மூடு பனி ஆத்துவேனோ

bookmark

அவள் கணவன் இறந்து போனான். அவன் இருந்த வரை அவள் சந்தோஷமாக அவனோடு வாழ்க்கை நடத்தினாள். அத்தகைய வாழ்க்கையைத் தந்த அவள் கணவன் முத்து மலை, பவள மலை என்று கற்பனை செய்து பின் அந்த முத்து மலை, பவள மலைகளை கஷ்டம் என்னும் மூடுபனி மறைத்ததைப் போன்று அவள் கணவனும் மரணம் என்னும் மூடு பனியால் மறைக்கப்பட்டு விட்டான், மூடுபனி ஒரு காலம் விலகிவிடும். ஆனால் இறந்த கணவனை அவள் திரும்பக் காண்பாளா காணத்தான் முடியுமா?

முத்து மலை மேலே
மூடு பனி பேயுதுங்க
முத்தப்பெருக்கு வேனோ-நான்
மூடு பனி ஆத்து வேனோ?
பவள மலை மேலே
பாடு பனி பேயுதுங்க
பவளத்தைப் பெருக்குவேனோ-நான்
பாடு பனி ஆத்துவேனோ?

சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
-------------------