்பிய படைத்தலைவரை வென்று மலையிடை மாய்த்தேன். மேலும் பல கணங்களை ஒழித்தேன்; இவற்றை நீ உணர்ந் திலையோ? டச்சிளம் பாலனே எம்முடன் போர் செய்து துன்பும் அடையாதே சிவபெருமானிடம் செல்” என்று கூறினான். அப் போது முருகன், "வஞ்சகனே! மாயைக்கெல்லாம் இருப்பிடமாகிய இம் மலையையும் உன்னையும் கூரிய வேலாற் கொன்று விரைவில் எம் சேனையை மீட்போம்” என்று கூறிப் போர் தொடுத்தார்.

தாரகனை முருகவேள் தகர்த்தல் 
முருகவேள் விட்ட பாணங்களால் அடிபட்டு விழுந்த தாரகன், "அந்தோ சிவபெருமான் பெற்ற சிறுவன் ஒருவனோடு போர் செய்து கரம் இழந்தேன்; தந்தம் இழந்தேன்; மயக்கமுறறு விழுந்தேன். வலிய சேனையும் அழிந்தது. நான் ஒருவனே எஞ்சி நின்றேன். என் வீரம் அழகிதன்றோ?" என்றான்; அந் நிலையில் அகங்காரத்தை விட்டான்; நொடிப் பொழுது மனம் நடுங்கினான்; வியப்படைந்தான்;இவனை வெல்லுதல் அரிது போலும்!” என்று அகத்துள் எண்ணினான்; மீண்டும் வீரம் மேலிட்டு, இனிப் பரமசிவன் அளித்த பாசுபதாஸ்திரத்தை விடுவோம் என்று எண்ணி, அதனை எடுத்து, மனத்தினால் அருச்சனை புரிந்து, சீற்றத்தோடு விடுத்தான்.

அது கண்ட கந்தவேள், தந்தையை மனத்தில் நினைத்துச் செங்கரத்தினை நீட்டி அக் கொடிய அஸ்திரத்தைக் கொடுத்தவன் வாங்கிய தன்மைபோல் கருணையோடு பற்றிக்கொண்டார். பற்றிய படைக்கலத்தைத் தம்முடைய ஆயுதங்களோடு சேர்த்த முருகன் செயல் கண்டு, "இனி நமது ஆக்கம் எல்லாம் அழிந்தது என்று ஏக்கம் கொண்ட தாரகன், "பரமசிவனது பாசுபதப் படையை ட்டேன். அதனையும் எதிர்த்துப் பற்றினான். இவ் வறுமுக முதல்வனது ஆற்றலை, ஒருவர் நாவினால் உரைக்க ஒண்ணுமோ? ஆயினும், சிவனார் திருமகன் அறப்போர் புரிவானே யன்றி மாயப்போர் புரிய நினையான். ஆதலால், மறைந்து நின்று நான் மாயம் புரிவேன்" என்று மனத்தால் எண்ணினான்.