மல்யுத்தம்

மல்யுத்த வீரன் ஒருவன் ஒரு டீக்கடைக்காரரிடம் எப்போதும் டீ குடிப்பான். ஒரு முறை டீ கடைக்காரருக்கும், மல்யுத்த வீரனுக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது மல்யுத்த வீரன் டீ கடைக்காரரை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான். அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் அது பெரும் அவமானமாக கருதுவர். அதனால் டீ கடை காரன் ஒப்பு கொண்டான். ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்து கொண்டு இருந்தான்.
இந்த மல்யுத்த சண்டையில் வெற்றி பெற எண்ணி சில அறிவுரைகளைக் கேட்க டீக்கடைக்காரன் ஒரு ஜென் துறவியிடம் சென்றான்.
அவனது கதை முழுவதையும் கேட்ட ஜென் துறவி, அவனிடம் சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என்று கேட்டார். 30 நாட்கள் என்றான் அவன்.
இப்போது நீ என்ன செய்கிறாய்? என்று கேட்டார். எனது டீக்கடையில் டீ போட்டுத்தரும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன் என்றான் அவன்.
அவனிடம் அந்த வேலையையே தொடர்ந்து செய்து கொண்டிரு என்றார் துறவி. ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரர் இன்னும் ஈடுபாட்டுடன், இன்னும் வேகமாய் டீ ஆற்று என்றார் ஜென் துறவி.
இரண்டு வாரம் ஆனது அப்போதும் அதே அறிவுரை... போட்டி நாள் அருகில் வந்து விட்டது. டீ கடை காரர் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான்.
போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு என்றார் துறவி. மல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான். வா முதலில் டீ சாப்பிடு என்றான் கடைக்காரன்.
சரி என்று அமர்ந்தான் வீரன். டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான். இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்.
ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷியத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என்று மனதுக்குள் எண்ணியவன் போட்டியே வேண்டாம் எனக் கூறிவிட்டுச் சென்று விடுகிறான்.