துதி மாலை 901 - 1000
91 . நான் உனக்கு முன்னே சென்று குன்றுகள் சமப்படுத்துவேன் செப்புக் கதவுகளை உடைத்து இரும்புத் தாழ்பாள்களைத் தகர்ப்பேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
92 . நீர் நிலைகள் வழியாக நீ செல்லும் போது நான் உன்னோடு இருப்பேன் உம்மை துதிக்கிறோம்
93 . தியில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட்ட மாட்டாய் நெருப்பு உன் மேல் பற்றி எரியாது என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
94 . நீ பல்வேறு இனத்தார்க்கும் கடன் கொடுப்பாய் நீயோ கடன் வாங்கமாட்டாய் உம்மை துதிக்கிறோம்
95 . நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும் தம் நன்மைகளின் கருவுலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
96 . ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரே அன்றி கடையனாக ஆக்கமாட்டார் நீ உயர் வாயேயன்றி தாழ்ந்து போக மாட்டாய் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
97 . நானே ஆண்டவர் என்பதையும் எனக்காக காத்திருப்போர் வெட்கமடையார் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
98 . ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கைக் கொள்ளும் அப்பொழுது நீரும் உன் வீட்டாரும் மீட்படைவீர் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
99 . அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் எண் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்
100 . இதோ நான் விரைவில் வருகிறேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்