மதுரை

பாடல் 956
தனதன தனனத் தந்த தானன
தனதன தனனத் தந்த தானன
தனதன தனனத் தந்த தானன ...... தந்ததான
அலகில வுணரைக் கொன்ற தோளென
மலைதொளை யுருவச் சென்ற வேலென
அழகிய கனகத் தண்டை சூழ்வன ...... புண்டா£க
அடியென முடியிற் கொண்ட கூதள
மெனவன சரியைக் கொண்ட மார்பென
அறுமுக மெனநெக் கென்பெ லாமுரு ...... கன்புறாதோ
கலகல கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்க வாதிகள்
கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங்
கலைகளு மொழியப் பஞ்ச பூதமு
மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன
கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென்
இலகுக டலைகற் கண்டு தேனொடு
மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன்
இனிமையி னுகருற் றெம்பி ரானொரு ...... கொம்பினாலே
எழுதென மொழியப் பண்டு பாரதம்
வடகன சிகரச் செம்பொன் மேருவில்
எழுதிய பவளக் குன்று தாதையை ...... யன்றுசூழ்
வலம்வரு மளவிற் சண்ட மாருத
விசையினும் விசையுற் றெண்டி சாமுக
மகிதல மடையக் கண்டு மாசுண ...... முண்டுலாவு
மரகத கலபச் செம்புள் வாகன
மிசைவரு முருகச் சிம்பு ளேயென
மதுரையில் வழிபட் டும்ப ரார்தொழு ...... தம்பிரானே.
பாடல் 957
ராகம் - நீலாம்பரி
தாளம் - ஆதி 2 களை
(எடுப்பு - 3/4 இடம்)
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்த ...... கமரேசா
ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
ஆரணமு ரைத்த ...... குருநாதா
தானவர் குலத்தை வாள்கொடு துணித்த
சால்சதுர் மிகுத்த ...... திறல்வீரா
தாளிணைக ளுற்று மேவியப தத்தில்
வாழ்வொடு சிறக்க ...... அருள்வாயே
வானெழு புவிக்கு மாலுமய னுக்கும்
யாவரொரு வர்க்கு ...... மறியாத
மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க
மாமயில் நடத்து ...... முருகோனே
தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி
சேரமரு வுற்ற ...... திரள்தோளா
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை
வேல்கொடு தணித்த ...... பெருமாளே.
பாடல் 958
ராகம் - தேவ மனோஹரி
தாளம் - ஆதி
தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன ...... தனதான
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி ...... யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது ...... நிலவாலே
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத ...... மதுபாடி
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு ...... மருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட ...... மகிழ்வோனே
அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித ...... மணவாளா
கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு ...... மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் ...... பெருமாளே.
பாடல் 959
தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதனத் தனதான
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
ஒருத்தர் வாய்ச்சுரு ளொருவர்கை யுதவுவர்
பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர் ...... அளவளப் பதனாலே
படுக்கை வீட்டுனு ளவுஷத முதவுவர்
அணைப்பர் கார்த்திகை வருதென வுறுபொருள்
பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகென ...... அவரவர்க் குறவாயே
அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரை
முடிக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர்
அலட்டி னாற்பிணை யெருதென மயலெனு ...... நரகினிற் சுழல்வேனோ
அவத்த மாய்ச்சில படுகுழி தனில்விழும்
விபத்தை நீக்கியு னடியவ ரருடனெனை
அமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்து ...... கதிதனைத் தருவாயே
தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுள
குருக்கள் போற்சிவ நெறிதனை யடைவொடு
தகப்ப னார்க்கொரு செவிதனி லுரைசெய்த ...... முருகவித் தகவேளே
சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு ...... மருமகப் பரிவோனே
செழித்த வேற்றனை யசுரர்க ளுடலது
பிளக்க வோச்சிய பிறகம ரர்கள்பதி
செலுத்தி யீட்டிய சுரபதி மகள்தனை ...... மணமதுற் றிடுவோனே
திறத்தி னாற்பல சமணரை யெதிரெதிர்
கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடு
திருத்த மாய்ப்புகழ் மதுரையி லுறைதரும் ...... அறுமுகப் பெருமாளே.
பாடல் 960
தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன ...... தத்ததான
கீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுக
மாய வேல்விழிபு ரட்டிநகை முத்தமெழ
தேமல் மார்பினிள பொற்கிரிப ளப்பளென ...... தொங்கலாரஞ்
சேரு மோவியமெ னச்சடமி னுக்கிவெகு
வாசை நேசமும்வி ளைத்துஇடை யுற்றவரி
சேலை காலில்விழ விட்டுநடை யிட்டுமயி ...... லின்கலாபச்
சாதி யாமெனவெ ருட்டிநட மிட்டுவலை
யான பேர்தமையி ரக்கவகை யிட்டுகொடி
சாக நோய்பிணிகொ டுத்திடர்ப டுத்துவர்கள் ...... பங்கினூடே
தாவி மூழ்கிமதி கெட்டவல முற்றவனை
பாவ மானபிற விக்கடலு ழப்பவனை
தாரு லாவுபத பத்தியிலி ருத்துவது ...... மெந்தநாளோ
வாத வூரனைம தித்தொருகு ருக்களென
ஞான பாதம்வெளி யிட்டுநரி யிற்குழுவை
வாசி யாமெனந டத்துவகை யுற்றரச ...... னன்புகாண
மாடை யாடைதர பற்றிமுன கைத்துவைகை
யாறின் மீதுநட மிட்டுமணெ டுத்துமகிழ்
மாது வாணிதரு பிட்டுநுகர் பித்தனருள் ...... கந்தவேளே
வேத லோகர்பொனி லத்தர்தவ சித்தரதி
பார சீலமுனி வர்க்கமுறை யிட்டலற
வேலை யேவியவு ணக்குலமி றக்கநகை ...... கொண்டசீலா
வேத மீணகம லக்கணர்மெய் பச்சைரகு
ராம ரீணமயி லொக்கமது ரைப்பதியின்
மேவி வாழமரர் முத்தர்சிவ பத்தர்பணி ...... தம்பிரானே.
பாடல் 961
தனனத் தந்தன தந்தன தனதன
தனனத் தந்தன தந்தன தனதன
தனனத் தந்தன தந்தன தனதன ...... தனதான
புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி
யெறியக் கொங்கையி ரண்டெனு மதகரி
பொரமுத் தந்தரு மிங்கித நயவித ...... மதனாலே
புகலச் சங்கிசை கண்டம தனிலெழ
உருவச் செந்துவர் தந்தத ரமுமருள்
புதுமைத் தம்பல முஞ்சில தரவரு ...... மனதாலே
பருகித் தின்றிட லஞ்சுக மெனமன
துருகிக் குங்கும சந்தன மதிவியர்
படியச் சம்ப்ரம ரஞ்சித மருள்கல ...... வியினாலே
பலருக் குங்கடை யென்றனை யிகழவு
மயலைத் தந்தரு மங்கையர் தமைவெகு
பலமிற் கொண்டிடு வண்டனு முனதடி ...... பணிவேனோ
திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை
வரவச் சங்கொடு வந்திடு முழையுடல்
சிதறக் கண்டக வெங்கர னொடுதிரி ...... சிரனோடு
திரமிற் றங்கிய கும்பக னொருபது
தலைபெற் றும்பரை வென்றிடு மவனொடு
சிலையிற் கொன்றமு குந்தன லகமகிழ் ...... மருகோனே
மருவைத் துன்றிய பைங்குழ லுமையவள்
சிவனுக் கன்பரு ளம்பிகை கவுரிகை
மலையத் தன்தரு சங்கரி கருணைசெய் ...... முருகோனே
வடவெற் பங்கய லன்றணி குசசர
வணையிற் றங்கிய பங்கய முகதமிழ்
மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் ...... பெருமாளே.
பாடல் 962
தனன தான தானத் தனந்த
தனன தான தானத் தனந்த
தனன தான தானத் தனந்த ...... தனதான
முகமெ லாநெய் பூசித் தயங்கு
நுதலின் மீதி லேபொட் டணிந்து
முருகு மாலை யோதிக் கணிந்த ...... மடமாதர்
முதிரு மார பாரத் தனங்கள்
மிசையி லாவி யாய்நெக் கழிந்து
முடிய மாலி லேபட் டலைந்து ...... பொருள்தேடிச்
செகமெ லாமு லாவிக் கரந்து
திருட னாகி யேசற் றுழன்று
திமிர னாகி யோடிப் பறந்து ...... திரியாமல்
தெளியு ஞான மோதிக் கரைந்து
சிவபு ராண நூலிற் பயின்று
செறியு மாறு தாளைப் பரிந்து ...... தரவேணும்
அகர மாதி யாமக்ஷ ரங்க
ளவனி கால்வி ணாரப் பொடங்கி
அடைய வேக ரூபத்தி லொன்றி ...... முதலாகி
அமரர் காண வேயத்த மன்றில்
அரிவை பாட ஆடிக் கலந்த
அமல நாத னார்முற் பயந்த ...... முருகோனே
சகல வேத சாமுத்ரி யங்கள்
சமய மாறு லோகத்ர யங்கள்
தரும நீதி சேர்தத் துவங்கள் ...... தவயோகம்
தவறி லாம லாளப் பிறந்த
தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று
தவிர ஆல வாயிற் சிறந்த ...... பெருமாளே.
பாடல் 963
தானத்தன தானன தானன
தானத்தன தானன தானன
தானத்தன தானன தானன ...... தனதான
ஏலப்பனி நீரணி மாதர்கள்
கானத்தினு மேயுற வாடிடு
மீரத்தினு மேவளை சேர்கர ...... மதனாலும்
ஏமக்கிரி மீதினி லேகரு
நீலக்கய மேறிய னேரென
ஏதுற்றிடு மாதன மீதினு ...... மயலாகிச்
சோலைக்குயில் போல்மொழி யாலுமெ
தூசுற்றிடு நூலிடை யாலுமெ
தோமிற்கத லீநிக ராகிய ...... தொடையாலும்
சோமப்ரபை வீசிய மாமுக
சாலத்திலு மாகடு வேல்விழி
சூதத்தினு நானவ மேதின ...... முழல்வேனோ
ஆலப்பணி மீதினில் மாசறு
மாழிக்கிடை யேதுயில் மாதவ
னானைக்கினி தாயுத வீயருள் ...... நெடுமாயன்
ஆதித்திரு நேமியன் வாமன
னீலப்புயல் நேர்தரு மேனியன்
ஆரத்துள வார்திரு மார்பினன் ...... மருகோனே
கோலக்கய மாவுரி போர்வையர்
ஆலக்கடு வார்கள் நாயகர்
கோவிற்பொறி யால்வரு மாசுத ...... குமரேசா
கூர்முத்தமிழ் வாணர்கள் வீறிய
சீரற்புத மாநக ராகிய
கூடற்பதி மீதினில் மேவிய ...... பெருமாளே.
பாடல் 964
ராகம் - மோஹனம்
தாளம் - சதுஸ்ர ஜம்பை (7) /4 யு 0
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதான தானத் தனதான தனதான தானத் ...... தனதான
கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் ...... கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே பதிஞான வாழ்வைத் ...... தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின் மனைமேவு வாலக் ...... குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே திருவாணி கூடற் ...... பெருமாளே.
பாடல் 965
ராகம் - ஷண்முகப்ரியா
தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2)
தகதிமி-2, தகதகிட-2 1/2
தானத் தனதான தானத் ...... தனதான
நீதத் துவமாகி - நேமத் ...... துணையாகிப்
பூதத் தயவான - போதைத் ...... தருவாயே
நாதத் தொனியோனே - ஞானக் ...... கடலோனே
கோதற் றமுதானே - கூடற் ...... பெருமாளே.
பாடல் 966
தனதன தத்தந் தான தானன
தனதன தத்தந் தான தானன
தனதன தத்தந் தான தானன ...... தனதான
மனநினை சுத்தஞ் சூது காரிகள்
அமளிவி ளைக்குங் கூளி மூளிகள்
மதபல நித்தம் பாரி நாரிக ...... ளழகாக
வளைகுழை முத்தும் பூணும் வீணிகள்
விழலிகள் மெச்சுண் டாடி பாடிகள்
வரமிகு வெட்கம் போல வோடிகள் ...... தெருவூடே
குனகிகள் பக்ஷம் போல பேசிகள்
தனகிக ளிச்சம் பேசி கூசிகள்
குசலிகள் வர்க்கஞ் சூறை காரிகள் ...... பொருளாசைக்
கொளுவிக ளிஷ்டம் பாறி வீழ்பட
அருளமு தத்தின் சேரு மோர்வழி
குறிதனி லுய்த்துன் பாத மேறிட ...... அருள்தாராய்
தனதன தத்தந் தான தானன
டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு
தகுதிகு தத்தந் தீத தோதக ...... எனபேரி
தவில்முர சத்தந் தாரை பூரிகை
வளைதுடி பொற்கொம் பார சூரரை
சமர்தனில் முற்றும் பாறி நூறிட ...... விடும்வேலா
தினைவன நித்தங் காவ லாளியள்
நகைமுறை முத்தின் பாவை மான்மகள்
திகழ்பெற நித்தங் கூடி யாடிய ...... முருகோனே
திரிபுர நக்கன் பாதி மாதுறை
யழகிய சொக்கன் காதி லோர்பொருள்
செலவரு ளித்தென் கூடல்மேவிய ...... பெருமாளே.
பாடல் 967
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ...... தனதான
முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
மொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும்
முக்கணிறை வாக்குமருள் வைத்தமுரு கக்கடவுள்
முப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி
பத்துமுடி தத்தும்வகை யுற்றகணை விட்டஅரி
பற்குனனை வெற்றிபெற ...... ரத்முரும்
பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்
பத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
தெய்த்ததென தெய்தததென ...... தெனனான
திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும்
அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ
சித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா
அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள
ரற்கனக பத்மபுரி ...... பெருமாளே.
பாடல் 1327
தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா
சைவமுதற் குருவாயே சமணர்களைத் ...... தெறுவோனே
பொய்யர்உளத் தணுகானே புனிதவருட் ...... புரிவாயே
கையின்மிசைக் கதிர்வேலா கடிகமழற் ...... புதநீபா
தெய்வசற் குருநாதா திருமதுரைப் ...... பெருமாளே.