துதி மாலை 801 - 900

31 . பகலில் மேகத்தாலும் இரவு முழுவதும் நெருப்பின் ஒளியாலும் வழி நடத்தினீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 102 : 28

32 . பாலை நிலத்தில் பாறைகளைப் பிளந்து பொங்கிவழிகின்ற நீரைப் பருகச் செய்தீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 103 : 17

33 . மாராவின் கசப்பான தண்ணீரை சுவையான தண்ணீராய் மாற்றினீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 103 : 17

34 . வான தூதர்களின் உணவை மானிடர்க்கு அளித்தீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 103 : 11

35 . பார்வோனையும் அவன் படைகளையும் செங்கடலில் மூழ்கடித்தவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 103 : 13

36 . எரிக்கோ மதிலை இடித்தவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 103 : 10

37 . கழுதையின் வாயைத் திறந்து பேச வைத்தீரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 103 : 12

38 . கதிரவனை கிபயோனிலும் நிலவை அய்யலோனிலும் அசையாது நீற்க்ச் செய்தவரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 26 : 12

39 . ஆறுகளைப் பாலை நிலமாகவும் நீரோடைகளை வறண்ட தரையாகவும் மாற்றுபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 68 : 35

40 . பாலை நிலத்தை நீர்த்தடாகமாக மாற்றுபவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 29 : 11